அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன் (ம) விநாயகர் திருக்கோயில், Periyanaickenpalayam, Coimbatore

Century
21st நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
no
மாரியம்மையின் இயல்பு தொற்று நோய் தீர்த்தல், கண்ணோய் தீர்த்தல் வெப்பு நோய் தீர்ப்பவளாய், வேப்பிலை கைக் கொண்டவளாய் கொப்புளம் அம்மையெனும் கொடியநோய் தவிர்ப்பவளாய் எப்பொழுதும் கருணைஉளம் இயல்பாகப் பெற்றவளாய். செப்பரிய மேன்மையளாய்த் திகழ் சக்தி மாரியம்மை என்பது பாடல் மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள். ஆகவே. மழைவரம் அளித்தலும், அதனால் ஏர்வளம் பெருகச் செய்தலும் கிராமதேவதையான இவள் செய்கையாம். ஊர்களிலும் நகர்களிலும் உயர்வு பெருங் கோயில்கொண்டு சீர்உலவு கிராமத்தின் சிறப்பு மிக்க தேவதையாய் ஏர்பெறவே எழுந்தருளி இலங்கும் அன்னை பராசக்தி பேர்பரவ வான்மழையைப் பெய்வித்துக் காவல் செய்வாள். கண்நோய் தீர்த்தலும் இந்த அம்பிகையின் செயல் கண்ணிழந்தவர் கண்ணொளி பெருவதும் வாய்ச்சொல் எண்ணிழந்தவர் இன்னுரை பகர்வதும் அறிவுக் திண்ணிழந்தவர் வைத்தியம் தெளிவதும் சிறப்பு நண்ணிவந்தவர் நலம் பலப் பெருவதும் இத்தலமே
அருள்மிகு விநாயகர்
மாகாளியம்மன்
மாரியம்மன்
இத்திருக்கோவிலில் 2012ம் வருடம் முதல் அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு அன்னதான வழங்க ரூ.1750/-
நன்கொடை
தங்கம் வெள்ளி இனங்கள் மற்றும் அன்னதான உபய பொருட்கள்
திருக்கோயிலின் பின்புறம் நான்கு கழிவறைகள் அமைந்துள்ளது.
திருக்கோயிலின் பின்புறம் நான்கு ஒரு குளியல் அறை அமைந்துள்ளது.
திருக்கோயில் முன்புறம் ஒரு ஆர் ஓ தண்ணீர் டேங்க் உள்ளது





