
Century
3rd நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பல்லவர், பாண்டியன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
அத்தி மரம்
மாணிக்க தியாகர் - இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. இவ்வ்ரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர், மன்னனுக்கு கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தை தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் “மாணிக்க தியாகர்” என்றும் அழைக்கப்படுகிறார். பெட்டி வடிவ லிங்கம் : வாசுகி எனும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய இறைவன் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். எனவே இவர் “படம்பக்க நாதர்” என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் உள்ளது. சுவாமி இங்கு தீண்டாத் திருமேனியாக காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அர்ச்சகர்கள் சுவாமியை தொட்டு பூஜை செய்வது இல்லை. இத்தலத்தில் மூலவர் படம்பக்க நாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருகிறார். கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும் இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பௌர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாற்றப்படும். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூபத்தினை தரிசித்த முடியும். இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனை பூஜைப்பதாக ஐதீகம்.
நந்தி தேவருக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடி அருளியஸ்தலம். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல்பெற்றது. சுந்தரர் சங்கிலிநாச்சியாரைத் திருமணம் முடித்த ஸ்தலம். கலியமூர்த்திநாயனார், பட்டினத்தார் முக்தி பெற்றஸ்தலம். அருணகிரிநாதர், அருட்பிரகாசவள்ளலார், பட்டினத்தார், பாம்பன்சுவாமிகள் உட்பட 20 அருளாளர்களால் போற்றிப் பாடப் பெற்ற ஸ்தலம். சங்கீதமும் மூர்திகளால் கீர்த்தனைகள் இயற்றப்பட்ட ஸ்தலம். ஐயடிகள் காடவர்கோன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கலியமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் வழிபட்ட ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்கள் ஒரேவளாகத்தில் அமைந்துள்ளது. 27 நட்சத்திர லிங்கங்களுக்குத் தனித்தனி லிங்கங்கள் அமைந்துள்ளது. மூலவர்சுயம்புலிங்கம். கார்த்திகை பௌர்ணமி மற்றும் அதனை அடுத்து வரும் இருநாட்களும் மட்டுமே தைலஅபிஷேகம் நடைபெறும் அந்த மூன்று தினங்களில் மட்டுமே சுவாமியைப் பூரணமாகத் தரிசிக்க இயலும்.
சிவன் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எல்லாம் 2. மூலவர் - ஆதிபுரீஸ்வரர் - ஒற்றீஸ்வரர் அம்மன் - வடிவுடை அம்மன் - வட்டப்பாறை அம்மன் தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் - ஆதிஷேஷ தீர்த்தம் பூஜா ஆகமம் - காரணம் - காமிகம் இத்தலத்தில் சொர்ண பைரவர் நாய் வாகனம் இன்றி காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை. இது 51 சக்தி பீடங்களில் இஷீ சக்தி பீடம் ஆகும். 274 சிவாலயங்களில் இது 253வது தேவார தலமாகும்.
இந்த சுவாமியின் பெயரிலேயே இந்த ஊர் அமைந்துள்ளது. திரு ஒற்றிஸ்வரர் சன்னதியின் வெளி மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள சிற்பங்கள் அபூர்வமானவை. சிங்கத்தின் வாயில் உருளும் பந்து, மனிதனுக்குள்ள சக்கரங்கள், சிங்கத்தின் வாயில் சங்கிலி போன்றவை.
ஆதிபுரீஸ்வரர்
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த 3 நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.
27 நட்சத்திரலிங்கங்கள் தனித்தனியே உள்ளன அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ப அர்ச்சனை செய்யப்படுவர்.
பாண்டியன் அரசவையில் அநீதி அழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தை தணிக்க எண்ணிய சிவன் தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள், அப்போது சிவன் அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவர் &ldquoவட்டப்பாறை அம்மன்&rdquo என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில் தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கின்றனர்.
கௌலீஸ்வரர்: இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் சிவன் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்க கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். என்னை மனதில் நிறுத்தி வழிபடுவோருக்கு ஞானம் தருவேன் என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
நல்ல நிலையில் உள்ளது
திருக்கோயிலுக்கு வெளியே வட கிழக்கில் ஒரு பிரம்மாண்டமான ஒரு பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இதில் மூழ்கி எழுந்து ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கு தானமளித்தால் செய்த பாவங்கள் போகும். எண்ணியவை எல்லாம் எளிதில் கிடைக்கும். அயோத்தி மன்னன் மாந்தாதா இத்திருக்குளத்தில் நீராடி இழந்த இளமையை திரும்ப அடைந்தார்.
