
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேப்ப மரம்
கொடிமரம், மூலஸ்தான அம்மன், கோபுரகலசம் மூன்றையும் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
அம்மன் சன்னதி ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் சன்னதி உள்ளது.
அம்மன் சன்னதி ஒட்டி முன்புறம் வடக்குப்பக்கம் மதுரை வீரன் சன்னதி உள்ளது. மதுரை வீரன் சுவாமிக்கு மஞ்சள்காப்பும் நடைபெற்று வருகிறது.
அம்மன் சன்னதி ஒட்டி பின்புறம் தெற்குப்பக்கம் முனியப்பசாமி சன்னதி உள்ளது. அம்மனுக்கு காவல் தெய்வங்களாக திகழ்கிறது.
அம்மன் சன்னதி ஒட்டி பின்புறம் வடக்குப்பக்கம் கருப்பணசாமி சன்னதி உள்ளது. அம்மனுக்கு காவல் தெய்வங்களாக திகழ்கிறது.
திருக்கோயிலுக்கு முன்புறம் அலங்காரமண்டபத்திற்கு வடக்குப்பக்கம் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் உள்ளது. தைப்பூசம், சஷ்டி தினங்களில் விஷேச பூஜைகள் நடைபெறும்.
திருக்கோயிலுக்கு முன்புறம் அலங்காரமண்டபத்திற்கு தெற்குப்பக்கம் அரசமரத்திற்கு அடியில் விநாயகர் ஆலயம் உள்ளது. தினசரி அபிஷேகமும், விநாயகர் சதுர்த்தி அன்று விஷேச பூஜைகள் நடைபெறும்.
இல்லை
இல்லை
சிற்பங்கள் ஏதும் இல்லை
தினமும் 100 நபர்களும், பிரதி வெள்ளிக்கிழமைகளில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்கள் திருவிழா காலங்களிலும், மற்ற சம்யங்களிலும் குளிப்பதற்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நவீன குளியலறை வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது
பக்தர்கள் திருவிழா காலங்களிலும், மற்ற சம்யங்களிலும் குளிப்பதற்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நவீன கழிவறைவசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது
இத்திருக்கோவிலில் பக்தர்களின் காலணிகளை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு தனியாக காலனி பாதுகாக்கும் மையம் உள்ளது. திருவிழா காலங்களில் சேவர்த்திகளின் காலணிகளை பாதுகாக்க தனியாக ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாக்கும் பொருட்டு திருக்கோவில் மைதானத்தில் வாகன பாதுகாப்பு மையம் உள்ளது.
இத்திருக்கோவில் பிரார்த்தனை ஸ்தலம் என்பதால் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை அம்மனுக்கு செலுத்தி வருகிறார்கள் இதற்கென்று தனியாக முடிகாணிக்கை மையம் திருக்கோவில் வளாகத்தில் உள்ளது.
இத்திருக்கோயிலில் 2011ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தேர் ஓடுதளப் பாதையை இரண்டு நிலைகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. ரூ 1500 /- ஒரு நிலைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டணத்தில் 1/4 படி சர்க்கரைப் பொங்கல், மாரியம்மன் காமாட்சி விளக்கு ஒன்று, அம்மன் லேமினேசன் படம் ஒன்று, மாரியம்மன் துண்டு, தேங்காய் பழங்கள், பூ இவைகளை தேர் இழுக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயிலில் உபயதாரர்களால் மரத்தேர் ஒன்று செய்து வெள்ளோட்டம் விடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் பொழுது மண்டகப்படிதாரர்கள் விழாவின்பொழுது திருத்தேர் வீதி உலா சென்று மீண்டும் திருக்கோவில் வந்தடையும்.
இத்திருக்கோவிலில் 4 மின் இணைப்புகள் உள்ளன. இதில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அன்னதான கூடத்திற்கு மின் இணைப்பு வாங்கி செயல்படுத்தப்பட உள்ளது. மின் சிக்கனம் மின் செலவை குறைக்கும் விதமாக சூரிய மின் சக்தி அமைக்கப்பட்டுள்ளது
திருவிழா காலங்களில் பெண் பக்தர்கள் அங்கப்பிரதக்ஷணம் செய்வோருக்கும், திருக்கோயிலுக்குள் முடி காணிக்கை செய்யும் பக்தர்களுக்கும் உடைமாற்றுவதற்கு வசதியாக உடை மாற்றும் அறை உள்ளது.





