Home/Temples/TN/Cuddalore/Arulmigu Kolanciyappar Temple, Manavalanallur - 606003
hrce

Arulmigu Kolanciyappar Temple, Manavalanallur - 606003

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்

🕉️ கொளஞ்சியப்பர் Cuddalore, TN
Arulmigu Kolanciyappar Temple, Manavalanallur - 606003 — image 1
1 / 4
Also known as:கொளஞ்சியப்பர்

History & Architecture

Century

16th - 17th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சேரன், மற்றவர்கள்

Praised By

இல்லை

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

முக்கோண வடிவம்

Vimanam Type

இதர விமானம்

Sacred Tree (Sthalavriksha)

கொளஞ்சி மரம்

Pooja Timings

பள்ளியறை பூஜை (மலர்)06:00 AM to 08:00 AM IST
காலசந்தி பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)07:00 AM to 07:30 AM IST
உச்சிக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)11:30 AM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)04:30 PM to 05:00 PM IST
அர்த்தஜாம பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்)07:00 PM to 08:00 PM IST

Temple Speciality

பரிகாரம்

இத்திருக்கோயில் கடலூர் மாவட்டத்த்தில் பிரசித்தி பெற்ற முருகன் குடிகொண்ட பிரார்த்தனை திருத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சேவார்த்திகள் தங்களின் எந்தவித நியாயமான கோரிக்கைகளையும் எழுத்து மூலம் பிராது கட்டி, கட்டிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் முழுவதுமாக நிவர்த்தி பெறுவதும், கோரிக்கைகள் நிறைவேறியவர்கள் சுவாமியிடம் தாம் கொடுத்த பிராதினை திரும்ப பெற்றுக்கொள்வதும் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. மேலும், தீராத நோய் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்தும், மேற்படி சன்னதியில் பூஜித்து வழங்கும் வேப்பெண்ணையினை உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணம் அடைந்து செல்வதும் இத்தலத்துக்கு மேலும் சிறப்பூட்டுகிறது. வேண்டுதல் சேவார்த்திகள் தம் குறைதீரப் பிரார்த்திக்கொள்வதும், குறைகள் முற்றும் தீர்ந்து நிறைவு அடைந்து திருக்கோயிலில் தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கம், தானியங்கள், கால்நடைகள் போன்றவற்றை தம் நேர்த்திக்கடனாக செலுத்துதலும், இத்தலத்திற்கு சிறப்பூட்டுகிறது. நாகன் கண்ணப்பரை புதல்வனாகப் பெறுவதற்கு முருகப் பெருமானுக்கு &ldquoவாரணச் சேவலோடு வரிமயில் குலங்கள் விட்டான்&rdquo என்ற சேக்கிழார் வாக்கின்படி இன்றைக்கும் மக்கள் சேவலையும் தன் காணிக்கைகளாக விடுகின்றனர்.

Services

தேர் முன்பதிவு

வெள்ளி ரதம் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலின் பால் அளவிளா பற்றுகொண்ட அருளாளர்களின் பொருட்கருணையோடு ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டு திருக்கோயிலில் உள்ளது. சேவார்த்திகள் தாங்கள் விரும்பும் சுபநாட்களில் ரூ.1,500/- மட்டும் கட்டணமாக செலுத்தி திருக்கோயில் முறைப்படி வெள்ளித்தேர் உலா புறப்பாடு செய்து வருகிறார்கள்.

நன்கொடை

நன்கொடை: ரொக்கம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களில்), பண ஆணைகள், தபால் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராஃப்ட்கள், டெபிட் / கிரெடிட் கார்டுகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த நன்கொடைத் தொகை கோயிலின் தினசரி நிர்வாகத்திற்கும், பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அன்னதானம்

இத்திருக்கோயிலில் ஆகஸ்ட் 2002 முதல் அன்னதானத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டம் நாள் தோறும் 50 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அருள் உள்ளம் கொண்ட இறையன்பர்கள் அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.20000/-(இருபதாயிரம் ரூபாய்) செலுத்தி (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.1,750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (80ஜி), உண்டு.

Facilities

தங்குமிட வசதி

இத்திருக்கோயிலில் சேவார்த்த்திகள் தங்கு விடுதி தற்சமயம் பழுதடைந்துள்ளது. பழுதுநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கல்யாண மண்டபம்

திருக்கோயிலில் குறைந்த கட்டணத்தில் ஒரு திருமண மண்டபம்

கழிவறை வசதி

-

குளியல் அறை வசதி

சேவார்த்திகள் வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட குளியல் அறைகள்

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

சேவார்த்திகள் வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட குளிர்ந்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

சக்கர நாற்காலி

சேவார்த்திகள் வசதிக்காக சக்கர நாற்காலி உள்ளது.

திருமணம் நடத்துதல்

இத்திருக்கோயிலில் திருமணம் செய்தல் சுபகாரியங்கள் பெருமளவில் நடைபெறுவதும் இத்திருக்கோயின் தனிச்சிறப்பாக உள்ளது. மேலும், தற்பொழுது தமிழக அரசு சட்டமன்ற அறிவிப்பு படி ஆண்டுக்கு 5 இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு திருக்கோயில் அலுவகத்தை அணுகவும் (இலவச திருமணம் நடைபெறும் நாள் நிபந்தனைக்கு உட்பட்டது)

நூலக வசதி

-

வாகன நிறுத்தம்

-

வெள்ளித் தேர்

-

முடி காணிக்கை வசதி

-

More Temples Nearby

View all →