Home/Temples/TN/Chennai/Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004
Heritage Templehrce

Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை

🕉️ அருள்மிகு கபாலீசுவரர் Chennai, TN அருள்மிகு கற்பகாம்பாள்
Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004 — image 1
1 / 10

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பல்லவர்

Praised By

தி௫ஞானசம்பந்தா்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

மூன்று நிலை விமானம்

Sacred Tree (Sthalavriksha)

புன்னை மரம்

Pooja Timings

கோ பூஜை (பூ மாலை, குங்குமம் மற்றும் சந்தனம்)05:30 AM to 06:00 AM IST
வைகறை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)06:00 AM to 07:00 AM IST
காலசந்தி பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)08:00 AM to 09:30 PM IST
உச்சிக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)11:00 AM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)04:00 PM to 06:30 PM IST
உஷக்கால பூஜை06:30 PM to 07:00 PM IST
அர்த்தஜாம பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)09:00 PM to 09:30 PM IST

Temple Speciality

புராதனம்

எட்டாம் நாள் திருவிழா. அறுபத்து மூவர் திருவிழா சிவநேசருடன் திருஞானசம்பந்தர் மேற்கு மாட வீதிக்குளக்கரைக்கு எதிரில் திருமஞ்சனத்திற்கு எழுந்தருளுவார். பகலில் சிவநேசருக்கும் சம்பந்தருக்கும் மகா அபிடேகம் நடைபெறும். பிற்பகல் இரண்டு மணிக்குச் சிவநேசர் சம்பந்தருடன் கோயிலுக்கு எழுந்தருளி இறைவனிடம் உத்தரவு பெற்று மறுபடியும் குளக்கரையில் 11.30 மணிக்கு அங்கம்பூம்பாவையின் எலும்பைக் குடத்துடன் எழுந்தருளச் செய்து யாவரும் கண்டுகளிக்க திருஞானசம்பந்தரின் மட்டிட்ட என்று தொடங்கும் பதிகத்தையும் பாடி எலும்மைப் பெண்ணுருவாக்கி மண்டகப்படி நடத்துவர். பிறகு மாட வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபம் சேருவர். அப்போது 3.30 மணிக்கு இவ்விழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவின்போது பொதுமக்கள் பலர் தாமாகவே முன்வந்து நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்குவர.ச் கபாலசுவரர், பஞ்சமூர்த்திகளுடனும் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் காட்சி கொடுத்தருளும் ஐதீகம் நடைபெறும். பின்பு வீதி வலம் வந்து பதினாறு கால் மணட்பத்தில் தீபாராதனையும் அறுபத்து மூன்று நாயன்மார் வலம் வரும் காட்சியும் நடைபெறும். இரவில் சந்திரசேகர சுவாமி குதிரை வாகனத்தின் மீது பரிவேட்டை உற்சவம், பரிவேட்டை மண்டபத்தில் மண்டகப்படி முடிந்து இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கபாலசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உற்சவம் நடைபெறும்.

வரலாற்று சிறப்பு

கோயிலுக்குப் பின்னால் ஒரு புராணக்கதை உள்ளது. கபாலி கோயிலில் உள்ள சிங்காரவேலர் சன்னதி தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகப் பெருமான் இங்கு நீராடி, பார்வதி மற்றும் பரமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்தார். இருவரும் இக்கோயிலில் முருகர் முன் தோன்றி சக்தி வேல் கொடுத்தனர். சூரபத்மனின் அனைத்து தீய சக்திகளையும் வெல்வதற்கு முருகன் வேல் (ஈட்டி) பயன்படுத்தினார். தான் கொல்லப்படுவேன் என்பதை அறிந்த அரக்கன் தன்னை மாமரமாக மாற்றிக்கொண்டான். முருகர் வேல் எறிந்து மரத்தை இரண்டாகப் பிளந்தார். ஒன்று சேவல் (சேவல்) ஆகவும், மற்றொன்று மயில் (மயில்) ஆகவும் மாறுகிறது. மேலும் ஒரு சேவல் அவரது போர்க் கொடியின் சின்னமாக மாறியது. அதன் பிறகு, முருகன் தேவசேனாவையும் வள்ளியையும் மணந்தார். இந்தச் சம்பவத்தை ஒரு குட்டி நாய்க்குட்டியில் தரும் வசனம் இதோ எத்தலத்தின் ஏலாறு சாதிவேர் பெற்றி யாதுலர் பயருக்கு என நாம் வெற்றி பெற்ற சிங்கார வேலவன் நூற்ற நாம் முயர்த்தி தந்த தாளம் முருகப் பெருமானுக்கு சிங்காரவேலர் என்ற பட்டம் எப்படி வந்தது என்பதை இப்பாடல் விளக்குகிறது. சிங்காரவேலர் சன்னதி 64 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சன்னதியில் சிங்காரவேலவர், வள்ளி, தேவசேனா உருவங்கள் உள்ளன. இங்கு சிங்காரவேலர் மயிலின் மீதும், மனைவியர் யானை மீதும் அமர்ந்துள்ளனர். இது உலகில் மிகவும் தனித்துவமானது. இங்கு சிங்காரவேலர் சண்முகராக காட்சியளிக்கிறார். சன்னதிக்கு முன்னால் தனி கொடிமரம் உள்ளது.

