
Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
திருமங்கையாழ்வார்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மகிழ மரம்
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி வருடத்திற்கு ஒருமுறை பகல் பத்து 6-ம் மாலையில் இருந்து 4 நாட்கள் மீசை இல்லாமல் இருப்பார். அதை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். ஒன்று அருள்மிகு பார்த்தசாரதிசுவாமிக்கும் மற்றொன்று அருள்மிகு யோக நரம்மருக்கும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள் திருவிழாவின்போது திருத்தோரோட்டம் நடைபெறுகிறது. திருஅல்லிக்கேணி என்றும் தற்காலம் திருவல்லிக்கேணி என்று வழங்கப்பட்டும் வரும் இவ்விடத்திற்கு ஸ்ரீப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் அதாவது துளஸிவனம் என் வட மொழியில் கூறப்படுகிறது. இந்த திவ்ய தேசம் தற்காலம் சென்னை நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது ஆழ்வார்களால் மங்களாஸாஸணம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளுள் ஒன்றாகி பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னன் ஆகிய மூவர்களால் பாடப்பெற்ற திருத்தலமாகும்.
பாரத போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் கண்ணன் கீதையை உபதேசம் செய்த கோலத்தில் உற்சவர் முகத்தில் அம்பு பட்ட காயத்துடன் தரிசிக்கலாம்
அருள்மிகு வேங்கட கிருஷ்ணன்
மதுமான் முனிவருக்கு தன் தம்பிகள் பரதன், சத்ருக்கணன், இலக்குமணன், ஆகியோருடன் சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீ இராமர் தன் தேவி சீதையுடன் சேவை அளிக்கிறார். ஸ்ரீராம நவமி உற்சவம் பங்குனி மாதம் 9 நாட்கள் நடைபெறுகிறது. இவருக்கு எதிரிலேயே ஸ்ரீ ஆஞ்சநேயரும் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள் சன்னதி ஆடிமாதத்தில் பத்து நாட்கள் திருவாடிப்பூர திருவிழா நடைபெறுகிறது. மார்கழி மாத்தில் ஒன்பது நாட்கள் நீராட்ட உற்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான போகிபண்டிகை அன்று ஸ்ரீ பார்த்தசாரதிக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
ஸ்ரீ அழகியசிங்கர் சன்னதி யோகாசனத்தில் யோக நிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளி ஸேவையளிக்கிறார். உற்சவ மூர்த்தி தெள்ளியசிங்கர் (அழகியசிங்கர்) ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், அபய ஆஹ்வான அஸ்தத்துடன் ஸேவையளிக்கிறார். தன்னை சேவிக்க வரும் பக்தர்கள் நரசிம்மர் என்று அஞ்சவேண்டாம். தாமே பக்தர்களை இடது திருக்கரத்தால் (ஆஹ்வானம் - அழைப்பது என்று பொருள்) அழைத்து அபயம் கொடுப்பதாக அழகியசிங்கர் காட்சி தருகின்றார். தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கயாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட இப்பொருமான் நோய் தீர்க்கும் பெருமான். பக்தர்கள் தங்களுக்கு வரும் துன்பம் உப்பு போல் கரைந்து, நோய் மிளகு போல் உதிர்த்து விடவேண்டும் என்று பிரார்த்தனை செய்து .வரை வழிபட்டால் நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மன நிம்மதியுடன் பயமின்றி ஆனந்தமாக வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்.
ஸ்ரீ வேதவல்லித்தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் பிருகு புத்திரியாக கைரவீணி திருக்குளக் கரையில் ஸ்ரீ வேதவல்லித் தாயார் அவதாரம் தனிக்கோயில் தாயார்- இவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வந்த ஸ்ரீ ரங்கநாதனை வாரீர் என் நாதா என் அழைத்ததால் ஸ்ரீமந்நாதன் என அழைக்கப்படுகிறார். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது. மாசிமாத வளர்பிறை துவாதசியன்று ஸ்ரீ தேவவல்லித்தாயாருக்கும், ஸ்ரீ ரங்கநாதருக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
ஸ்ரீ ரங்கநாதர் மூலவர் ரங்கநாதர் புஜங்கசயனத்தில் பாம்பணையின் மேல் ஆயுதம் இல்லாமல் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் நாபியில் ப்ரம்மாவுடன் தெற்குபுறம் தலை வைத்து கிழக்கு நோக்கி, வராகருடனும் நரசிம்மருடனும் சேவை அளிக்கிறார்.
