
Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
பால மரம், வேப்ப மரம்
இத்திருக்கோயில் கால்நடைகளின் பிராத்தனை ஸ்தலமாக உள்ளது.கால்நடைகளின் பிணி நீங்கி அவை நலம் பெற இத்திருத்தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து தீர்த்தம் எடுத்து சென்று கால்நடைகளுக்கு தெளித்து விட்டால் அவை நலம் பெறுகின்றன.இத்திருத்தலத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.வருகைபுரியும் பக்தர்கள் மேற்படி வாகனங்களை வாங்கி வைத்து பூஜை செய்து வழிபட்டு செல்வர். கால்நடைகளின் பாதுகாவலனாக உள்ள கோபிநாதர் திருத்தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அருள்மிகு கோபிநாதசாமி கோவில் இத்திருக்கோவில் ரெட்டியார்ச்சத்திரத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது . மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் வடிவத்தில் மூலவராக உள்ளார்
உப சன்னதி ஹனுமான் - கருடாழ்வார் இச் சன்னதி கோவில் நுழைவாயில் முன்புறம் அமைந்து உள்ளது
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில் 619 படிக்கட்டுக்கள் கொண்டுள்ள மலைமேல் அமைந்துள்ளது.கோபிநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருள்மிகு கருடாழ்வாரை தரிசனம் செய்து விட்டு மலைமேல் ஏறி கோபிநாதரை தரிசனம் செய்வார்கள். கருடாழ்வாருக்கு தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும்.
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில் 619 படிக்கட்டுக்கள் கொண்டுள்ள மலைமேல் அமைந்துள்ளது.கோபிநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருள்மிகு ஆஞ்சநேயர் தரிசனம் செய்து விட்டு மலைமேல் ஏறி கோபிநாதரை தரிசனம் செய்வார்கள். ஆஞ்சநேயருக்கு தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும்.
....................
....................
அருள்மிகு கோபிநாதஸ்வாமி திருக்கோவில் கோபிநாதர்.தம் கையில் புல்லாங்குழல் ஊதுகின்ற தோரனையில் அருட்சேவை செய்கிறார்
இத்திருக்கோயிலில் கடந்த 15.08.2002ம் தேதி முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.தினந்தோறும் 25 நபர்களுக்கும் சனிக்கிழமைகளில் 100 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அருள்மிகு கோபிநாதசாமி கோவில் உளவரப்பணிகளுக்கு வெளியாட்களை கொண்டு செய்யப்பட்டுவருகிறது
கோவில் அருகில் அமைந்துள்ளது. பக்தர்கள் செல்லும் வழியில் மலைபாதையில் உள்ளது
இத்திருக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கீழே அடிவாரத்தில் அன்னதான கூடத்திற்கு எதிர்புறம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிவறையும், மலைமேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை வசதியும் உள்ளது.
மலையடிவாரத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளது.
மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்கு எதிரே முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது
இத்திருக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கீழே அடிவாரத்தில் விநாயகர் சன்னதி அருகே குளியலறை வசதி உள்ளது.
இத்திருக்கோயிலின் அடிவாரத்தில் இலவச காலணி பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





