
Century
19th நூற்றாண்டு
ஆண்டு திருவிழாவாக கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது காலையில் திருமணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார் கிருஷ்ணர் மறுநாள் நடக்கும் உறியடி உற்சவத்தில் சுற்று வட்டார கிராம மக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் மூலவர் கிருஷ்ணனுக்கு வெண்ணை காப்பு சாத்துவார்கள் அதிலிருந்து சிறிது வெண்ணையை எடுத்து வெற்றிலையில் மடித்து கொடுப்பார்கள் அதையே பிரசாதமாக பெற்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே என்று சொல்லியபடி தம்பதியர் இருவரும் சாப்பிட விரைவில் குழந்தை பேறு கிட்டும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து குறைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தவுடன் தம்பதி வந்து நேர்த்திக் கடனாக திருமஞ்சனம் செய்து வருகிறார்கள் இவ் ஆலயத்தில் அமர்ந்து கண்மூடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று மாதவன் திரு நாமத்தை 108 முறை சொன்னால் நம் மனக் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை
இல்லை
இல்லை
நார்த்தனா கலிங்கர்
கோயில் தொட்டி





