அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர்

Century
முதல் நூற்றாண்டுக்கு முன்பு
Dynasty / Ruling Period
சோழன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பன்னீர் மரம்
இத்தலம் பிறவாநெறித்தலம் என்ற சிறப்பு பெயர் பெற்ற தலமாகும். இத்தலத்தில் இறைவன் காமதேனுவிற்கு முக்தி அளித்து பிரம்மா விஷ்ணு, துர்க்கை மற்றும் காலவமுனிவர் ஆகியோருக்கு ஆனந்த தாண்டவ காட்சியை அருள்பாலித்த தலமாகும். பிறதலங்களிலே பாடல்பெற்ற தேவாரங்களிலே மூவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இதனை வைப்புத் தலம் என்று அழைப்பர். காமதேனுவிற்கு முக்கி அளித்தற்கு சாட்சியாக இறைவனால் அருளப்பெற்ற பிறவாபுளி, இறவாப்பனை மற்றும் காஞ்சிமாநதி ஆகியவை இன்றும் உள்ளன. இங்கு காமதேனுவின் வழிபாட்டினை இறைவன் ஏற்றதால், இவ்வூரில் பசுவின் சாணம் புழுப்பதில்லை. பிறவாப்புளி என்ற இம்மரத்தின் விதைகள் மீண்டும் முளைப்பதில்லை. இது இத்தலத்தில் இறைவனை தரிசித்த பக்தர்களுக்கும் மற்றும் இங்கு வாழ்ந்து இறப்போருக்கு இனி மீண்டும் பிறப்பில்லை என்பதற்கு சாட்சியாக உள்ளது. இறவாப்பனை என்னும் இப்பனை மரம் அமைந்துள்ள வடகைலாயம் திருக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம் சகலவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தியுடையது. இத்தலம் முக்தி தலம் என்பதற்கு சாட்சியாக இங்கு இறப்போர் வலது காது வான்நோக்கி இருக்குமாறு இறப்பர். காஞ்சிமாநதி என்று அழைக்கப்படும் நொய்யல் நதி பிறவி பிணியும் மற்றும் ஆன்மாக்களின் சகல பாவங்களையும் நீக்கும் புனித நதியாக பேரூர் புராணத்திலே கச்சியப்ப முனிவரால் பாடப்பெற்றுள்ளது. ஆகையால் இந்நதிக்கரையில் இறந்த முன்னோர்க்கு இறுதி கடன்களும் மற்றும் பரிகாரங்களும் செய்யப்படுகிறது. இங்கு முன்னோர்களின் அஸ்திகளை நொய்யல் நதியில் கரைத்து முக்தி பெரும் பொருட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருக்கோயிலின் வடமேற்குப் பக்கம் அமைந்துள்ள திருநீர்மேடு எனும் இடத்தில் பிரம்மா சிவனை குறித்து யாகம் செய்ததால், பிரம்ம குண்டம் எனும் பெயர் பெற்றது. இவ்விடத்தில் மண் திருநீறாக காட்சியளிக்கிறது. இது சகல பாவங்களையும் நீக்கும் தன்மையுடையது. இதனை ஆற்றங்கரை பிள்ளையார் கோயிலில் இன்றளவும் பிரசாதமாக வழங்குகின்றனர். தொல்பொருள் துறையில் அகழ்வாராய்ச்சியில் பேரூர் மற்றும் அதன் மேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி மற்றும் ரோமானிய காசுகள் ஆகியவை இத்தலத்தின் தொன்மையையும், சிறப்புகளையும் கூறுவதாக உள்ளது.
இத்தலத்தில் ஸ்தல விருட்சம் பன்னீர் மரமாகும். இம்மரம் இறைதன்மையுடையது. இம்மரம் தெய்வீக அருளை மக்களுக்கு வழங்குகிறது.
அம்பாள் சன்னதியின் முன்புறம் அமைந்துள்ளது.
அருள்மிகு அறுபத்து மூவர் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு காசிவிசாலாட்சி சன்னதி வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு சண்டிகேஸ்வரி சன்னதி வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு சந்திரன் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு சப்தலிங்கம் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு விநாயகர் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு நவக்கிரக சன்னதி கொடிமரம் அருகில் அமைந்துள்ளது.
