
Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
இல்லை
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
கஜாப்ப்ருஷ்டம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
இத்திருக்கோயிலுக்கு ஆடி மாதம் 5 செவ்வாய்க்கிழமைகளில் வந்து விளக்கேற்றி அர்ச்சனை செய்து அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமியை வழிபட்டால் செவ்வாய் தோஷம், நாக தோஷம் மற்றும் திருமண தடைகள் நீங்கப் பெறுவது இத்தல சிறப்பாகும்.
ஆடி மாத செவ்வாய் கிழமை வாரங்களும் ஸ்வாமியை தரிசனம் செய்து விளக்கேற்றி அர்ச்சனை செய்வோருக்கு செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் திருமண தடை குழந்தைப்பேறு தடைகளை நீங்கப்பெறுவதை இன்றும் காணலாம் என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு
இத்திருக்கோயிலில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம்.
அன்னதானம்: அன்னதானம் சிறந்த தானம் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் மார்ச் 23, 2002 அன்று தொடங்கியது அன்னதானம் வாரத்தின் ஏழு நாள் ஞாயிறு முதல் சனி வரை 50 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.35000/-(ஒரு லட்சம் முப்பத்தைந்து ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் வங்கி கணக்கு எண்.0918101036879 வங்கி கிளை - கனரா வங்கி, வில்லிவாக்கம், சென்னை-49. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.1750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு.
திருக்கோயிலுக்கு பக்தர்களின் காலணிகள் பாதுகாப்பு வசதி திருக்கோயில் கோபுரம் வாசலுக்கு முன் இடது புறம் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் முன்புறம் உள்ள காலியிடம் வாகனங்களை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருநாளில் 7ம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும்.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடங்களில் குடிநீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.





