Home/Temples/TN/Chengalpattu/Arulmigu Vedagireeswarar Temple, Thirukkalukkundram - 603109
hrce

Arulmigu Vedagireeswarar Temple, Thirukkalukkundram - 603109

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம்

🕉️ வேதகிரீஸ்வரர் Chengalpattu, TN
Arulmigu Vedagireeswarar Temple, Thirukkalukkundram - 603109 — image 1
1 / 4
Also known as:கன்னிராசி பரிகாரத்தலம்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Praised By

சைவ நால்வர்

Poet Saint

மாணிக்கவாசகர்

Agama Tradition

காமிக ஆகமம்

Vimanam Type

ஏக தள விமானம்

Pooja Timings

காலசந்தி பூஜை08:00 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை10:30 AM to 11:00 AM IST
சாயரட்சை பூஜை05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை07:30 PM to 08:00 PM IST

Temple Speciality

பரிகாரம்

தல வரலாறு - இத்தலம் சிவ நெறியாளர்களுக்கு முதன்மையான புகழ்மிக்க பெரிய தலமாகும். சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டிணத்தார், அருணகிரிநாதர், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் அந்தகக் கவி வீரராகவ முதலியார், இராலிங்க அடிகளார் மற்றும் பல அருளாளர்களால் பாடல்பெற்ற தொண்டை நாட்டில் தேவாரம் பெற்ற முப்பத்திரண்டு சிவ தலங்களுள் முதன்மையான திருத்தலமாகும். நான்கு வேதங்கள் மலையுருவமாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. இத்திக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் அதாவது கி.பி.610-640-ல் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும். கழுகு முனிவர்கள் வரலாறு - நான்காவது கலியுக கால துவக்கத்தில் பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெசிய இறைவன் அவர்கள் முன் தோனிற சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க மறுத்த முனிவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை கழுகு வடிவமாக மாற சபித்தார். முனிவர்கள் இருவரும் தமது தவற்றை உணர்ந்து தங்களை மன்னித்தருள இறைவனிடம் வேண்டினர். இணைவன் நீங்கள் காசிப முனிவரிடத்தில் இரு கழுகுகளாக பிறந்து திருக்கழுக்குன்றம் மலைமீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரரை தினமும் வழிபடுங்கள் கலியுக முடிவில் சுய உருவம் பெற்று முக்தி அடைவீர்கள் என சாப விமோசனத்திற்கு வழியும் கூறி அருளினார். திருமலை வலம் வரும் பெருமை - கொடிய நோய் உள்ளவர்களும், மருத்துவர்களால் கைவிடப்ட்டடவர்களும், திருமலையைச் சுற்றி ஒரு மண்டலத்திற்கு வலம் வந்தால், நோய்கள் தீர்ந்து விடுவது இன்றளவும் நடந்து வருகின்றது. அதே போன்று மகப்பேறு இல்லாதவர்களும் ஒரு மண்டலம் திருமலையை சுற்றி வலம் வந்தால், மகப்பேறு உண்டாகும் அவ்வாறு பிறந்தவர்தான் சுவாமியின் பெயரான வேதாசம் என பெயர் வைத்து பின் மறைமலையடிகளார் என மாற்றிக்கொண்ட அடிகளார் ஆகும், தற்போது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அருள்மிகு திரிபுரசுந்தரி - திருமலையின் அடிவாரத்தில் தாழக்கோயில் என வழங்கப்பெறும் தலத்தில் எந்தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி தன்னை நாடி வேண்டுபவருக்கு வேண்டிய வரங்கள் வழங்கி அருள்பாலித்து வருகின்றார். அம்மன் அஷ்ட கந்த திருமேனியை கொண்டதால், ஆண்டில் மூன்று முறை மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது, மற்றைய தினங்களில் திருபாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. தீர்த்தம் - இத்தலத்தில் உள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மார்கண்டய என்கிற மகரிஷி எல்லா சிவ தலங்களை வழிபட்டு, திருக்கழுக்குன்றத்திலுள்ள சிவனை பூஜிக்க பாத்திரம் இல்லாததால், இறைவனை நோக்கி தவம் செய்ய புனித குளத்தில் புனித சங்கு ஒன்று தோன்றுகிறது. அதுமுதல் இத்தீர்த்தம் சங்கு தீர்த்தம் என்ற திருநாமத்தினால் அழைக்கப்படுகிறது. மேலும் இப்புனித குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கன்னி இராசியில் பிரவேசிக்கும் தினத்தன்று சங்கு தீர்த்த புஷ்கர மேளா - இலட்சதீபப்பெருவிழா நடைபெறும், இத்தலம் கன்னி இராசி பரிகார தலமாகும். திருக்கோயில் அமைவிடம் - திருக்கழுக்குன்றம் எனும் புனிதத்தலம் தமிழ்நாட்டில், செங்கல்பட்டிற்கு தென்கிழக்கே செங்கல்பட்டு- கல்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு- மாமல்லபுரம் நெடுங்சாலையில் 14-வது கி.மீ தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Sub Shrines

அருள்மிகு நடராஜர் சன்னதி

பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தினை குறிக்கும்

சோமாஸ்கந்தர் சன்னதி

தனி சன்னதியாக சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது.