பிரம்மா விஷ்ணு, சிவன் எனும் மூவரும் ஒருவரே என உணர்த்தும் விதமாக ஒரே காலில் நிற்கும் மூர்த்தியின் வடிவம் உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம்.இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன.
திருக்கோயிலின் வளர்ச்சிக்கு தங்களது உதவி பெரிதும் துணை புரிகிறது. தாங்கள் அளிக்கும் அன்னதான நன்கொடைக்கு முழுவதும் வருமான வரி விலக்கு உள்ளது. கீழ்க்கண்ட நன்கொடைகள் திருக்கோயிலுக்கு அளிக்கலாம். 1) பொது நன்கொடை 2) கோசலை நன்கொடை 3) திருப்பணி நன்கொடை 4) அன்னதான நன்கொடை
இத்திருக்கோயிலில் தினசரி 100-நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது அன்னதானம் 100 பேர் என்று (ஒரு நாளைக்கு) எனில் ரூ .3500/ -ஆகும். கட்டளை நிலையான வைப்பு தொகையினை ரூ .75000/ - முதலீடு செய்து அதில் இருந்து வட்டி தொகையினை கொண்டு வருடத்தில் ஒரு நாள் அன்னதானம் நடைபெறும் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80 ) பெற இயலும். அன்னதான கணக்கு எண்.10306165474 80-திஐடி (இ) எண்.2(55)02-03 தேதி- 28.03.2008 12- திஐடி (இ) எண்.2 (1114) 07-08 தேதி- 25.01.2008
அருள்மிகு வடிவுடை அம்மன் சன்னதியின் வெளியே துலா பாரம் அமைந்துள்ளது. கட்டணமில்லா துலாபாரத்தில் வெள்ளம், பழங்கள், சர்க்கரை, அரிசி மற்றும் தானியம் வகைகள் ஆகியவை துலாபாரம் வழியாக பெறப்படும்.
திருக்கோயில் உட்புறம் மின்கல மகிழுந்து வசதி உள்ளது.
மாற்று திறனாளிகளுக்கு மற்றும் வயது முதியோர்களுக்கு சக்கர நாற்கலி வசதி செய்யப்பட்டுள்ளது
திருக்கோயில் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள நூலகத்தில் சுமார் 1100 புத்தகத்திற்கு மேல் உள்ளன. நூலகம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்து வைக்கபடுகிறது.குறிப்பாக ஆன்மிக புத்தகம், திருக்குறள் மற்றும் திருமறை புத்தகங்கள் உள்ளன. நூலகம் திறக்கும் நேரம் தினசரி காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நூலகத்தில் தினசரி செய்தித்தாள்களும் உள்ளன
கட்டணம்மில்லா காலணி பாதுகாப்பு காலணி பாதுகாப்பில் நான்கு நபர்கள் பணிபுரிகிறார்கள் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரை விசேஷ நாட்களில் காலை முதல் இரவு நடைமுடும் வரை காலணி பாதுகாப்பு மையம் திறந்திருக்கும்.
இத்திருக்கோயிலில் அருள்மிகு வடிவுடை அம்மனுக்கு தங்கரத பவனி இரவு 7.00 மணி அளவில் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களில் ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்து தங்கரத பவனி நடத்திக்கொள்ளலாம். ஐந்து நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இதற்கு கட்டணம் ரூ.2,500/-ஆகும்.
அருள்மிகு வளர் காளி அம்மன் சன்னதி அருகில் , அருள்மிகு ஒற்றிஸ்வரர் சன்னதி வசந்த மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விழா காலங்களில் அத்தியாவசியமான இடங்களில் தற்காலிக குடிநீர் வசதி செய்யப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு என தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது அன்னதானம் தயாரிக்கவும், அன்னதான பயன்பாட்டாளர்களுக்கும் இந்த குடிநீர் பயன்படுகிறது.




