
Century
20th நூற்றாண்டு
இந்த கோவிலுக்கு மேற்கே 17 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளத்தில் மாலை நேரத்தில் சென்னிமலை திருக்கோவிலில் எரியும் மின் மற்றும் தீப விளக்குகளின் ஒளியானது பிரகாசமாக தெரிவதை இன்றும் கண்கூடாக பார்க்கலாம். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் கெடு பலன்களான திருமணத்தடை, தொழில் வளர்ச்சி இல்லாமை, உடல் நலக்கோளாறுகள், நவக்கிரக தோஷம், புத்திர தோஷம், கண்திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம், தீராப்பகை, வழக்குகள், முன்னோர் சாபம், பித்ரு தோஷம், எதிரிகள் தொல்லை, ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, ஆயுள் தோஷம், அறுபது, எழுபது, எண்பது வயதில் ஆயுள் கண்டாதி தோஷங்கள் விலக, எல்லாம் வல்ல பரம்பொருள் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வர சுவாமிக்கு 12 வாரம் திங்கள் கிழமைகளில் (சோமவாரம்) ஜாதகருடைய வயதுக்கு ஏற்ப தீபம் ஏற்றி அபிஷேகம் செய்து வில்வ இலையால் ருத்ரதிரிஷதி அர்ச்சனை செய்து விசேஷ பூஜைகள் செய்து வர மேற்படி சொல்லப்பட்ட சகல தோஷங்களும் விலகி பரம்பொருளின் ஆசி கிட்டும். மேலும் பிரம்மா சிவபெருமானை பூஜித்து வழிபட்டதால் இந்த திருத்தலத்தில் உங்களுடைய பிறந்த ஜாதகத்தை ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்து வந்தால் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிறைவும், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பரம்பொருள் தந்து அருளாசி நல்குவார். குறிப்பு தேய்பிறை அஷ்டமி அன்று இத்திருத்தலத்தில் காலபைரவருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மாத பிறப்பு, வருட பிறப்பு ஆகிய தினங்களில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.





