அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் கோயில்

Century
11th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
இல்லை
Agama Tradition
வைகாணசம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
இதர விமானம்
இத்திருக்கோயில் சிறந்த தொரு பிரார்த்தனை தலமுமாகும். உக்ர நரஸிம்மனாக மூன்று கண்களுடன் (த்ரிநேத்திரம்) பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். திருமணம் ஆகாதவர்கள், வாரத்தில் ஒரு நாள் வீதம், ஐந்து வாரங்கள் எம்பெருமான் த்ரிநேத்திரம் தரிசனம் செய்து, ஒன்பது தடவை கிரிவலம் வந்தால் விரைவில் கல்யாண பிராப்த்தி கிடைக்கிறது. மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீ நரசிம்ம பெருமாளையும் ஸ்ரீ அகோபிலவல்லி தாயாரையும் தரிசனம் செய்து, கிரிவலம் வந்து, தொட்டில் வாங்கி கிரிபிரதக்ஷினத்தில் உள்ள அழிஞ்சல் மரத்தில் கட்டினால் ஸத்ஸந்தான பிராப்தி அமைகிறது.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில்
திருக்குளத்தில் மாசி மாதம் 5நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
திருக்கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் ரூ.50/- க்கு மேல் இணைவழி மூலம் அளித்திடலாம்.
பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 14.01.2005-ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது .அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 ஜி வரிவிலக்கு இத்திருக்கோயிலிருந்து அளிக்கப்படும். நாள் தோறும் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . அன்னதானம் அனுமதி சீட்டு 12.00 முதல் வழங்கப்படுகிறது.அன்னதானம் நண்பகல் 12.15 மணி முதல் 12.45 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் திட்டம் திருக்கோயில் நிதிலிருந்தும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்த நாள், திருமண நாள் முதலிய நாட்கள் மீதம் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அன்னதானம் பதிவு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலி இங்கு உள்ளது
காலனி பாதுகாப்பு இடம் திருக்கோயில் முன்பக்கம் வலதுபுறம் அமைந்துள்ளது.
திருக்கோயில் வலது புறம் ஆண்கள் மற்றும் பெண்கள் குளியல் அறை உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பயன்படும் வண்ணம் திருக்கோயில் அன்னதானக்கூடம் முன்பக்கம் இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது .




