
Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர், பாண்டியன், பிற்கால சோழர்கள், விஜயநகரம்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
சரக்கொன்றை
மூலவர் 16 பட்டைகளுடன் கூடிய லிங்க வடிவிலும், சுவாமி அம்மன் திருமணக் கோலக் காட்சியும் கருவறையில் காணப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வலப் பக்கத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் அம்மன் பெரிய உருவத்தோடு நின்ற திருக்கோலத்தில் அழகான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றாள். தீர்த்த சிறப்பு வாய்ந்த தலம் சிவபெருமான் சூலத்தால் தோற்றுவித்த சூல தீர்த்தமும், திருமால் சக்கரத்தால் தோற்றுவித்த சக்கர தீர்த்தமும் (திருக்குளம்) அமையப்பெற்று, தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தின் தலைவராக இருந்த அப்பர் சுவாமிகள் வயிற்றில் சூலை நோய் ஏற்பட்டுச் சொல்லொன்னாத் துன்பத்தை அனுபவித்தார். அப்பொழுது அவரது தமக்கையார் (திலகவதி அம்மையார்) சூல தீர்த்தத்து நீரை சிவாய நம என்று அவருக்கு ஓதி அளித்தார். தீர்த்தத்தை அருந்திய அப்பர் சுவாமிகளின் சூலை நோய் அக்கணமே நீங்கியது. பேரின்பம் பெற்ற அப்பர் சுவாமிகள் உடனே சமணத்திலிருந்து சைவ சமயத்தை தழுவி சைவ சமயம் தழைத்தோங்க அருந்தொண்டு ஆற்றினார். சைவ சமய மறுமலர்ச்சிக்கு இத்திருக்கோயிலே வித்திட்டது எனலாம். தேவாரத்தின் முதல் பாடல் கூற்றாயினவாறு பிறந்ததும் இத்திருக்கோயிலில்தான்
திருக்கோயில் திருக்குளம் சூலத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.திருக்குளம் நான்குபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் முன் உள்ள திருநீற்று மண்டபத்தில் சிவ மற்றும் அடியார்கள் , திருவிளையாடல் காட்சிகள் அற்புதமாக மூலிகை ஓவியம் மூலம் தீட்டப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசருக்கு காட்சியளிக்கிறார்
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அன்னதானம் தினசரி 50 மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்கப்படுகிறது அன்னதானம் 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1250 /-, நிலையான வைப்பு எனில் ரூ .20000/ - வருடத்தில் ஒரு நாள் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.
குடி நீர் வசதி (ஆர்.ஓ)
சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணிர் வசதி




