
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அத்திமரம்
நினைத்தவை நடக்கும், வேண்டும் வரங்களை அருளும் வள்ளல் வடபழனி ஆண்டவர்.தென்பழநி ஆண்டவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரனை அளிப்பது போல தமிழகத்தின் வடபகுதியாம் சென்னையில் வடபழநி ஆண்டவராக அனைத்து வரங்களையும் அருளிக்கொண்டு வடபழநி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பழநிக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து பழநி மலை முருகனுக்கு நிறைவேற்ற நினைத்த வேண்டுதலை நிறைவேற்றி தென்பழநி முருகனின் அருளை இந்த வடபழநி முருகன் ஆலயத்திலேயே பெற்றுள்ளார்கள் என்பது ஒரு நிதர்சனமான நிகழ்வாகும். பழனி முருகனிடம் வேண்ட நினைத்த காரியங்களையும் வடபழநி ஆண்டவரிடமே வேண்டி அவர் அருளைப் பெற்றவர்கள் ஏராளம். நாளாக நாளாக இத்திருக்கோயிலின் புகழ் மேலும் வளர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்து வருகிறது. இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதி அடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பாதையில் உள்ளது. அந்த இடத்தில் சித்தர்கள் ஆலயம் அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குரு பூஜையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம். இத்திருக்கோயில் மூலவர் பாத காலணிகளுடன் அருள்பாலிப்பது சிறப்பு. வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாது. பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து வடபழனி ஆண்டவர் உடன் நீக்குவதாக ஐதீகம். இத்திருக்கோயிலின் தல விருட்சம் அத்தி மரம் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டி அத்தி மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்த்தனை தலமாக உயர்ந்து, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் காணிக்கையாக பொன், வெள்ளி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும், புடவை சாத்துதலும், மொட்டையடித்தல், காது குத்துதல், பால்காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பாகும்.
சண்முகர் சன்னதி இத்திருக்கோவிலில் சண்முகர் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். ஸ்கந்தன் என்றும் முருகன் என்றும் சுப்ரமண்யன் என்றும் சண்முகர் என்றும் போற்றப்படும் குமரக் கடவுள் குன்றிருக்கும் இடமெல்லாம் சண்முகர் ஆணவ, கன்ம, மாயா எனும் மும்மலங்களையும் நீக்கி பணிவு குணத்தை அருளும் இறைவனாக காட்சி தருகிறார். தேர் போன்ற மஞ்சத்தில் பன்னிரெண்டு கரத்தில் ஆயுதங்களுடனும் இருக்கும் கோலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திரத்தன்று இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும். பங்குனி உத்திரத்தன்று இங்கு வெகு சிறப்பாக சண்முகருக்கு விழா நடைபெறுகிறது. இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். முருகன் இங்கும் ஆத்ம ஞானம் தருவதாக ஐதீகம். முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை வாகனத்தில் பங்குனி உத்திர தெப்ப திருவிழாவின் போது சண்முகர் சிறப்பு அலங்காரத்துடன் அருள்காட்சி தருவார்.
அருணகிரிநாதரின் அவதார திருத்தலம் திருவண்ணாமலை, முருகப்பெருமானின் மீது 16,000 பாடல்களை இயற்றியவர். இதில் 1088 சந்தவேறுபாடுகள் உள்ளதாகவும் தெரியவருகிறது. முருகபெருமானினுடைய அடியவருள் முக்கியத்துவம் வாய்ந்தவர். முருகனிடம் இருந்து நேரடியாக ஜெபமாலை பெற்றார். இதற்கான திருப்புகழ் வரிகள். ஜெபமாலை தந்த சந்குருநாதா திருஆவினன் குடி பெருமாளே விராலிமலை வருமாறு அழைத்து அட்டமாசித்திகளை இவருக்கு உபதேசித்தார். பல அற்புதங்கள் செய்த நிலையிலே பிரபுட தேவமகாராஜவுக்கு கண் ஒளி பெறுவதற்காக கிளி உருவம் கொண்டு தேவலோகத்தில் இருந்து சிந்தாமணியை கொணர்ந்தார் கிளிரூபத்தில் இருந்தே கந்தர் அனுபூதி கூறீ முருகபெருமானிடம் இரண்டர கலந்தார்.அருணகிரிநாதர் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. சுவாதி நட்சத்திரத்தில் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம் மற்றும் பஜனைகள் நடத்தப்படுகின்றன.
ஆஞ்சநேயர் சன்னதி இத்திருக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி மேற்கு நோக்கி அமைந்து உள்ளது. ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள அனுமனை வேண்டி எண்ணிய காரியம் நிறைவேறினால், ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நெய்வேத்யமாக படைத்தும், அர்ச்சனை செய்தும், வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வலி வேதனைக்கும் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் அவை விரைவில் குணமாகின்றது. மேலும் பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும், நோய்கள் தீரவும், வாழ்க்கை கீர்த்தி பெறவும், இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
சொக்கநாதர் சன்னதி இத்திருக்கோவிலில் சொக்கநாதர் லிங்கம் மேல் ஐந்து தலை நாகத்துடன் தனிச் சன்னதியாக அமர்ந்து அருள்காட்சி தருகிறார். ஓம் நம சிவாய என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும் போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பொதுவாகவே அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றாலும், எம்பெருமான் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிவன் ஒரு அபிஷேக பிரியர். நெற்றிக் கண்ணால் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்க அபிஷேகத்தை விரும்புவதாகவும் கூறுவர்.
வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சன்னதி இத்திருக்கோவிலில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை உடன் தம்பதி சமேதரராக நின்ற திருமணக் கோலத்தில் அருள் புரிந்து வருகிறார்.
அங்காரகன் சுவாமி நவகிரகங்களுள் தனிச் சிறப்புடைய அங்காரகன் (செவ்வாய்) இத்திருக்கோவிலில் தனிச் சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை உடையவர்கள் திருமணம் தடையின்ற நல்லமுறையில் நடைபெற அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்து, சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்தும், துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் செவ்வாய்தோஷம் நீங்கும். அதனை தொடர்ந்து சிவப்பு அரளி மாலை அணிந்து அங்கு வழங்கப்படும் நிவேதனத்தை தங்களது கரங்களால் பக்தர்களுக்கு வழங்கி கோவிலை வலம் வந்து வழிபட்டு பின்னர் அங்காரகனுக்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபட்டும் தங்களது பிரார்த்தனையினை நிறைவேற்றி வருகின்றனர்.
முருகன்
திருக்கோயில் திருக்குளம் வடபழனி ஆண்டவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம் கிழக்கு கோபுரம் எதிரில் அமைந்துள்ளது. திருக்குளம் நான்குபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாகவும் நடுவில் நீராழி மண்டபத்துடனும் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் தெப்பத்திருநாட்கள் கொண்டாடப்படுகிறது.
நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இத்திருக்கோயிலின் மேற்கு கோபுரம் எதிரில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கிருத்திகை தினங்களில் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ.3500/- கட்டணமாக பெறப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் அன்னதானம் வழங்கிட நிரந்தர கட்டளையாக ரூ.75,000/-ம் கட்டணமாக பெறப்படுகிறது.அன்னதானம் வங்கி கணக்கு எண் அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாக திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் .
வள்ளி மண்டபம் எதிரில்.
மாசிமகம்,வைகாசி விசாகம்,கந்த சஷ்டி,பங்குனி உத்திரம்(தெப்பத் திருவிழா) ஆகிய விழா நாட்களில் திருக்குளமானது திறக்கப்படும்.
இரு சக்கர வாகன நிறுத்தம்
இத்திருக்கோவிலில் அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஆதிபீடம் சன்னதி அருகில்,பக்தர்களுக்கு குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சன்னதி பின்புறம் 2 அறைகள் மற்றும் உற்சவர் சன்னதி பின்புறம் 1அறை உள்ளது
பக்தர்களுக்கு அஞ்சல்துறை மூலம் பிரசாதம் வழங்குதல்.
திருக்கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடம் தற்போது பயன்பாட்டில் இல்லை,இத்திருக்கோவிலில் அலுவலகம் பின்புறம் தற்காலிக முடி காணிக்கை செலுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 2 குளியலறை வசதி உள்ளது.
திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் தற்போது பயன்பாட்டில் இல்லை, 19,5கோடி செலவில் கட்டுமானபணி தொடங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது திருக்கோயிலில் உள்ள அருணகிரிநாதர் மண்டபம் மற்றும் கந்தர் அனுபூதி மண்டபத்தில் 28 தூண்கள் எண்ணிடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. திருமண விண்ணப்பபடிவத்திற்க்கான தொகை-50. திருமணத்திற்க்கான தொகை-5665.
திருக்கோயிலுக்கு சொந்தமான கழிப்பிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை, கட்டுமானபணி தொடங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அன்னதானகூடம் அருகில் உள்ள அலுவலகத்தின் வெளிபுறத்தில் மொபைல் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் இரு வேளை தூய்மை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்மிக நூலகம் மேற்க்கு கோபுரம் எதிரில் உள்ளது இங்கு மிகவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நூலகத்தில் 2900 நூல்கள் உள்ளது.
இந்த கோவிலில், கோவிலுக்கு வெளியே கட்டணமில்லா காலணிகள் பாதுக்கும் வசதி உள்ளது.
சித்த மருத்துவம் இத்திருக்கோவிலில் 24.10.1975-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றைய தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் கட்டணமில்லா சேவையாக அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன் பெறுகிறார்கள். நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் காலத்தில் திருக்கோவிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பு காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை
இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான தங்கரதம் திருக்கோயில் உட்புற வளாகபாதுகாப்பு மையத்தில் அமைந்துள்ளது. சேவார்த்திகள் ரூ.2500- கட்டணம் செலுத்தி தங்கரத உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
இந்த மரத்தேரானது கோவிலின் உட்புறத்தில் அருணகிரிநாதர் சன்னதிக்கு அருகில் உள்ளது.வைகாசி விசாகத்தின் போது சேவார்த்திகள் மரத்தேர் உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
இத்திருக்கோவிலில் சக்கர நாற்காலி வசதி உள்ளது. சக்கர நாற்காலி தேவைக்கு கவுண்டரில் உள்ள நபர்களை அனுகவும்.





