
Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
சதுர வடிவம்
கருவறையின் சுவரை ஒட்டி நீண்ட அதிட்டான மேடை உள்ளது அதன் மேல் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சூழ நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். நடுவே வட்டமான தாமரை இருக்கை மீது நான்கு கரங்களுடன் கிழக்கு திசைநோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .மேற்கரங்களில் சக்திபடையும், வஜ்ஜிர படையும், கத்திரி முத்திரையில் உள்ளன. கீழ் வலக்கரம், அபய முத்திரையில் அருள்பாலிக்கும் கரமாக அமைந்துள்ளது. கீழ் இடக்கரம், இடுப்பின் மீது கடி முத்திரையில் அமைந்துள்ளது. சுப்பிரமணியர் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. மகர குண்டலம் காதிலும், ருத்ராட்ச மாலை, மணிவடம் கழுத்திலும், பூநூல் மார்பிலும், இடைகச்சை இடையிலும், கழல் காலிலும் சுப்பிரமணியரை அணி செய்கின்றன.
சுப்பிரமணியர் வலப்புரம் வள்ளியின் சிற்ப வடிவம் உள்ளது. வள்ளி இரண்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வலக்கரம் லோல மூத்திரையில் தாழ்கரமாக உள்ளது. இடகரம் கடக முத்திரையில் தாமரை மலரை பிடித்துள்ளது. வள்ளியின் தலையை கரண்ட மகுடம், காதில் குண்டலம், மார்பில் குஜபந்தம், தனசூத்திரம், தோள் வளை, கை வளை, இடையில் கச்சை, காலில் பாதசரம் ஆகிய அணிகலன்கள் வள்ளியை அலங்கரிக்கின்றன. தெய்வானை: தெய்வானை சுப்பிரமணியர் இடபுறம் இரண்டு கரங்களுடன் தெய்வானை நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார், வலக்கரம் கடக முத்திரையில் நீலோற் பலம் மலரை பிடித்தள்ளார், பாதசரம் , இடைகச்சை தன சூத்திரம், கண்ட சரம், மணிவடம் தோள்வளை, கை வளை, மகர குண்டலம், கரண்ட மகுடம் ஆகிய அணிகள்
மூலவர் சுப்பிரமணியர் இடதுபுறம் நின்ற கோலத்தில் சதுர்புஜங்களுடன் பெருமாள் காட்சியளிக்கிறார். தாயார் அமர்ந்து கோலத்தில் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.
பெருமாளுக்கு நேர் எதிரில் ஆஞ்சநேயர் சன்னதி இரு கரங்களையும் கூப்பிய நிலையில் கொண்டு நின்ற கோலத்தில் உள்ளார்.
நடராஜர் சன்னதி
துர்கை சன்னதி
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயிலில் உள்ள பைரவர் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சம்.
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயிலில் உள்ள ராகவேந்திரர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இச்சிற்ப வடிவம் பீடத்தின் மீது இடக்காலை மடித்து வலக்காலை குத்திட்டு நான்கு கரங்களுடன் லலிதா சனத்தில் காட்சி அளிக்கிறது. மேல் கரங்கள் கடக மூத்திரையில், அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களை பற்றி உள்ளன. கீழ் வலகரம் உடைந்த தந்தத்தை பற்றி உள்ளது. இடக்கரம் மோதகத்தை ஏந்தி உள்ளது, தும்பிக்கை வளைந்து இடக்கரத்தில் உள்ள மோதகத்தை பற்றி உள்ளது. ஆனை முகமும் மானிட உடலும் கொண்டு பெருத்த வயிருடன் விநாயக பெருமான் காட்சி அளிக்கிறார். இச்சிற்ப வடிவம் ஆலய தொடக்க காலத்தில் இருந்துள்ளது.
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி முயலகன் மீது வலக்காலை ஊன்றி அமர்ந்த கோலத்தில் ஜனகாதி முனிவர் உபதேசிக்கும் நிலையில் காட்சியளிக்கிறார்.





