
Century
17th நூற்றாண்டு
Praised By
வள்ளலார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
ஐங்கோண வடிவம்
Vimanam Type
ஐந்து நிலை விமானம்,
வள்ளல் இராமலிங்க பெருமானால் தருமமிகு சென்னை கந்தகோட்டம் என புகழப்பட்ட திருக்கோயில். வள்ளலார் தனது ஒன்பது வயதில் இத்திருக்கோயில் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலை எனும் பாடலை தந்தருளியுள்ளார். மேலும் பாம்பன் ஸ்வாமிகள் குமரகுபர ஸ்வாமிகள் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் இத்திருத்தல முருகனை குறித்து பாடல்கள் பாடியுள்ளனர்.
ஸ்ரீ நடராஜா் சன்னதியை அடுத்து ஸ்ரீ துா்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
சரவண பொய்கை திருக்குளத்தின் அருகில் ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி சுவாமி சன்னதி அமைந்துள்ளது.
முலவா் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தசுவாமி
உத்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமாமுரசுவாமி வெள்ளி விமானத்தில் தங்க பிரபையுடனும் தங்க கவசத்துடனும் கையில் வேலும் சேவற்கொடியும் ஏந்தி வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். தனிப்பட்ட வள்ளி அம்மையார் தெய்வயானை அம்மையார் உத்சவ திருவுருவங்களும் உள்ளன. திருவடியின் கீழ் வெள்ளி மயில் அய்யாவுடன் அமைந்திருக்கின்றது.
இளையனார் சன்னதியில் தேவியர் இருவர் விநாயகர் சிறியவர் பிரதோஷ நாயகர் பார்வதி சமேத சந்திரசேகரர் ஸ்வாமிநாதஸ்வாமி கைலாச நாதர் பிரமதேவர் மகா விஷ்ணு பிக்ஷ்டானர் மோஹினி குண்டோதரன் வீரபத்ரர் பத்ரகாளி தேவியருடன் சண்முகர் பழனி ஆண்டவர் சுக்ரவார அம்பாள் அஸ்ட்ராயர் இருவர் இரு பலி பீடங்கள் சண்டிகேஸ்வரர் தர்ம சிவாச்சாரியார் ஸ்தாபகர் வேளூர் மாரி செட்டியார் செப்பு உலோக விக்கிரகங்கள் உள்ளது
குளக்கரையின் பக்கத்திலுள்ள முப்பத்திரெண்டுகால் மண்டபத்தில் சித்தி புத்தி சமேத ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் வலப்பக்கத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ காசி விஸ்வநாதரம் தெற்கு நோக்கி ஸ்ரீ விசாலாக்ஷி அம்மையாரும் சக்தி விநாயகரும் சூரியரும் பாலசுப்ரமணியரும் சண்டிகேஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்..
ஆறுமுகஸ்வாமி சன்னதியில் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையுடனும் கிரியா சக்தியாகிய தெய்வயானையுடனும் ஞானசக்தியாகிய வேலுடனும் மயிலோடும் ஆறுமுகப்பெருமான் நமக்கு காட்சியளிக்கிறார்
பிரகாரத்தின் வடகோடியில் தெற்கு நோக்கி சிவகாமி சமேத ஸ்ரீ நடராசப் பெருமானும் பதஞ்சலி வியாக்ரபாதர் மாணிக்கவாசகர் சூழ காட்சியருள்வார்.
மூலவர் சன்னதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி
மூலவர் சன்னதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி
மூலஸ்தானத்தில் மூலவர் கர்பகிரகம் இடதுபுறம் அமைந்துள்ள சன்னதி அம்மன்
மூலஸ்தானத்தில் மூலவர் கர்பகிரகம் வலதுபுறம் அமைந்துள்ள அம்மன் சன்னதி
விநாயகர் சன்னதி அடுத்து காலை மாலை உத்சவம் மேற்கொள்ளும் பலி நாயகராகிய நித்யோத்சவர் தேவியருடன் முருகர் காட்சி தருகிறார்
மூலஸ்தான கிழக்கு வாயிலின் உள் சென்றதும் வடக்கு நோக்கிய விநாயகர் சன்னதி உள்ளது
இத்திருக்கோயிலின் தெற்கு பகுதியில் சித்தி புத்தி சமேத விநாயகர் சன்னதி அருகில் சுமார் 14400 சதுர அடி பரப்பில் 30 அடி ஆழமுள்ள சரவண பொய்கை எனும் வற்றாத திருக்குளம் வள்ளல் பெருமான் அருளிய தெய்வமணிமாலை எனும் 31 பாடல்களைக் குறிக்கும் விதமாக 31 படிகளைக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.இக் குளத்தினை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முதலாம் படைவீடு
திருச்செந்தூர் இரண்டாம் படைவீடு
பழனி மூன்றாம் படைவீடு
சுவாமிமலை நான்காம் படைவீடு
திருத்தணிகை ஐந்தாம் படைவீடு
பழமுதிர்ச்சோலை ஆறாம் படைவீடு
தினசரி ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
காசாளர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ளது
பக்தர்கள் வசதிக்கு திருக்குளம் நான்கு புறமும் கருங்கல் படிக்கட்டுகளில் பாதுகாப்புக்கு இரும்பு கிரில் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலில் திருமண நிகழ்ச்சிகள் மேல்மாடியில் கந்தன் கலையரங்கத்திலும் தண்டபாணி ஸ்வாமி மகா மண்டபம் உத்சவர் சன்னதி மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறகிறது மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான தங்கசாலை தெருவில் உள்ள திருமண மண்டபத்திரும் நிகழ்ச்சிகள் நடைபெறகிறது
பாதணி பாதுகாப்பு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குளிர் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
திருக்கோயில் கந்தன் கலையரங்கத்தில் ஒன்றும் குளக்கரை விநாயகர் சன்னதி பின்புறம் இரண்டு அறைகளும் உள்ளன.
திருக்கோயிலில் திருமண நிகழ்ச்சிகள் மேல்மாடியில் கந்தன் கலையரங்கத்திலும் தண்டபாணி ஸ்வாமி மகா மண்டபம் உத்சவர் சன்னதி மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறகிறது மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான தங்கசாலை தெருவில் உள்ள திருமண மண்டபத்திரும் நிகழ்ச்சிகள் நடைபெறகிறது
ஆடி கிருத்திகை பெருவிழாவின் போது வீதியுலா புறப்பட்டு செய்யப்படுகிறது
பக்தர்கள் அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்க ரதம் திருமாடவீதி உலா புறப்பாடு செய்யப்படுகிறது




