அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோயில், காரமடை, கோவை

Century
15th நூற்றாண்டு
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுரஸ்ர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
காரைமரம்
இது பிரார்த்தனை தலம் ஆகும் வைணவ சம்பிரதாயப்படி பஞ்ச சமஸ்காரங்களை இத்தல ஸ்தலத்தாரிடம் பெற்று அரங்கனுக்கு தாஸராகி பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை ஆகிய பிரார்த்தனைகள் வருடம் தவறாமல் பாரம்பர்யமாய் தாசர்கள் செய்யும் வழிபாடாகும். இவ்வழிபாட்டை இத்தலத்தில் மட்டுமே வெகுசிறப்பாக காணலாம்.
அரங்கநாதா்
கலியுகம் நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் பூர நட்சத்திரத்தில் பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர் ஆண்டாள் எனும் கோதை. ஆழ்வார்களைப் போல திருமாலிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்த ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக அடைய வேண்டி தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாள். திருமால் அடியவரான பெரியாழ்வார் மலர்மாலைகள் கட்டி அதை வடபத்ரசாயி கோயிலுக்குச் சமர்ப்பிப்பது வழக்கம், கட்டி வைத்த மாலைகளைப் பெரியாழ்வாருக்கு தெரியாமல் தான் அணிந்து கொள்வாள், அந்த அழகைக் கண்ணாடியில் பார்த்து அதிசயப்பட்ட பிறகு மாலையைச் செண்டாகச் சுற்றி பூக்கூடையை வைத்து விடுவது வழக்கம். ஒரு நாள் அதைத் தெரிந்த கொண்ட பெரியாழ்வார் கோபம் கொண்டார். ஆண்டாள் மீது வருத்தம் கொண்டார். அன்று இரவு அவரது கனவில் திருமால் தோன்றி ஆழ்வானே ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. ஆகவே தினமும் அவள் சூடி களைந்த மாலையை எனக்குக் கொண்டு வாரும் என்றார் பகவான். அன்று முதல் அவளை ஆண்டாள் என்றும், சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் பெயரிட்டு அழைத்தார்.
உபசன்னதி பெயர் அருள்மிகு அரங்கநாயகி தாயார் சன்னதி கருவறை வடிவம் - சதுர வடிவம் சிறப்பு - ஆன்மிகச் சுற்றுலா உபசன்னதி விவரம் அரங்கநாயகி தாயார் சுவாமி சன்னதியில் வலப்புறம் தனி சன்னதியாக அமையப்பெற்றுள்ளது.
உபசன்னதி பெயர் அருள்மிகு 12 ஆழ்வார் சன்னதி கருவறை வடிவம் சதுர வடிவம் சிறப்பு - ஆன்மிகச் சுற்றுலா
கொங்கு நாட்டிற்கு வியாசராயர் விஜயம் செய்த போது கொங்கு பகுதியில் பல இடங்களில் அனுமன் புடைப்பு சின்னத்தை பிரதிஷ்டை செய்தார். ஒரு கரத்தில் சௌந்திகா புஷ்பம், மறுகரம் அபயஹஸ்தம், வாலில் மணியுடன் சிரத்திற்கு மேல் வால் நுனி வரும் படியும் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ஆஞ்சநேயர் இன்றும் இங்கு அருள்பாலித்து வருகிறார். காரமடை, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் விக்ரஹம் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டது, இத்திருக்கோயில் அருள்மிகு ஆஞ்சநேயர் தனி சன்னதி உள்ளது. வீர ஆஞ்சநேயர் என்று கூறுவார். ஆஞ்சநேயர் உடம்பு பாகம் வடக்கு திசையை நோக்கியும், ஆஞ்சநேயர் முகம் மட்டும் பெருமாளைப் பார்த்தபடி மேற்கு திசையில் அமைந்து இருப்பது போல் காட்சியளிக்கிறது.
உபசன்னதி பெயர் - அருள்மிகு இராமனுஜர் கருவறை வடிவம் சதுர வடிவம் சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா உபசன்னதி விவரம் வைணவ தழைக்க வந்த மகான் ஸ்ரீ இரானுஜர் ஸ்ரீ பெரும் புதூரில் கலியுகம் 4118 சாலிவாகன சகாப்தம் 940 ஆவது பிங்கள வருடம் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். இத்திருக்கோயில் இராமனுஜர் பிறந்த நாளன்று இராமனுஜர் ஜெயந்தி விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதான சன்னதிக்குத் வடப்புறமாக உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி அருள்மிகு இராமனுஜர் சன்னதி அமைந்துள்ளது.
உபசன்னதி பெயர் அருள்மிகு 12 ஆழ்வார் சன்னதி கருவறை வடிவம் சதுர வடிவம் சிறப்பு - ஆன்மிகச் சுற்றுலா
ஒவ்வொரு ஆண்டு மாசி மாதம் தேர்த்திருவிழா 11ம் நாள் தெப்போற்சவம் நடைபெறும்
தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
வசதிகளின் எண்ணிக்கை - 1 திருக்கோயில் முன்புறம் மற்றும் திருக்கோயில் அம்மன் சன்னதி அருகில் வசதிகள் விவரம் - 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயில் வெளிபிரகாரத்தில் குடிநீர் வசதி ஒன்றும் உள்ளது
வசதிகளின் எண்ணிக்கை - 4 வசதி அமைவிடம் - திருக்கோயில் அலுவலகத்திற்கு முன்புறம் வசதிகள் விவரம் திருக்கோயில் வருகை புரிகின்ற மாற்றுத் திறனாளிக்களுக்குத் திருக்கோயில் உட்புறம் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பயன்பாட்டிற்காக இரு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முடிகாணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்கு முடிகாணிக்கை மண்டபம் உள்ளது.
திருக்கோயில் வசந்த மண்டபம் அருகில் பாலூட்டும் அறை ஒன்று உள்ளது
யாகசாலை மண்டபம் அருகில்
திருக்கோயிலில் பெண்களுக்கு நான்கு கழிவறையம், ஆண்களுக்கு நான்கு கழிவறையும் உள்ளது.
இல்லை
உள்ளது