பிரார்த்தனை

காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இத்திருக்கோயிலில் தினமும் காலை மாலையில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. வாரந்தோறும், திங்கள், செவ்வாய், சனிக்கிழமை ஆகிய நாட்களில் சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு தமிழிலும், சமஸ்கிருதத்திலும் அர்ச்சனைகள் செய்யப்பெற்று வருகின்றது . இத்திருக்கோயிலில் பிரதோஷம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பிரதோஷ வழிபாடு : திங்கள் இருமுறை திரயோதசி திதியில் சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம், பிரதோஷ உற்சவம் நடைபெறும். சனிப்பிரதோஷம் முக்கியமாக கருதப்படுகிறது. பிரதோஷத்தன்று மாலையில் மூலலிங்க மூர்த்திக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி பிரதோஷ நாயகரை இடபவாகனத்தில் ஏற்றி கோயில் பிரகாரத்தில் மும்முறை வலம் வந்து அம்பாள் எதிரில் உள்ள மண்டபத்தில் தீபாரதனை செய்யப்படுகிறது.

Temple Tank

கபாலி தீர்த்தம்

திருக்குளத்தின் பெயர் கபாலி தீர்த்தம் கபாலி தீர்த்தம் (தெப்பக்குளம்) கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் கிழக்குப்பகுதியில் இராஜகோபுரம் உள்ளது. இது 120 அடி உயரம் ஏழு தளங்களும், ஒன்பது கலசங்களும் கொண்டுள்ளது. தெப்ப உற்சவம் தை மாத பௌர்ணமி தினத்தை முதலாக கொண்டு மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். திருக்குளத்தின் விவரம் - இத்திருக்கோயிலின் வெளிப்புறத்தில் திருக்குளம் ஒன்று உள்ளது. அதற்குக் கபாலி தீர்த்தம் என்று பெயர். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதப் பௌர்ணமி தினத்தை முதலாகக் கொண்டு மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.-

Sculptures

பகவான் கிருஷ்ணர்

கிருஷ்ணரின் உருவம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மற்றும் இசையின் மெல்லிசையில் பசு ஓய்வெடுக்கும் போது புல்லாங்குழல் வாசிக்கும் மகிழ்ச்சியான வெளிப்பாடு

சிவசுரியன்

பாறைத் தூணில் செதுக்கப்பட்ட சிவசூரியன்.

சித்தர்

தாந்த்ரீக யோக நிலையில் சித்தர்

சரஸ்வதி

சரஸ்வதி வீணை வாசிக்கிறார், சோழர் காலத்தில் திடமான ரேக் தூணில் மிகவும் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளார்

மஹிஷாசூரமந்தினி

பார்வதி தன் கால்களை எருமையின் தலையில் வைத்துள்ளார். வலது கையில் கத்தி, திரிசூலம், வட்டு, தடி, இடது கைகளில் வாள், சங்கு, கோடாரி ஆகிய ஆயுதங்களுடன் பார்வதி காணப்படுகிறார்.

Services

திருப்பணி

2017-2018 திருப்பணி விபரம் ஏதும் இல்லை

நன்கொடை

நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது

அன்னதானம்

அன்னதானம்: அன்னதானம் சிறந்த தானம் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானத் திட்டம் மார்ச் 23, 2002 அன்று தொடங்கியது அன்னதானம் திங்கள் முதல் வியாழன் வரை 150 நபர்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வடை பாயசத்துடன் 200 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.100000/-(ஒரு லட்சம் ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் வங்கி கணக்கு எண்.456956591 வங்கி கிளை - இந்தியன் வங்கி, மயிலாப்பூர், சென்னை-4. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 150 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.5,250/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். ஒருநாள் 200 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.7,000/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு.

Facilities

தங்கத் தேர்

வசதிகள் விவரம் - இத்திருக்கோயிலில் தங்கரதம் ஒன்று திருக்கோயில் உட்புறத்தில் வாகன பாதுகாப்பு மையத்தில் உள்ளது. சேவார்த்திகள் ரூ.1501/- கட்டணம் செலுத்தி தங்கரத உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர். (நேரம் மாலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை)

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

காற்றிலிருந்து குடிநீர் திட்டத்தில் நிறுவப்பட்ட தொட்டியில் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து ஒரு நாளைக்கு வரப்பெறும் 150 லிட்டர் தண்ணீர் மூலம் பொது மக்கள் பயன் அடைகின்றனர். இதில் 2 கம்ப்ரசர் உள்ளது மற்றும் பக்தர்கள் சூடான மற்றும் குளிர்ந்த நீரை குடிக்கலாம்.

சக்கர நாற்காலி

திருக்கோயில் உட்புறத்தில் நுழைவு வாயிலில் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக 5 சக்கர நாற்காலிகள் உள்ளன.

