Home/Temples/TN/Chennai/Arulmigu Mahalakshmi Temple, Besant Nagar, Chennai - 600090
hrce

Arulmigu Mahalakshmi Temple, Besant Nagar, Chennai - 600090

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை

🕉️ மகாவிஷ்ணு Chennai, TN மகாலட்சுமி
Arulmigu Mahalakshmi Temple, Besant Nagar, Chennai - 600090 — image 1
1 / 9
Also known as:அஷ்டலட்சுமி திருக்கோவில்

History & Architecture

Century

20th நூற்றாண்டு

Agama Tradition

பாஞ்சராத்திரம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

அஷ்டாங்க வைமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வ மரம்

Pooja Timings

சுப்ரபாதம் பூஜை (விஸ்வரூப பூஜை)06:30 AM to 07:00 AM IST
திருவாராதனம் பூஜை (திருவாராதனம் பூஜை)08:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை (உச்சிகாலம் பூஜை)11:45 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை (சாயரட்சை பூஜை)06:00 PM to 07:30 PM IST
திருவாராதனம் (இரவு பூஜை) (திருவாராதனம் பூஜை)07:30 PM to 08:30 PM IST
அர்த்தஜாம பூஜை (அர்த்தசாம பூஜை)08:45 PM to 09:00 PM IST

Temple Speciality

சுற்றுலா

ஓம்காரத்தலம் இத்திருக்கோயில் ஓம் என்ற எழுத்தின் வடிவில் அமைந்து இருப்பதால் இத்திருத்தலத்திற்கு ஒம்காரத் தலம் என்று பெயர் வந்தது.இத் திருக்கோயிலின் பிரதான சந்நிதியில் உள்ள மகாலட்சுமி மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்த பக்தர்கள் முதல் தளத்தில் உள்ள சந்தானலட்சுமி வித்யாலட்சுமி கஜலட்சுமிகளைத் தரிசித்து பின் இரண்டாம் தளத்தில் உள்ள தனலட்சுமியைத் தரிசனம் செய்து பின் கீழே இறங்கி ஆதிலட்சுமி தான்யலட்சுமி தைரிய லட்சுமிகளைத் தரிசனம் செய்கின்ற அமைப்பு ஓம் என்ற பிரணவ எழுத்தின் வடிவத்தினை ஒத்திருக்கும்.மேலும் வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டிருக்கிறது. அதனாலும் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.அஷ்டாங்க விமானம்எப்போதும் வேத ஒலி முழங்குகின்ற இடத்திலோ பல்லாயிரம் பசுக் கூட்டங்கள் விளங்கும் இடத்திலோ வற்றாத நீர் நிலைகள் அமைந்த இடத்திலோ இந்த அஷ்டாங்க விமானம் அமைய வேண்டும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன. அதன் படி எப்பொழுதும் ஓம் என்ற பிரணவ ஒலி முழங்கிக் கொண்டேயிருக்கின்ற ஆழ்ந்த அகன்ற வங்கக் கடற்கரையோரம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

Sub Shrines

அருள்மிகு கமல விநாயகர் சன்னதி

எந்தக் காரியமும் செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானின் அருளைப் பெற வேண்டும். விநாயகர் ஓம்கார வடிவமானவர். தாமரை மலர் மீது வீற்றிருப்பதால் இவர் கமல விநாயகர் என அழைக்கப் பெறுகிறார். கமல விநாயகர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவர் அரச மரத்தடியில் வலம்புரி தும்பிக்கையுடன் அருள்புரிகிறார்.

அருள்மிகு குருவாயூரப்பன் சன்னதி

அருள்மிகு குருவாயூரப்பன் சன்னதிசிவபெருமான் ஆணைப்படி குரு வாயு ஆகிய இருவரும் நாராயணனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்ததால் இவர் குருவாயூரப்பன் எனப்பட்டார் என குருவாயூர் தலபுராணம் கூறுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள குருவாயூரப்பன் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வாயு தேவனாகிய காற்று குருவாகிய கிருஷ்ணனை எப்போதும் இங்கு இருக்கும் தனது ஒலியால் துதித்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.அன்னப் பிரசன்ன வழிபாடுகுழந்தைகள் இந்த உலகில் பிறந்ததும் முதலில் தாய்ப் பாலையே பருகுகின்றன. பிறகு ஒரு வயது ஆகும் போது திட தானிய உணவை உட்கொள்ளத் தொடங்குகின்றன. வாழ்க்கையில் முதன் முதலில் உணவை உட்கொள்ளத் தொடங்குவது ஒரு புனிதமான காரியமாகக் கருதப்பெறுகிறது. இதனால் பிறந்த குழந்தைக்கு உணவூட்ட ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து குழந்தையே தெய்வமாகக் காட்சி தரும் குருவாயூரப்பன் சன்னதியின் முன்பு அமர வைக்கிறார்கள். குருவாயூரப்பனுக்குப் பூசைகள் அர்ச்சனைகள் செய்து குழந்தைக்குத் திருமஞ்சனத் தீர்த்தத்தைக் கொடுத்து பின்பு குருவாயூரப்பனுக்குப் படையல் செய்த அன்னம் ஊட்டப்படுகிறது.

அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி

அருள்மிகு சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் சன்னதிஉக்கிரமான நாராயணன் சக்கர வடிவில் இருப்பதனால் சக்கரத்தாழ்வார் என அழைக்கப்படுகிறார். சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் மேற்குத் திசையில் கிழக்கு முகமாக அமைந்துள்ளார்.ஒரே சிலையின் முன்புறம் சக்கரத்தாழ்வார் உருவமும் அதன் பின்புறம் யோக நரசிம்மர் உருவமும் சிலையும் அமைந்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது. தினப் பிரதோஷத்தில் பானக நெய்வேத்யமும் ஸ்ரீசுதர்சனருக்கு கல்கண்டு முந்திரி நிவேதனமும் செய்து வழங்குவதைச் சிறப்புப் பிரார்த்தனைகயாகக் கொள்ளுகின்றனர்.

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் சன்னதி

ஆஞ்சநேயர் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் வடமேற்குப் பகுதியில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. இவர் அபயம் அளிப்பதால் அபய ஆஞ்சநேயர் அனுக்கிரகம் செய்வதால் அனுக்கிரக ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இவருக்குத் தினசரி துளசி மாலையும் வெற்றிலை மாலையும் அணிவிக்கப் பெறுகிறது.சேவார்த்திகள் இவருக்குத் திருமஞ்சனம் செய்தும் அர்ச்சனை செய்தும் அருளைப் பெறுகிறார்கள். மேலும் இவருக்கு நூற்று எட்டு வடைமாலை சாற்றியும் வெண்ணெய் காப்புச் சாற்றியும் வழிபடுகிறார்கள்.

அருள்மிகு தன்வந்திரி சன்னதி

அருள்மிகு தன்வந்திரி சன்னதிநாராயணன் கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையைத் தன் மீது தாங்கினார் . அதில் வந்த மருந்தாகிய அமுதத்தை அமரர்களுக்கு வழங்கியுதவினார். இவரே தன்வந்திரி என அழைக்கப்படுகிறார். தீராத வியாதிகள் குணமாவதற்கு இவருடைய அருள் அவசியமாகிறது.தமிழகத்தில் புராதனமான தன்வந்திரிக்கு என கோவில்கள் சில உண்டு. அவைகளில் இதுவும் ஒன்று. சென்னையில் மருத்துவக் கடவுளாம் தன்வந்திரிக்கு உள்ள கோவில் இது ஒன்றே ஆகும். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தன்வந்திரி சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நோய் நொடிகளால் அவதிப்படுபவர்கள் தன்வந்திரிக்குத் திருமஞ்சனம் செய்தும் அர்ச்சனை செய்தும் தங்கள் வியாதிகளிலிருந்து நற்கதி அடைகின்றனர். அமாவாசை பௌர்ணமி நாட்களில் இவருக்கு அர்ச்சனை செய்வது நோயின் வீரியத்தைக் குறைத்து இதமும் சுகமும் அளிக்கும் என்ற அடிப்படையில் அர்ச்சனை நடைபெறுகிறது.

அருள்மிகு தசாவதார சன்னதி

அருள்மிகு தசாவதாரச் சன்னதி மகாலட்சுமி திருக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் திருமால் எடுத்த பத்து அவதாரங்களின் உருவச் சிலைகள் வரிசையாக வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி தசாவதாரச் சன்னதி. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே தசாவதார சன்னதி அமைந்துள்ளது. தசாவதாரங்களை ஒரு சேர வழிபடுவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என சோதிடர்கள் வரிகாட்டுகின்றனர்.திருமாலின் வழிநடத்தும் படைத் தளபதியான விசுவக்சேனர் சேனை முதலியார் பக்கம் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்.

Services

அன்னதானம்

இத்திருக்கோயிலில் கடந்த 15.08.2002 முதல் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் / சேவார்த்திகள் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இதர முக்கிய தினங்களில் அன்னதானம் செய்து இறைஅருள் பெறலாம். இத்திட்டத்திற்கு அன்னதான உபயமாக நாள் ஒன்றுக்கு ரூ.3500/- (மூன்றாயிரத்து ஐநூறு) மட்டும் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்று சேவார்த்திகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்னதான திட்ட நன்கொடைக்கு வருமான வரி விலக்கு 80-ம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை

இத்திருக்கோயிலில் நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது. வரப்பெறும் நன்கொடைகள் திருக்கோயிலின் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும்.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயில் வளாகம்

கழிவறை வசதி

திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் உள்ளது.

நூலக வசதி

திருக்கோயில் பிரகாரத்தில் நூலகம் ஒன்று நல்ல நிலையில் உள்ளது.

திருமணம் நடத்துதல்

திருக்கோயில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

திருக்கோயில் வடக்கு பக்கம் காம்பவுண்ட் அருகில் இலவச காலணி பாதுகாப்பு அறை ஒன்று உள்ளது.

More Temples Nearby

View all →