அருள்மிகு வண்டுவன விநாயகர் சன்னதி

இத்திருக்கோயிலில் முதன்மையான அருள்மிகு வண்டுவன விநாயகர் சன்னதி விளங்குகிறது. விழாக்காலங்களில் மற்றும் விஷேச காலங்களில் இந்த விநாயகருக்கு பூஜை செய்யப்பட்ட பிறகே மற்ற பூஜைகள் செய்யப்படுகிறது.

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் மூலவர் அஷ்ட கந்தம் என்கிற 8 விதமான மூலிகையால் ஆன திருமேனியாகும். மூலவர் அம்மன் ஆண்டுக்கு மூன்று முறை (ஆடிமாதம் உத்திரம், நவராத்திரி தசமி, பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்கள் ) மட்டும் முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

அருள்மிகு அருணாசலேஸ்வரர் சன்னதி

பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலத்தினை குறிக்கும்.

அருள்மிகு ஆறுமுக சன்னதி

அருள்மிகு முருகப்பெருமாளுக்கு தனி சன்னதியாகவும், ஆறுமுகம் கொண்ட அழகான முக பாவனை கொண்டுள்ளது.

அருள்மிகு பிரதஷ்ட வேதகிரீஸ்வரர் சன்னதி

பிரதஷ்ட வேதகிரீஸ்வரர் (மேற்கு முகம்)

அருள்மிகு ஏகாம்பரநாதர் சன்னதி

பஞ்ச பூத ஸ்தலத்தில் (மண்) அருள்மிகு ஏகாம்பரநாதர் சன்னதி உள்ளது.

ஆத்மநாதர் சன்னதி

ஆவுடையார் கோயில்

அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சன்னதி

அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சன்னதி கஜா ப்ருஷ்டம் விமான வடிவம் கொண்டது.

அருள்மிகு திருகாளத்தி நாதர் சன்னதி

பஞ்ச பூத தலமாங்களில் வாயு தலத்தினை குறிக்கும் சன்னதியாக உள்ளது.

அருள்மிகு மாணிக்கவாசகர் சன்னதி

அருள்மிகு மாணிக்கவாசகர் சன்னதி

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் சன்னதி

பஞ்ச பூதங்களில் நீருக்கான தலமாக விளங்குகிறது.

Temple Tank

பிரம்ம தீர்த்தம் (தேரடி குளம்)

திருக்கோயிலுக்குச் சொந்தமான குளமாகும்.

ரிஷப தீர்த்தம்

இத்திருக்குளத்தின் பெயர் ரிஷப (நந்தி) தீர்த்தமாகும். ஏனென்றால் குளத்தின் கரையில் ரிஷபம் வீற்றிருப்பதால், ரிஷப தீர்த்தம் என பெயர் பெற்றது. பிரம்மோற்சவத்தில் 10 நடராஜர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.

சங்கு தீர்த்தம்

இத்தீர்த்த குளத்தின் பெயர் சங்கு தீர்த்தமாகும். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தீர்த்த குளத்தில் புனித சங்கு (தோன்றும்) பிறக்கும்.

Wall Paintings

16 கால் மண்டபம்

16 கால் மண்டபத்தில் உள்ள பழமையான மூலிகை ஒவியம்

சுவரோவியம்

இத்திருக்கோயிலின் 16 கால் மண்டபத்தில் மேல் பகுதியில் மூலிகை கொண்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

சுவரோவியம்

திருக்கோயில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபத்தின் சுவரோவியம்

Sculptures

மனுநீதி சோழன் சிற்பம்

மனு நீதி சோழனின் நீதி செயலில் சிற்பம்

கழுகு சிவ லிங்கத்தை வணங்கும் சிற்பம்

கழுகு சிவ லிங்கத்தை வணங்கும் சிற்பம்

100 கால் மண்டபம்

கலைநயமிக்க சிற்ப தூண்களுடன் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 100 கால் மண்டபம்

ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன்

ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன்

சரபேஸ்வரர் சிற்பம்

மிகவும் அரிதாக உள்ள சரபேஸ்வரர் சிற்பம் (16 கால் மண்டபத்தில் உள்ளது)

முனிவர்கள் கழுகாக வணங்குதல்

சாபம் பெற்ற முனிவர்கள் கழுகாக வணங்குதல்

16 தூண் மண்டபம்

கலைநயமிக்க சிற்பங்களுடன் மேல் பகுதியில் மூலிகை ஓவியம் வரையப்பட்ட 16 கால் மண்டபம்

100 கால் மண்டபம் மேற்கூரை கூடும் காட்சி சிற்பம்

100 கால் மண்டபம் மேற்கூரை கூடும் காட்சி சிற்பம்

Services

அன்னதானம்

தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க அன்னதானம் நன்கொடை ரூ.2000/- ஆகும். கட்டளை அன்னதானம் நன்கொடை முதலீடு ரூ.50000/- மற்றும் அன்னதான நன்கொடைக்கு 80 ஜி - கீழ் வருமான வரிவிலக்கு உள்ளது.

நன்கொடை

இந்த நன்கொடையானது கோயிலுக்கு வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், கோயிலின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

-

கழிவறை வசதி

திருக்கோயில் வரும் பக்தர்களின் வசதியாக மூன்று கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது

சக்கர நாற்காலி

-

துலாபாரம் வசதி

துலாபாரம் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

More Temples Nearby

View all →