அருள்மிகு துர்க்கை அம்மன் சன்னதி வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு சூரியன் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு நந்தி மண்டபம் சன்னதி வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு கன்னிமூல விநாயகர் வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு சண்டிகேஸ்வரர் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு விநாயகர் சன்னதி கொடிமரம் அருகில் அமைந்துள்ளது.
அருள்மிகு சண்முகர் சன்னதி கொடிமரம் அருகில் அமைந்துள்ளது.
அருள்மிகு தட்சிணாமூர்த்தி சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு பைரவர் சன்னதி உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு காசிவிஸ்வநாதர் சன்னதி வெளிபிரகாரத்தில் அமைந்துள்ளது
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சன்னதி மேற்கு நோக்கி அழகிய கொடிமரத்துடன் உள்ளது. இச்சன்னதி பட்டீசுவரர் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. இச்சன்னதியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறியதாக இரண்டு சன்னதிகள் உள்ளன. அருணகிரிநாதர் தீரா பிணி தீர எனத் துவங்கும் திருப்புகழை பாடியுள்ளார். மேலும் கோரக்கர் சித்தர் இச்சன்னதி முருகனை வழிபட்டு தவம் இயற்றியதாக செவி வழி செய்திகள் உள்ளது.
கனகசபை சுமார் 400 வருடங்கள் பழமையானது. இச்சன்னதி அழாகாத்திரி நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் மைத்துனர் ஆவார். இதில் அமைந்துள்ள சிற்பங்கள், கற்சங்கிலி மற்றும் ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை. மேலும் 8 தூண்களுடன் அமைந்த சிற்பங்கள் உலகச் சிறப்பு வாய்ந்தவை. கற்பகிரகத்தில் உள்ளே அமைந்துள்ள ஐந்து படிகள் நமசிவய எனும் ஐந்து எழுத்தை குறிப்பதாகவும், நான்கு தூண்கள் நான்கு வேதங்களை குறிப்பதாகவும், ஒன்பது சன்னல்கள் நவகிரகங்களை குறிப்பதாகவும் அமைத்துள்ளனர். மகாமண்டபத்தின் உள்ளே 36 தூண்கள் சைவ தத்துவதங்களை உணர்த்தும் பொருட்டு அமைத்துள்ளனர். மண்டபத்தின் மேற்கூரையில் எண்திக்கு பாலகர்களுடன் அமைந்த கற்சங்கிலிகள் நமது நாட்டின் சிற்பக்கலைக்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேற்கூரையில் வரையப்பட்டுள்ள எட்டு அட்டவீர தலங்களின் இறைவனின் வடிவமும் மற்றும் ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை.
அருள்மிகு பச்சைநாயகி அம்மன் சன்னதி சுமார் 900 வருடங்கள் பழமையானது. இச்சன்னதி முன்புறம் வலது பக்கம் ஸ்ரீ துர்க்கை சன்னதியும், இடது பக்கம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் சன்னதியும் மகாமண்டபத்தில் உள்ளே பள்ளியறையும் அமைந்துள்ளது. இந்த சன்னதியின் சிறப்புகளில் மிக முக்கியமான துர்க்கை, நடராஜப் பெருமானின் திருவடியை எப்பொழுதும் தரிக்கும் வண்ணம் அமைத்துள்ளனர். இதனை கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோயிலின் முன்புற மைதானத்தில் திருக்குளம் ஒன்று உள்ளது.
திருக்கோயில் இராஜகோபுரம் நுழைவுவாயில் வரையப்பட்டுள்ளது.
திருக்கோயில் இராஜகோபுரம் நுழைவுவாயில் வரையப்பட்டுள்ளது.
