Home/Temples/TN/Coimbatore/Arulmigu Sangameswarar Temple, Townhall, Coimbatore - 641001
Heritage Templehrce

Arulmigu Sangameswarar Temple, Townhall, Coimbatore - 641001

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை

🕉️ சங்கமேஸ்வரர் Coimbatore, TN
Arulmigu Sangameswarar Temple, Townhall, Coimbatore - 641001 — image 1
1 / 4
Also known as:கோட்டீஸ்வரன்

History & Architecture

Century

19th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

பிற தமிழ் புலவர்கள்

Poet Saint

அருணகிரிநாதர்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

அஷ்டாங்க வைமானம்

Sacred Tree (Sthalavriksha)

மகிழமரம்

Pooja Timings

உஷக்கால பூஜை (பூக்கள்)06:30 AM to 07:00 AM IST
காலசந்தி பூஜை (வில்வம்)08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை (வில்வம் பூக்கள்)11:30 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை (வில்வம், அருகம்புல், நந்தியா வட்டம்)05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (பூக்கள், வில்வம், அருகம்புல்)08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

முருகப்பெருமான் திருவுருவத்திற்கு முன்பு கீழே பாலதண்டாயுதபானி சுவாமி திருஉருவம் வீற்று அருள்பாலிக்கிறார். ஒரே கருவறையில் இரண்டு சுவாமி முகுர்த்தங்கள் வீற்று இருப்பது அரிதான ஒன்றும் கூட. தமிழ்நாட்டிலே நான்கு ஸ்தலங்களில் மட்டுமே முருகப்பெருமானுக்கு ஐராவதம் எனப்படும் வெள்ளையானை வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 1. சுவாமிமலை 2. திருத்தணி 3. உத்திரமேரூர் (காஞ்சிபுரம் அருகில்) 4. நமது திருக்கோயில் (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்) செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு சத்ருசம்கார திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மண் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.திரிசதி அர்ச்சனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் மந்திரம் தந்திரம் எந்திரம் மற்றும் ஒளடிதம் எனப்படும் வைப்பு மருந்து ஆகியவற்றால் வரக்கூடிய எதிர்மறையான ஆபிச்சரமமான விஷயங்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவும் மிகவும் பயனளிக்கிறது. இறைவி அகிலாண்டேஸ்வரி சன்னதியில் பிரதி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சக்கர பூஜையும், கல்யாணம் ஆகாத ஆடவர், பெண்களுக்காக சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்கள் நடைபெறுகிறது. இதன்மூலம் திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தடை நிவர்த்தியாகியும், அன்யோன்யம் இல்லாத தம்பதியினர் இந்த சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்களில் கலந்து கொள்வதால் அன்யோன்யம் அதிகரித்து இல்வாழ்க்கையில் உமையோர் பாகனை போல் பிரியாமல் மனம்ஒத்த தம்பதியராக வாழ்வார்கள் என்பது ஐதீகம். பிரதி பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக செய்யப்பட்டு கலந்து கொள்ளும் அனைத்து சுமங்கலிகளுக்கும் சௌபாக்கிய திரவியங்களுடன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. இறைவன் சன்னிதானத்தில் பிரதி சோமவாரத்திலும் எம்பெருமானுக்கு பிரதி பிரதோஷகாலங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது. விஷேச தினங்களில் பஞ்சமுகா அர்ச்சனை செய்யப்படுகிறது அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனோடு தேவ, ரிஷி, கோ, குரு, கோப சாபங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டாக பிரதிதினமும் தாராபிஷேகம் செய்வதுண்டு.

Services

நன்கொடை

நன்கொடை சேவை

அன்னதானம்

இத்திருக்கோவிலில் 2012ம் வருடம் முதல் அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு அன்னதான வழங்க ரூ.1750/-

Immovable Property

கேட்பு வசூல் நிலுவை பரிவர்த்தனைகள்

Facilities

கழிவறை வசதி

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு டாய்லெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடி தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது

குளியல் அறை வசதி

இந்த கோவிலின் மேற்கு புறத்தில் 1 பாத்ரூம் வசதி உள்ளது

More Temples Nearby

View all →