
Century
7th நூற்றாண்டு
Vimanam Type
No
இத்திருக்கோயில் பிரம்மபுரி ஷேத்திரம் என அழைக்கப்படும். பிரம்மா இத்திருக்கோயிலில் பிரம்மா பூஜை செய்ததால், அயன் என்றால் பிரம்மா எனவே அயன்புரம் என்று நாளடைவில் பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் வைகாணச ஆகமம்படி பூஜை நடந்து வருகிறது. நம்மாழ்வார், அண்ணன்மார்கள், அனிபோல் செந்தாமரை கண்ணன் என்று நம்மாழ்வார் பிரபந்தத்தில் பத்து பாட்டு பாடியுள்ளார். இத்திருக்கோயிலில் விஷேசமான சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அங்கபிரதட்ஷனம் செய்து பலவிதமான பலன்களை பெற்றுவருவது விஷேசமானமானதாகும்.
இத்திருக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு 48 நாட்கள் வெற்றிலை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வந்தால் குடும்ப பிரச்சனை தீரும் அது மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பிற்கு வெளிநாடு செல்வதற்கு தடைகள் ஏற்பட்டால் இந்த பரிகாரம் செய்தவுடன் வெளிநாடுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று சிறப்பு அம்சம் உள்ளது.
இத்திருக்கோயிலில் ஆண்டாளம்மாளுக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டாளம்மாளுக்கு மார்கழி மாதம் மற்றும் ஆடி மாதத்தில் 30 நாட்கள் அர்ச்சனை செய்து வந்தால் சேவார்த்திகளுடைய பிராத்தனை நிறைவேறும் என்று ஒரு சிறப்பு அம்சம் உள்ளது.
இத்திருக்கோயிலில் நாகருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த நாகருக்கு பால் பாயாசம் செய்து செவ்வாய் கிழமை தோறும் ஐந்து வாரம் அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் உள்ளவருக்கு நாகதோஷம் நிவர்த்தி ஆகும் என்று ஒரு சிறப்பு அம்சம் உள்ளது.
இத்திருக்கோயிலில் கனகவள்ளி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. இத்தாயாருக்கு மஞ்சள் மாலை எண்ணிக்கை முறையில் மாலை சாற்றி, தாமரை பூ வைத்து அர்ச்சனை 5 வாரம் வெள்ளிக்கிழமை தினத்தில் செலுத்தி வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று சிறப்பு அம்சம் உள்ளது.
இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வாரருக்கு தனி சன்னதி உள்ளது. இச்சக்கரத்தாழ்வாரை ஐந்து வாரம் பன்னிரெண்டு முறை அலரி பூ வைத்து சுற்றிவாந்தால் திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமணம் உடனே நடக்கும் என்று ஒரு சிறப்பு அம்சம் உள்ளது.
கருடாழ்வார்
இத்திருக்கோயிலில் சொர்க்க வாசல் தனியாக உள்ளது. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகதசி அன்று அருள்மிகு கரியமாணிக்க பெருமாளுக்கு சொர்க்க வாசல் நடை திறப்பு விழா நடைபெறும். சுமார் ஆயிரத்துக்கும்மேல் பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சொர்க்க வாசல் நடை திறப்பு தரிசனம் செய்து கரியமாணிக்க பெருமாளின் அருளை பெறுவார்கள்.
இல்லை
இல்லை
நாகலிங்க நர்தன கிருஷ்ணன்
பகாசுரன்
மச்சக்கன்னி
இத்திருக்கோயிலுக்கு நன்கொடையாக பணமாகவோ அல்லது காசோலையாக வரப்பெற்று திருக்கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு திருக்கோயிலின் வளர்ச்சிக்க பயன்படுத்தப்படுகிறது
இத்திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் சேவார்த்திகளின் தாகம் தீர்க்க குடிதண்ணீர் டேங்க் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் சேவார்த்திகள் பயன்படுத்துவதற்கு கழிவறை வசதி ஒன்று உள்ளது.
இத்திருக்கோயிலில் மேற்கு பகுதியில் நந்தவனம் அமைந்துள்ளது. இதில் மாமரம், பலா மரம், புன்னை மரம், நெல்லி மரம், பூசெடிகள் மற்றும் வேப்பரம் போன்ற பலதரப்பட்ட மரங்கள், செடிகள் நல்ல முறையில் உள்ளன.





