அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், Sulakkal

Century
21st நூற்றாண்டு
Dynasty / Ruling Period
நாயக்கர்
Praised By
-
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
மாவிலிங்கம் மரம்
மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து மகமாயியை வழிபட்டு தல விருட்சமான மாவிலிங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சியம் என்பது ஐதீகம்.
கண் சம்பந்தப்பட்ட நோயை விரைவில் தீர்த்து வைப்பது சூலக்கல் மாரியின் தனி சிறப்பாகும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சூலக்கல் மாரியம்மன் சன்னதியில் தங்கி காலை, மாலை இரு நேரமும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கண்ணில் இட்டுக் கொள்கின்றனர். அம்மனின் அருளால் கண்நோய் விரைவில் குணமாகிறது.
மாரியம்மன்
மாரியம்மனுக்கு இடது புறம் கிழக்கு திசை நோக்கி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலி்ல் 14.04.2003ம் நாள் முதல் துவங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 நபா்களுக்கு ரூ.1250/-ம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் 100 நபா்களுக்கு ரூ.2500/-ம் செலுத்தி ஒரு நாள் அன்னதானம் செய்யலாம். நிரந்தர கட்டளைதாரா் ஆக விரும்பும் அன்பா்கள் ரூ.25000/- செலுத்தினால் கிடைக்கப்பெறும் வட்டி தொகையில் ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பும் நாளில் 50 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இத்திட்டத்திற்கு சட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமான வாிவிலக்கு உண்டு.
இத்திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் திருக்கோயில் அலுவகத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குளியல் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் மண்டபம் அருகில் சுத்திகாிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.




