Home/Temples/TN/Erode/Arulmigu Arachalamman Temple, Kangayam Road, Arachalur - 638101
hrce

Arulmigu Arachalamman Temple, Kangayam Road, Arachalur - 638101

அருள்மிகு அரச்சாலம்மன் திருக்கோயில், காங்கயம் ரோடு, Arachalur

Erode, TN அறச்சாலம்மன்
Arulmigu Arachalamman Temple, Kangayam Road, Arachalur - 638101 — image 1
1 / 7

History & Architecture

Century

19th நூற்றாண்டு

Temple Speciality

வரலாற்று சிறப்பு

பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் அறச்சாலையம்மனிடம் கட்டுப்பூ கேட்கும் பழக்கம், வழக்கமாக கொண்டுள்ளார்கள். திருமணம், குழந்தைபாக்கியம், போன்ற காரியங்களுக்கு பூ உத்திரவு நல்லபடியாக கிடைத்தவுடன் உருவபொம்மை, அபிஷேகம் போன்றவைகள் செய்து வேண்டிக் கொண்டவாறு செய்து பக்தர்கள் அம்மன் அருளைப் பெற்று வருகிறார்கள்.

தல விருட்சம்

இத்திருக்கோயிலின் தல விருட்ஷம் மாவங்கலிங்கமரம்

Sub Shrines

புற்றிடங்கொண்டீஸ்வரர் மற்றும் தாமோதர பெருமாள் திருக்கோயில்

ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் தென்திசை நெடுஞ்சாலையில் 22 வது கிலோ மீட்டர் தூரத்தில் அறச்சலூர் கிராமத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்று பக்தர்கள் அதிகளவில் தரிசித்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சனீஸ்வர அர்ச்சனை, இராகு, கேது அர்ச்சனை செய்யப்படுகிறது. புற்றிடங்கொண்டீஸ்வரர் சுயம்பு வடிவில் கிழக்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பாகும். பூலோக நாயகி அம்மன் அருகில் தனிக்கோயிலாக அமைந்துள்ளது. திருக்கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அம்மன் சன்னதியும் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. சைவம், வைணவமும் ஒரே திருக்கோயிலில் வளாகத்தில் உள்ளது தனிச்சிறப்பாகும்.

அருள்மிகு நாகமலை தீர்த்தகுமாரசுவாமி திருக்கோயில்

அருள்மிகு அறச்சாலம்மன் வகையறா திருக்கோயிலில் ஒன்றான அருள்மிகு நாகமலை தீர்த்தகுமாரசுவாமி திருக்கோயில் அறச்சலூரிலிருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல 485 திருப்படிகள் உள்ளது. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மற்றும் அமாவாகை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை நாட்களில் வேங்கை மரத்தேர் உலா நடைபெற்று வருகிறது. படிவழியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழி பாதையில் பெரிய நாகர் சிற்பம் ஒன்று ஒரே கல்லினால் ஆன பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இராகு, கேது பெயர்ச்சி அன்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். மலைக்கோயிலில் கிருத்திகை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். தீர்த்த குமாரசாமி மலைக்கோயில் மரத்தேரில் கிருத்திகை தோறும் திருக்கோயிலில் உலா வருகிறது. பக்தர்களுக்கு மலைக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் நிழல்தரும் மண்டபம் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படித் திருக்கோயிலின் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல தற்போது படிவழிப் பாதை மட்டுமே உள்ள நிலையில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மலைக்கோயிலுக்குச் சென்று வர ஏதுவாக தார்சாலை புதியதாக அமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Facilities

குளியல் அறை வசதி

திருக்கோயில் அருகில் பேரூராட்சி மூலம் கழிப்பறை மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.

தங்குமிட வசதி

அறச்சாலம்மன் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக இளைப்பாறும் மண்டபம் அமைந்துள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

இத்திருக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →