
Century
15th நூற்றாண்டு
தல விருட்சம் வன்னிமரம் ஆகும்
திருக்கோயிலின் சுற்று பிரஹார உபசன்னதிகள் விநாயகர்,மீனாட்சிசுந்தரேஸ்வரர்,விசாலாட்சி விஸ்வநாதர்,ஸ்ரீதுர்க்கை,காலபைரவர்,நவக்கிரகம்.
கோயிலுக்கு முன்புறம் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோயில் தெப்பக்குளம், இதற்கு சரவண தீர்த்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் நீளம் மற்றும் அகலம் 456 அடி, 483 அடியாகும். குளத்தில் உள்ள இயற்கை நீரூற்றில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வருவதால், ஆண்டுதோறும் தெப்ப உற்சவ திருவிழாவிற்கு தண்ணீர் நிரப்பி வருகிறோம்
இத்திருக்கோயிலின் கருவரை சுற்றியுள்ள அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்தில் மீன் சின்னம், சேவல் மற்றும் பெண் சின்னம் கருங்கல்லில் பொரிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
ஆண்களுக்கு இரண்டு குளியல் அறைகளும், மூன்று கழிப்பறைகளும், அதேபோல் பெண்களுக்கும் இரண்டு குளியல் அறைகளும், மூன்று கழிப்பறைகளும் வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதற்கென தனியாக துப்புரவு பணியாளர் நியமிக்கப்பட்டு காலை மாலை இரண்டு வேளையும் தூய்மை படுத்தப்படுகிறது. அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.





