Home/Temples/TN/Chengalpattu/Arulmigu Devanatha Perumal Temple, Chettipuniyam - 603204
Heritage Templehrce

Arulmigu Devanatha Perumal Temple, Chettipuniyam - 603204

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம்

🕉️ வரதராஜ பெருமாள் Chengalpattu, TN
Arulmigu Devanatha Perumal Temple, Chettipuniyam - 603204 — image 1
1 / 4
Also known as:ஹயக்ரீவர் கோயில்

History & Architecture

Century

17th நூற்றாண்டு

Praised By

இல்லை

Agama Tradition

வைகாணசம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

இதர விமானம்

Sacred Tree (Sthalavriksha)

ஏர் அழிஞ்சல்

Pooja Timings

காலசந்தி பூஜை08:30 AM to 09:30 AM IST
சாயரட்சை பூஜை06:45 PM to 07:15 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ வித்ய அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை (பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாவணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி ) நடைபெறுவது வழக்கம். இத்திருக்கோயிலில் கல்வி அதிபதி யோக ஹாயக்கிரிவர் தரிசனம் செய்வது சிறப்பாகும்.

பிரார்த்தனை

மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் சரஸ்வதி தேவியிடம் இருந்து 64 கலைகளையும் பறித்து பாதாளத்தில் மறைத்து வைத்தார்கள் பிறகு பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதால் மகாவிஷ்ணு குதிரை முகம் கொண்டு பறிமுகப்பெருமாளாக ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து நான்கு வேதங்களையும் 64 கலைகளையும் மீட்டளித்ததால் இவ்விருவருக்கும் ஹயக்ரீவர் பெருமாள் குருவாக விளங்குகிறார். திருக்கோவிலில் எழுந்தருளிக்கும் இத்தகைய சிறப்பு கொண்ட ஹயக்ரிவர் சங்கு சக்கரம் ஆகிய நான்கு கரங்களுடன் யோக நிலையில் சேவை சாதிப்பது மேலும் தனி சிறப்பாகும் இவரை புதன் வியாழன் மற்றும் திருவோணம் ஆகிய தினங்களில் வழிபட்டால் கல்வி ஞாபகத்திறன் மற்றும் பேச்சாற்றல் ஆகியவை அதிகரிக்கும். இந்த ஹயக்ரீவர் பெருமாளை 13 வாரம் புதன்கிழமையில் வணங்கி 2 முறை வலம்வர கல்வி திறன் மேம்படும். பேச்சுத் திறன் அற்றவர்கள் இந்த ஹயக்ரீவப் பெருமாளுக்கு தேன் நிவேதனம் செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பருகி வர பேச்சாற்றல் பெறுவார்கள்.

Sub Shrines

கோதாண்டாராமர் சன்னதி

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனிடம் திவானாக பணியாற்றிய முடும்பை ராமசுவாமி ஐயங்காரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த அரண்மனையில் இருந்த ராமர், சீதை,லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளை அவருக்கு அளித்தார். அவர்தம் சொந்த கிராமமாகிய செட்டிப்புண்ணியம் கிராமத்தில் சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூர்த்திகளை ப்ரதிஷ்டை செய்தார் அன்று முதல் இந்த மூர்த்திகள் இத்திருக்கோயில் உபசன்னதியில் அருள்பாலிக்கின்றார்கள் ராமாயணத்தில் ராமபிரான் தாடகை என்ற அரக்கியை வதம் செய்த போது அவருக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க விஸ்வாமித்திர முனிவரால் ராமபிரானின் வலது கணுக்காலில் கங்கணம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராமபிரான் திருமேனியின் வலது கணுக்காலில் அதுபோன்ற கங்கணம் இருப்பது தனிச்சிறப்பாகும் அதனால் இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ராமபிரானை தரிசித்தால் கண் திருஷ்டி விலகும்.

Services

நன்கொடை

இந்த திருக்கோயிலில் பக்தர்களுக்கு வசதியாக நன்கொடை வழங்க நன்கொடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

அன்னதானம்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சர் ஆணைப்படி 14.01.2006 முதல் அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது.தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இச்சேவை கட்டணமாக 1750 செலுத்தும் பட்சத்தில் அவர்கள் விரும்பும் ஒரு நாள் அவர்களுடய உபயமாக வழங்கப்படும். மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ரூ.40.000 செலுத்தி தாங்களின் பிறந்த நாள் (அல்லது) மற்றும் அவர் அவர் விருப்பத்திற்க்குரிய வருடத்தில் ஒரு நாள்அவர்களுடைய உபயமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது

Facilities

கழிவறை வசதி

திருக்கோயில் வெளிப்புறம் ஆண் பெண் இருபாலருக்கும் தனி கழிவறை வசதி உள்ளது.

குளியல் அறை வசதி

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்க்கு வசதியாக ஆண்களுக்கு 1 குளியளறையும் பெண்களுக்கு 1 குளியளறை வசதி உள்ளது.

More Temples Nearby

View all →