அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம்

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
இக்கோயிலில் தம்பதிகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலம் கிடைக்கவும், நோய் தீர்க்கும் பரிகாரமாகவும் பல்வேறு ஹோமங்கள் (ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் மற்றும் பூர்ணாபிஷேகம்) நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஹோமத்திற்கும் கட்டணம் ரூ.7500/- மட்டுமே.
ஒவ்வொரு குரு பெயர்ச்சியின் போதும் இலட்சார்ச்சனையுடன் பரிகார அர்ச்சனை மேற்கொள்ளப்படும்
ஆயில் நீடிக்க இத்திருக்கோயிலில் தம்பதியர்களுக்கு ஆயில் ஹோமம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான கட்டணம் ரூ.7500 மட்டும்.
கஜ சம்ஹாரம் என்பது சோழர் காலத்தில் பிரபலமடைந்த சிவபெருமானின் உக்கிரமான வடிவம். கஜ சம்ஹார சிவன் என்றால் யானையைக் கொல்பவர் என்று பொருள்படும். மேலும் அவரை ஆணவம் அழிப்பவராகவும், ஆன்மா விமோசனம் செய்பவராகவும் குறிப்பிடப்படுகிறது
ஒரு பிச்சைக்காரன் வடிவில் தோன்றிய சிவபெருமான், பெருமையும் ஆணவமும் எந்த நோக்கத்திற்கும் உதவாது என்பதை அனைத்து ரிஷிகளுக்கும் உணர்த்த விரும்பினார்.
தமிழ் கடவுளான முருகன் (ஆறுமுக சுப்ரமணியர்) மயில் வாகனம், பன்னிரண்டு கைகள், ஐந்து தெரியும் முகங்களுடனும் மற்றும் ஒரு கண்ணுக்கு தெரியாத முகத்துடனும் காட்சியளிக்கிறார்
திருவாலங்காட்டில் சிவபெருமானுடன் நடந்த நடன போட்டியில் காளியின் தோல்வி நிலை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது, அங்கு சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தினார்
ஊர்த்துவ என்ற சொல்லுக்கு, மேல் நோக்கி என்று பொருள். காளிதேவியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு வலது காலை தன் செவி வரைக்கும் உயர்த்தியபடி நடனமாடினார் நடராஜர் பெருமான். பிரம்மாவின் சிரசை எடுப்பதற்கு முன்னதாக உள்ள நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரம்மா ஐந்து தலைகளுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
நர்த்தன கணபதி எட்டு திருக்கரங்களுடன் நடனம் ஆடும் தோரணையில் இருக்கிறார்.
தட்சனின் யாகத்தையும், அசுரர்களையும் வதைப்பதற்காக சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.
தட்சனின் யாகத்தையும், அசுரர்களையும் வதைப்பதற்காக சிவ பெருமானால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் கடந்த 15.09.2015ம் தேதி முதல் அன்னதானத்திட்டம் துவங்கப்பட்டு நாள் தோறும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரிசி சாதம், சாம்பார், ரசம், பொரியல், மோர், ஆகியவை பரிமாறப்பட்டு வருகிறது. பயனாளிகள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 நபர்கள் மட்டும். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.1750/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானம் செய்யலாம். நன்கொடையாளர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80 ஜி யின்படி விலக்கு கோர அனுமதிக்கப்படுகிறார்கள்
ஹோம பூஜை செய்தவர்கள் கலச தீர்த்த அபிஷேகம் செய்த பின்பு உடை மாற்றுவதற்கான அறைகள் இரண்டு உள்ளது
நுழைவாயில் பக்கத்தில் திருக்கோயில் அலுவலகத்தின் அருகில் ஒரு குடிநீர் சுத்திகரிக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் தேவைப்படும் பத்தர்களுக்காக நான்கு சக்கர நாற்காலிகள் இரண்டு உள்ளது
1 வெஷ்டன் 2 இந்தியன் வகை களிப்பறைகள் உள்ளது