குளியல் அறை வசதி

இத்திருக்கோயிலின் வெளிப்புறத்தில் இராஜகோபுரத்திற்கு பகுதியில் ஆண்களுக்கு இரண்டு கழிவறைகள், பெண்களுக்கு இரு கழிவறைகள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

சூரிய மின்சக்தி

சோலார் லைட் - 25 வாட்ஸ் இத்திருக்கோயிலில் 16-5-2022 அன்று தொடங்கப்பட்டது, குறைந்த பராமரிப்பு மற்றும் அதிக சக்தி திறன் உடையது.

கல்யாண மண்டபம்

அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபம் நெ.1, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. சென்னை-4, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான புதிய திருமண மண்டபம், சென்னை-28, ஆர்.ஏ.புரம், எண்.1, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் 2.447 ஏக்கர் (44 கிரவுண்ட் 994 ச.அடி) பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திருமண மண்டபத்தில் தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் அமைந்துள்ளன. முதல் தளத்தில் 1000 இருக்கைகள் கொண்ட திருமண நிகழ்ச்சி அறையும், 80 இருக்கைகள் கொண்ட முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்தும் இடம் அமைந்துள்ளது. தரைத் தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் இடம் அமைந்துள்ளது. 63 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 63 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் உள்ளன. சென்னை மாநகரத்தில், அனைத்து வசதிகளும் கூடிய அதிநவீன திருமண மண்டபம் ஆக இப்புதிய திருமண மண்டபம் உருவாகியுள்ளது. இத்திருமண மண்டபத்தில், திருமணம், சுப நிகழ்ச்சிகள் மற்றும் கூட்ட அரங்குகள் போன்றவைகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்திருமண மண்டபத்தின் சிறப்பாக, மண்டபத்தின் முதல் தளத்திற்கு நேரடியாக வாகனம் மூலமும் செல்வதற்கு ஓடு சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் திறந்தவெளி புல் வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் அருகில் விநாயகர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புகளுடன் விளங்கும் இத்திருமண மண்டபத்தினை, 10.01.2019 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி மூலமாக திறப்பு விழா செய்யப்பட்டு சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

நூலக வசதி

நூலகம் திருக்கோயிலின் அருகில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்திருக்கிறது. மொத்தம் இரண்டாயிரம் புத்தகத்திற்கு மேல் உள்ளன. நூலகம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவைக்கபடுகிறது.குறிப்பாக ஆன்மிக புத்தகம், திருக்குறள் மற்றும் திருமறை புத்தகங்கள் உள்ளன.

திட கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மை திட்டம் (Solid Waste Management) திடக் கழிவு மேலாண்மை திட்டம் (ளுடிடனை றுயளவந ஆயயேபநஅநவே) ஜனவரி 2017 அன்று இத்திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசலுக்கு வெளியே அமைந்துள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஐடிசி நிறுவனத்தின் நிதி உதவியுடன் எக்ஸ்னோரா கிரீன் பம்மல் தொண்டு நிறுவனம், இத்திருக்கோயிலில் உருவாகும் தேவையில்லாத கழிவுகளைக் (மாட்டுச் சாணம்), கொண்டு, சாண எரிவாயு தயாரிக்கும் பொருட்டும், காய்ந்த பூக்கள், நந்தவன இலை சருகுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பொருட்டும், இரண்டு எரிபொருள் உருவாக்கும் கலன்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் கலன்களும் அமைக்கப்பட்டு, இத்திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் எரிவாயு பயன்படுத்தும்வகையிலும், திருக்கோயிலில் அன்றாடம் சேரும் காய்ந்த பூக்கள், தேங்காய் நார், காய்ந்த சருகுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர்.

சாண எரிவாயு

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள கோசாலையிலிருந்து கிடைக்கப்பெறும் சாணத்தைக் கொண்டு, இரண்டு எரிவாயு கலன்களிலும், 150 லிட்டர் வீதம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மற்றும் சாணம் இரண்டும் அதனுள் ஊற்றப்படுவதால் ஏற்படும் செயல்முறையால், நாள் ஒன்றுக்கு கிடைக்கும் சாண எரிவாயு, அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள பலூன் போன்ற அமைப்பிலுள்ள பையில் சேமிக்கப்படுகிறது. இவ் சாண எரிவாயு, பைப் லைன் மூலம் அன்னதானக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு, இரண்டு எரிகலன்களில் இணைப்பு கொடுக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், திருக்கோயில் மூலம் வாங்கப்படும் எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. காய்ந்த பூக்கள் மற்றும் பிரசாதம் வழங்க உபயோகிக்கும் தொன்னைப் போன்ற பொருட்கள், காய்ந்த சருகுகள் போன்றவை, இயற்கை உரம் தயாரிக்கும் கலனிற்குள் போடப்பட்டு, 28 நாட்களுக்குப் பின்னர் அவை இயற்கை உரங்களாக மாறி, அவை பாக்கெட்டுகளில் போடப்பட்டு, விற்பனை செய்வதற்கு தயாராகிறது.

More Temples Nearby

View all →