அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், உப்பிலிபாளையம், கோவை

Century
21st நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
தொரட்டி மரம்
அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திருத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்து அம்மனின் தீர்த்தத்தை அருந்தக் கொடுத்தால் அம்மை நோய் குணமாகும். இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை தீரும். . மேலும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் சன்னதியானது வேப்ப மரமும் , அரசமரமும் ஒன்றாக இணைந்த இடத்தில் உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும். மேலும் இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற தங்கரத உலா நடத்துவது சிறப்பாகும். இத்திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப்பெருந்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு அன்னை தண்டுமாரியம்மனுக்கு நேர்த்தி கடனாக அக்கினிச்சட்டி ஏந்தி சக்திகரகத்துடன் ஊர்வலம் வந்து இத்திருக்கோயிலை அடைவது இத்திருத்தலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தண்டுமாரியம்மன்
தண்டுமாரி அம்மன் சன்னதிக்கு மேற்புறம் அரசமரத்தின் கீழ் அருள்மிகு கற்பக விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகருக்கு நடைபெறும் சங்கடகர சதுர்த்தி பூஜை சங்கடங்களை போக்கும்,
மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது ரூ.25000.00 செலுத்தி வாழ்நாள் முழுமையும் நீங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினா் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றிக்கு அன்னதானமிட ரூ.2500.00 அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம்.
பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.1000/- செலுத்தி மாலை 7.00 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இத்திருக்கோயில் நுழைவாயிலில் பக்தர்களின் வசதிக்காக இலவச மிதியடி பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குளியலறை திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
நூலகம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவைக்கபடுகிறது.குறிப்பாக தினசரி நாளிதழ் , ஆன்மிக புத்தகம், திருக்குறள் மற்றும் திருமறை புத்தகங்கள் உள்ளன.
திருக்கோயில் வசந்த மண்டபத்தில் குடிநீர் வசதி பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ளது
முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக மொட்டை அடிக்கும் நபர் உள்ளார்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கர நாற்காலி சேவை வழங்கப்படுகிறது.





