அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி

Century
19th - 20th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
கஜமுக விமானம்
வேண்டினார் விருப்பமெல்லாம் நிறைவேறும் ஈச்சனாரி விநாயகர் தம் தாள் பணிந்தால். தன் எண்ணங்கள் நிறைவேறியதும், கணபதி ஹோமம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து தமது நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் புதிய வாகன பூஜை, புதிய கணக்கு பூஜை இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
பக்தர்கள் தங்களது நன்கொடைகளை ஆன்லைன் மூலமாகவும் அல்லது வங்கி வரைவோலை, காசோலைகளாக, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
இத்திருக்கோயிலில் கடந்த 23.03.2002-ம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள் தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 200 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.7,000/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம்.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80ஜி உண்டு.
பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் வழி பிரசாதம் நடை முறைப்படுத்தப்பட்டு ஆன் லைன் மூலமாக பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான நவீன கழிவறை வசதி திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு 1) அன்னதானம் மண்டபம் அருகில் 2) வெளிபிரகார மண்டபத்தில் தங்கத்தேர் அறை முன்பும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.2௦௦௦/- செலுத்தி மாலை 7.15 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இத்திருக்கோயில் நுழைவாயிலின் வடக்குபுறம் பக்தர்களின் வசதிக்காக இலவச மிதியடி பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கர நாற்காலி சேவை வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குளியலறை திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
இந்து சமயம் சார்ந்த மற்றும் திருகோயில் வரலாற்று புத்தகம் உள்ளது





