
Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுரஸ்ர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
தொண்டை வளநாட்டில் தேவாரத் திருத்தலங்கள் முப்பத்திரண்டு தலங்களுள் இருபத்தைந்தாவது தலமாக திருவான்மியூர் திகழ்கிறது. திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். சென்னை மாநகரின் கடற்கரையோரம் அமைந்துள்ள திருவான்மியூர், திருமயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் இவற்றில் முதன்மைத் தலமாக திருவான்மியூர் திகழ்கின்றது. .
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம் வெளிப்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இத்தலமரத்தின் அடியில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியருளுகிறார்.
இராமநாதீஸ்வரர்
சண்டிகேஸ்வரர்
நால்வர்
துர்க்கை
கால பைரவர்
முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வயானையுடன்
கஜலட்சுமி
மூன்று விநாயகர்
நடராஜர்
விஜயகணபதி சந்நிதி வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு தியாகராஜசுவாமி
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள்
சுப்ரமணியர் சந்நிதி இராஜ கோபுரத்திற்கு எதிரே வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ளது.
பாப நாசினி எனும் இத்திருக்குளம் திருக்கோயிலுக்கு வெளியே வடகிழக்குப் பகுதியில் 267அடி நீளமும் 254அடி அகலமும் கொண்டு 67818 ச,அடி பரப்பில் 5அடி ஆழம் கொண்டதாக விளங்குகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின் பதினோராம் நாள் தெப்ப உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜென்ம நாசினி என்றழைக்கப்படும் சித்திரைக்குளம் இத்திருக்கோயிலினுள் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நீளம் 100அடி அகலம் 100அடி மொத்தப் பரப்பு 10000சதுரஅடியாகும். ஆண்டுதோறும் ஆருத்ரா வின் போது நடராஜர் தீர்த்தவாரி காண்பார்.
தபசு காமாட்சி கோபுரத்தின் மேல் ஊசி முனையின் மீது ஒரு காலை ஊன்றி ஒரு காலை மேல் வைத்து வலது கையைத் தலைக்குமேல் வைத்து இடக்கையைத் தொங்க வைத்து அனல் பறக்கும் தீச்சுவாலைகட்கு நடவே தவம் புரியும் காட்சி பக்தர்களின் உள்ளத்தை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
தியாகர் மண்டபத்தில் தூணில் காமதேனு சிவலிங்கத்திற்குப்பால் சொரிவது போன்ற காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
சரபேஸ்வரர் நரசிம்மரின் மார்பைப் பிளக்கும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தியாகர் மண்டபத் தூண் ஒன்றில் கைகூப்பிய வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் நாள்தோறும் 1௦௦ நூறு நபர்களுக்கு அன்னதானம் மதியம் 12.௦௦ மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் பயனடைகின்றனர்.
நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும், கோசாலையில் உள்ள பசுக்களின் தீவனத்திற்காகவும் மற்றும் கோசாலை பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது
பக்தர்களின் வசதிக்காக 3 கழிவறைகள் இத்திருக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கிழக்கு வெளிப்பிராகாரத்தின் தென்புறம் நிறுவப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஊனமுற்றோர்கள். மற்றும் முதியவர்களுக்காக இரு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருக்கோயில் நூலகம் தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்துஐந்நூறு புத்தகங்கள் வாசகர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.