ஸ்ரீ கஜேந்திர வரதர் சன்னதி சப்தரோமா முனிவருக்கு கருடன் மேல் வரம் தரும் ராஜனாக யானையின் துயர் தீர்த்ததுபோல் நம் துயர்களை தீர்ப்பதற்காக ஸ்ரீ கஜேந்திரவரதராஜனாக தினம்தோறும் கருடசேவையில் அருள் பாலிப்பதை இந்த திவ்ய தேசத்தில் மட்டுமே காணலாம். இவருக்கு வைகாசி மாதம் பத்துநாள் திருவிழா, மாசி மாதத்தில் தெப்பத்திருவழா மற்றும் தவன உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் தெப்ப உற்சவம் ஏழு நாட்கள் அதில் முதல் மூன்று நாட்கள் பார்த்தசாரதி சுவாமி பெருமாளுக்கு நான்காம் நாள் நரசிம்மருக்கும், ஐந்தாம் நாள் ரங்கநாதர் சுவாமிக்கும் ஆறாம் நாள் ராமருக்கும், ஏழாம் நாள் வரதர் சுவாமிக்கு தெப்ப உற்சவம் வொகு விமர்சையாக நடைபெறும்
மஹாமண்டபம் மற்றும் திருவெயிமோகி பிரபாண்டா மண்டபம், முன் பல்லவ காலத்தின் தெளிவான கட்டிடக்கலை மற்றும் பிரதான சன்னதி மற்றும் மண்டபத்தில் உள்ள கட்டமைப்புகளில் காணக்கூடிய வேறுபாடுகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன, ஆளும் இனம் அசல் சன்னதிக்குப் பின்னர் மண்டபங்கள் பின்னர் இணைக்கப்படுகின்றன என்பதை தீர்மானிக்க பொதுவாக பிரதான சன்னதிகளின் தூண்கள் மற்றும் முன்னாள் பார்த்தசாரதி ஸ்வாமியின் துவாஜரோஹன மண்டபம் ஆகியவற்றில் உள்ள உருவங்களில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும். முன்னர் இருந்ததை விடவும் தொலைதூரர். பார்த்தசாரதி ஸ்வாமி என்றழைக்கப்படும் முருகப்பெருமாள் திருவொளிமலை பிரபாந்த மண்டபம் என்று அழைக்கப்படும் முன் பல்லவர்களின் காலம்.கல்யாண மண்டபம், நான்கு தூண் மண்டபம் கோவிலின் முன் மற்றும் விஜயநகர ஆரையின் கிழக்குத் தொட்டியில் ஹனுமார் கோயில் ஆகியவை காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ பத்ஹசதி சுவாமி சன்னதி, மற்ற கோயில்களில் புராதன காலத்திலேயே புதுப்பிக்கப்பட்டு, ஸ்ரீ வேடவள்ளிய தெய்வரின் ஆலயமும், 36 தூண்களின் மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தன.
அருள்மிகு நரசிம்மர் சன்னதியின் முன்புறம் உள்ள தூண் ஒன்றில் யாழியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு நரசிம்மர் சன்னதிக்கு எதிரே உள்ள தூண்கள், மகா விஷ்ணுவின் 10 அவதாரங்கள் மற்றும் கிருஷ்ணரின் பல்வேறு நடனக் காட்சிகள் உட்பட பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தினமும் 100 பேருக்கு திருக்கோவில் சார்பாக அன்னதானம் செய்ய தமிழக அரசின் உத்தரவு உள்ளது.இதற்கு ஆகும் செலவு திருக்கோவில் நிர்வாகத்தை சேர்ந்தது. இருப்பினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சார்பில் மாதத்தில் பல நாட்களின் அன்னதான செலவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் பெரியோர்களின் நினைவு நாள், மேலும் திருமண நாள், போன்ற முக்கிய தினங்களில் அன்னதானம் செய்ய முன் வருகின்றனர்.பக்தர்கள் அன்னதானம் செய்ய தேவஸ்தான தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தினமும் 100 பேருக்கு திருக்கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்படுகிறது. இருப்பினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சார்பில் மாதத்தில் பல நாட்களின் அன்னதான செலவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் பெரியோர்களின் நினைவு நாள், மேலும் அவர்களின் திருமண நாள், போன்ற முக்கிய தினங்களில் அன்னதானம் செய்ய முன் வருகின்றனர். அவ்வாறு அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும்பட்சத்தில், நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு ரூ.3500/- செலுத்தப்பட வேண்டும். இதற்கு நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி) பெற இயலும். பக்தர்கள் அன்னதானம் செய்ய தேவஸ்தான தொலைபேசி எண்.044-2844 2462-ஐ தொடர்பு கொள்ளலாம்
கோயில் குலம் அருகில் கழிப்பறை வசதி பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக உள்ளது
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகள் உள்ளன.





