Home/Temples/TN/Chennai/Arulmigu Sree Muthu Kumara Swamy Devasthanam, Park Town, Chennai - 600003
Heritage Templehrce

Arulmigu Sree Muthu Kumara Swamy Devasthanam, Park Town, Chennai - 600003

அருள்மிகு கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை

🕉️ ஸ்ரீ கந்தசுவாமி Chennai, TN
Arulmigu Sree Muthu Kumara Swamy Devasthanam, Park Town, Chennai - 600003 — image 1
1 / 7
Also known as:கந்தகோட்டம்

History & Architecture

Century

17th நூற்றாண்டு

Praised By

வள்ளலார்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

ஐங்கோண வடிவம்

Vimanam Type

ஐந்து நிலை விமானம்,

Pooja Timings

விஸ்வரூப பூஜை (-)06:00 AM to 06:15 AM IST
காலசந்தி பூஜை (-)07:30 AM to 08:00 AM IST
உச்சிக்கால பூஜை (-)10:30 AM to 11:00 AM IST
சாயரட்சை பூஜை (-)05:00 PM to 05:30 PM IST
மாலை பூஜை (-)07:00 PM to 07:30 PM IST
பள்ளியறை பூஜை (-)09:30 PM to 09:45 PM IST

Temple Speciality

பரிகாரம்

வள்ளல் இராமலிங்க பெருமானால் தருமமிகு சென்னை கந்தகோட்டம் என புகழப்பட்ட திருக்கோயில். வள்ளலார் தனது ஒன்பது வயதில் இத்திருக்கோயில் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலை எனும் பாடலை தந்தருளியுள்ளார். மேலும் பாம்பன் ஸ்வாமிகள் குமரகுபர ஸ்வாமிகள் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் இத்திருத்தல முருகனை குறித்து பாடல்கள் பாடியுள்ளனர்.

Sub Shrines

ஸ்ரீ துா்கை அம்மன்

ஸ்ரீ நடராஜா் சன்னதியை அடுத்து ஸ்ரீ துா்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி சுவாமி

சரவண பொய்கை திருக்குளத்தின் அருகில் ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி சுவாமி சன்னதி அமைந்துள்ளது.

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தசுவாமி

முலவா் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தசுவாமி

முத்துக்குமாரசுவாமி

உத்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமாமுரசுவாமி வெள்ளி விமானத்தில் தங்க பிரபையுடனும் தங்க கவசத்துடனும் கையில் வேலும் சேவற்கொடியும் ஏந்தி வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். தனிப்பட்ட வள்ளி அம்மையார் தெய்வயானை அம்மையார் உத்சவ திருவுருவங்களும் உள்ளன. திருவடியின் கீழ் வெள்ளி மயில் அய்யாவுடன் அமைந்திருக்கின்றது.

இளையனார்

இளையனார் சன்னதியில் தேவியர் இருவர் விநாயகர் சிறியவர் பிரதோஷ நாயகர் பார்வதி சமேத சந்திரசேகரர் ஸ்வாமிநாதஸ்வாமி கைலாச நாதர் பிரமதேவர் மகா விஷ்ணு பிக்ஷ்டானர் மோஹினி குண்டோதரன் வீரபத்ரர் பத்ரகாளி தேவியருடன் சண்முகர் பழனி ஆண்டவர் சுக்ரவார அம்பாள் அஸ்ட்ராயர் இருவர் இரு பலி பீடங்கள் சண்டிகேஸ்வரர் தர்ம சிவாச்சாரியார் ஸ்தாபகர் வேளூர் மாரி செட்டியார் செப்பு உலோக விக்கிரகங்கள் உள்ளது

சித்தி புத்தி சமேத ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர்

குளக்கரையின் பக்கத்திலுள்ள முப்பத்திரெண்டுகால் மண்டபத்தில் சித்தி புத்தி சமேத ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் வலப்பக்கத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ காசி விஸ்வநாதரம் தெற்கு நோக்கி ஸ்ரீ விசாலாக்ஷி அம்மையாரும் சக்தி விநாயகரும் சூரியரும் பாலசுப்ரமணியரும் சண்டிகேஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்..

