அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
இல்லை
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
ஐங்கோண வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மகா வில்வம்
இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷ நிவராணமும், சர்வபாப விமோசனமும் ரோக நிவர்த்தனமும், ஐஸ்வர்ய ஆகர்ஷணமும் கிட்டும் என்பதால் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து வழிபடுகின்றனர். இத்திருக்கோயிலில் வெண் பூசணிக்காயில் குழியாக வெட்டி அதில் வேப்ப எண்ணெய்யும், தேங்காய் மூடிகளில் நெய்யும், எலுமிச்சை தோலில் நல்லெண்ணெய்யும் நிரப்பி பாக்குத்தட்டில் வைத்து, இந்த மூன்று தீபங்களையும் ஏற்றி வழிபடுவது மிகவும் பலன் தருவதாக நம்பப்படும் வழிபாட்டு முறையாகும். பகைவர்களின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்று இரவு பத்து மணிக்கு மேல் சத்ரு சம்ஹார பூஜையும், தொடர்ந்து குருதிப் பூஜையும் நடைபெறும். குருதி தீர்த்தம் என்பது குங்குமமும் நீரும் கலந்த கலவையாகும். வெண்கடுகு, நாய்கடுகு, செண்பகப்பூ, மகிழம்பூ, ரோஜா அத்தர், வெட்டிவேர், நன்னாரி வேர், ஜாதி பத்ரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் முதலிய எண்ணற்ற மூலிகை பொருட்களும் வாசனாதி பொருட்களும் குங்கும கரைசலில் கலக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த குருதி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தீர்த்தத்தை குருதியாக பாவித்து விசேஷ மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டு குருதிபூஜை செய்யப்படுகிறது. இக்குருதி தீர்த்தத்தை குளிப்பதற்கு முன்பு தலையில் தேய்த்துக் கொள்ளலாம் என்பதோடு வீட்டு மூலைகளில், தோட்டங்களில், மற்றும் வணிக இடங்களில் தெளித்தால் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
காலபைரவர்
இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் 11.09.2011 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நாள்தோறும் 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் நாள் ஒன்றுக்கான செலவுத்தொகையாக ரூ.1750/- வழங்கலாம். மாறாக ரூ.25000/- செலுத்தி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்கலாம். நன்கொடையாளர்கள் இணையவழியாகவும் நன்கொடை செலுத்தலாம்.
அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது
500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திருக்கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டு பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான மண்டபத்தில் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் உள்ளது.