திருக்கோயில் இராஜகோபுரம் நுழைவுவாயில் வரையப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் நுழைவுவாயில் மேற்கூரையில் 63 நாயன்மார்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
அறுபத்து மூவர் ஓவியங்கள் மற்றும் புராணப்படல ஓவியங்கள் மூலிகை வர்ண பூச்சுகளால் வரையப்பட்டுள்ளது. ஸ்ரீ நடராஜர் சன்னதியின் மேற்கூரை விதானத்தில் சிவபெருமானின் எட்டு பராக்கிரமங்களை குறித்த அஷ்ட வீரட்ட தல ஓவியம் வரையப்பட்டுள்ளது.
தட்சனின் யாகமும், அசுரர்களையும் வதைப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.
அகோர வீரபத்திரர், தட்சன் மற்றும் அசுரர்களை வதம் செய்ய இறைவனால் படைக்கப்பட்டவர். இவரது திருமேனியில் பலவிதமான போர் கருவிகளின் பயன்பாடு காட்டபப்பட்டுள்ளது சிறப்பு.
ஆறுமுக பெருமான் மயில் மேல் அமர்ந்த திருக்கோலம். ஐந்து முகங்களும், பன்னிரண்டு கரங்களும் காட்டப்பட்டுள்ளது. ஆறாவது முகத்தை பக்தர்கள் மனக்கண்ணில் தியானம் செய்து பார்க்க வேண்டும்,.
நடன போட்டியில் காளியின் தோல்வி நிலைளை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
கஜமுக அசுரனை வதம் செய்த காட்சி சிற்பி தன் கற்பனையில் சிவபெருமான் யானையின் தோலை போர்வையாக போர்த்திய வண்ணம் காட்டியுள்ளார். இதனை 1975-ம் வருடம் இந்திய அஞ்சல்துறை தபால் வில்லையாக வெயிட்டது மிக சிறப்பாகும்.
இறைவன் காரைக்கால் அம்மையாருக்காக ஆடிய நடனமாகும்.இந்நடனம் திருவாலங்காட்டில்பார்வதியை வெல்லும் பொருட்டு வலது காலை தலை வரை தூக்கி ஆடப்பட்டது. இச்சிற்பத்தில் மிக அழகிய கிரிடமும் பதினாறு கரங்களும் காட்டப்பட்டுள்ளது சிறப்பாகும்.
தாருக வனத்து ரிஷிகளின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு இறைவன் பிச்சாடனர் கோலத்தில் காட்சியளிக்கின்றார். அதன் தொடர்புடைய சிற்பங்கள் தூணில் பின்புறம் காட்டப்பட்டுள்ளது,
நர்த்தன கணபதி மூஷிகத்தின் காதுகளின் மேல் ஒரு காலை ஊன்றிய வண்ணம் நடனமாடும் வகையில் எட்டுகரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தினசரி திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 15.08.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் (..127(5)/11-12/-//2012-13 : 09.08.2012) கீழ் வரி விலக்கும் பெறலாம். 3500(ஒரு நாள்) : 100 நபர்கள் 70,000 : டெபாசிட் தொகை
திருக்கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் விருப்பப்படி திருக்கோயில் யானை மற்றும் கோசாலை கால்நடைகள் பராமரிப்பிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல்வழி பிரசாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு திருக்கோயிலில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு அருகாமையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேட்டரி இலவசமாக கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
கருணை இல்லம் பேரூரில் அமைந்துள்ளது. கருணை இல்லம் அமைந்துள்ள கட்டிடம் நவீன கான்கிரீட் கட்டிடம் ஆகும்.
மாற்று திறனாளிகள் தரிசனம் செய்வதற்காக இரண்டு சக்கர நாற்காலிகள் உள்ளது.
திருக்கோயிலில் நூலகம் ஒன்று உள்ளது. இந்நூலகத்தில் திருக்கோயில் தலவரலாறு மற்றும் ஆன்மீகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் நூல்கள் உள்ளது.
திருக்கோயில் முன்புற மைதானத்தில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுஏலம் மூலம் விடப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணி பாதுகாக்க தனியாக இராஜகோபுரம் முன்புறம் இலவச காலணி பாதுகாப்பு அறை உள்ளது.
திருக்கோயிலில் நடராஜர் சன்னதி, பெருமாள் சன்னதி மற்றும் பாலதண்டாயுதபாணி சன்னதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.