ஆறுமுகர்

ஆறுமுகஸ்வாமி சன்னதியில் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையுடனும் கிரியா சக்தியாகிய தெய்வயானையுடனும் ஞானசக்தியாகிய வேலுடனும் மயிலோடும் ஆறுமுகப்பெருமான் நமக்கு காட்சியளிக்கிறார்

நடராஜர்

பிரகாரத்தின் வடகோடியில் தெற்கு நோக்கி சிவகாமி சமேத ஸ்ரீ நடராசப் பெருமானும் பதஞ்சலி வியாக்ரபாதர் மாணிக்கவாசகர் சூழ காட்சியருள்வார்.

மீனாட்சி அம்மன்

மூலவர் சன்னதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி

சுந்தரேஸ்வரர்

மூலவர் சன்னதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி

தெய்வயானை

மூலஸ்தானத்தில் மூலவர் கர்பகிரகம் இடதுபுறம் அமைந்துள்ள சன்னதி அம்மன்

வள்ளி

மூலஸ்தானத்தில் மூலவர் கர்பகிரகம் வலதுபுறம் அமைந்துள்ள அம்மன் சன்னதி

நித்ய உத்சவர்

விநாயகர் சன்னதி அடுத்து காலை மாலை உத்சவம் மேற்கொள்ளும் பலி நாயகராகிய நித்யோத்சவர் தேவியருடன் முருகர் காட்சி தருகிறார்

விநாயகர்

மூலஸ்தான கிழக்கு வாயிலின் உள் சென்றதும் வடக்கு நோக்கிய விநாயகர் சன்னதி உள்ளது

Temple Tank

சரவண பொய்கை

இத்திருக்கோயிலின் தெற்கு பகுதியில் சித்தி புத்தி சமேத விநாயகர் சன்னதி அருகில் சுமார் 14400 சதுர அடி பரப்பில் 30 அடி ஆழமுள்ள சரவண பொய்கை எனும் வற்றாத திருக்குளம் வள்ளல் பெருமான் அருளிய தெய்வமணிமாலை எனும் 31 பாடல்களைக் குறிக்கும் விதமாக 31 படிகளைக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.இக் குளத்தினை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

Wall Paintings

அறுபடை வீடு 1

திருப்பரங்குன்றம் முதலாம் படைவீடு

அறுபடை வீடு 2

திருச்செந்தூர் இரண்டாம் படைவீடு

அறுபடை வீடு 3

பழனி மூன்றாம் படைவீடு

அறுபடை வீடு 4

சுவாமிமலை நான்காம் படைவீடு

அறுபடை வீடு 5

திருத்தணிகை ஐந்தாம் படைவீடு

அறுபடை வீடு 6

பழமுதிர்ச்சோலை ஆறாம் படைவீடு

Services

அன்னதானம்

தினசரி ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.

Facilities

சக்கர நாற்காலி

காசாளர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ளது

திருக்குளம்

பக்தர்கள் வசதிக்கு திருக்குளம் நான்கு புறமும் கருங்கல் படிக்கட்டுகளில் பாதுகாப்புக்கு இரும்பு கிரில் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கல்யாண மண்டபம்

திருக்கோயிலில் திருமண நிகழ்ச்சிகள் மேல்மாடியில் கந்தன் கலையரங்கத்திலும் தண்டபாணி ஸ்வாமி மகா மண்டபம் உத்சவர் சன்னதி மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறகிறது மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான தங்கசாலை தெருவில் உள்ள திருமண மண்டபத்திரும் நிகழ்ச்சிகள் நடைபெறகிறது

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

பாதணி பாதுகாப்பு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

சுத்திகரிக்கப்பட்ட குளிர் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது

உடை மாற்றும் அறை

திருக்கோயில் கந்தன் கலையரங்கத்தில் ஒன்றும் குளக்கரை விநாயகர் சன்னதி பின்புறம் இரண்டு அறைகளும் உள்ளன.

திருமணம் நடத்துதல்

திருக்கோயிலில் திருமண நிகழ்ச்சிகள் மேல்மாடியில் கந்தன் கலையரங்கத்திலும் தண்டபாணி ஸ்வாமி மகா மண்டபம் உத்சவர் சன்னதி மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறகிறது மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான தங்கசாலை தெருவில் உள்ள திருமண மண்டபத்திரும் நிகழ்ச்சிகள் நடைபெறகிறது

வெள்ளித் தேர்

ஆடி கிருத்திகை பெருவிழாவின் போது வீதியுலா புறப்பட்டு செய்யப்படுகிறது

தங்கத் தேர்

பக்தர்கள் அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்க ரதம் திருமாடவீதி உலா புறப்பாடு செய்யப்படுகிறது

More Temples Nearby

View all →