
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பாண்டியன்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வமரம்
ஸ்தல விருச்சம்
ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளின் புகழை போற்றி பாடி எப்பொழுதும் தமிழுக்கு ஏற்றமாக தமிழ் வேததிரட்டு என்னும் நாலயிர திவ்ய பிரபந்தம் பாசுரங்களாக வைஷ்ணவத்தை போற்றும் வகையில் நமக்கு பன்னிருவரும் நமக்கு பாதுகாத்து அளித்துள்ளனர் ஆழ்வார்கள் பெருமாளிடம் பக்திபரவசத்துடனும் தமிழ்பற்றும் கொண்டு வைணவச்செம்மல்களாக விளங்கினர்
இராமானுஜர் வைஷ்ணவ சம்பிரதாயத்தை முழுமூச்சாக அனைத்து திவ்யதேசங்களிளும் சென்று பூஜைமுறைகளையும் வைஷ்ணவத்தைப்பற்றி அந்தந்த தேச பெருமாள் பக்தர்களிடையே பரப்பவும் வைஷ்ணவத்திற்கும் பெருமாளுக்கும் ஒரு பெரிய இடர் வந்தபோது அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு அதை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்டு திருக்கோஷ்டியூர் என்னும் திவ்ய தேசத்திலே கோபுரத்தின் மேலே நின்று அனைவருக்கும் அஷ்டாச்சரமந்திரம் என்னும் ஓம்நமோ நாராயணாய என்ற ப்ரணவாகரத்தை நமக்கு அளித்து வைஷ்ணத்தை காப்பாற்றியவர் இவருக்கு இராமானுஜர், எதிராஜர், பாஷ்யகாரர் என்று போற்றப்படுகிறார் இவர் ஸ்ரீபெரும்புதூரிலே அவதாரம் செய்தவர்
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரிலே நந்தவனத்திலே உதிதத்தவள் பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி போன்ற பாசுரங்களை நமக்கு அளித்தவள் ஆடிப்பூரத்தில் அவதாரம் செய்தவள் பெருமாளையே கணவனாக அடையவேண்டும் என்றுஎண்ணி பாவை நோன்பு இருந்து பபெரியாழ்வார் தினசரி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்வாமிக்கு வைத்திருந்த மாலை ஆண்டாள் போட்டு அழகு பார்த்து பெருமாளுக்கு பூமாலையை சூடிக் கொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாள்,நமக்காக பாமாலை என்னும் திருப்பாவையை நமக்கு அளித்தவள் ஆகையாள் நாமும் அந்த திருப்பாவை பாசுரத்தைப் பாடி கல்யாணம் ஆக வேண்டி பிரார்த்தனையை பகவானித்திலே வைத்தால் கண்டிப்பாக நடத்தித்தருவார் என்பது நிச்சயம் ஆகையால் பெருமாளிடம் நாம் எந்த அளவிற்கு பக்தி ஸ்ரத்தையுடன் இருக்கின்றோமோ அந்தளவிற்கும் அதிகமாக பெருமாள் நமக்கு அனுக்கிரகம் செய்வார்
வேணுகோபால ஸன்னதி இங்கு ருக்மணி சத்யபாமா ஸமேத வேணுகோபால ஸ்வாமியாக சேவை சாதிக்கிறார் இவரிடத்திலே குழைந்தைவரம் வேண்டி பி.ரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நடத்தித் தருவார் தனி ஸன்னதியாக இருப்பதால் மிகவும் விஷேசம்
நமது சன்னதியிலே தனித் தாயாராக இருப்பது மிகவும் விசேஷமான தாயார் ,வைஷ்ணவ ஸன்னதியிலே தனித்தாயாராக விளங்குவது மிகவும் விசேஷமான ஸன்னதியாகும் சதுர்புஜங்களும் அதாவது இரண்டு கைகளிலே தாமரையையும் மற்ற இருகைகளிலே அபய,வரத ஹத்தங்களுடையவளாகவும் கமலத்தின்மேல் வீற்றிருந்த திருக்கோலமாக அருள் பாலிக்கிறாள் தாயாரை வழிபட்டால் கல்யாணவரம் வேண்டியும், புத்ரபாக்கியம் வேண்டியும்,ஜாதக தோஷங்களையும் நிவர்த்தி செய்து வரம் அளித்துக் கொண்டிருக்கிறாள்
ஹயக்ரீவர் சன்னதி இவர் கல்விகளுக் கெல்லாம் தலைவன் இவர் குதிரை முகத்துடன் இடப்புறத்திலே லக்ஷ்மியை மடியில் அமர்தியும் நான்கு கரங்களுடன் விளங்குகிறார் சங்கு,சக்ரம்,வரதஹஸ்த்தமும் ,இடக்கையிலே வேதநூல்களும் கொண்டு விளங்குககிறார் கல்வி,ஞானம், வேதம் ஸாஸ்த்திரங்கள் மனோதெய்ரியம்,ஸகலவிதமான வித்தைகளுக்கும் அதிபதியாக விளங்குககிறார் லக்ஷ்மி மடியில் உள்ளதால் எளிதில் பிரார்த்தனை நிறைவேற்றும் சிறப்பு வாய்ந்தவர்
விஷ்வக்ஸேனர் இவர் சேனைமுதலியார் என்றும் அழைக்கப்படுகிறார் சன்னதியின் வடகிழக்கு மூளையிலே அமைக்கப்பட்டுள்ளது ஆகையால் கோவிலினுடைய தலைவனாகவும் சேனைகளுக்கு எல்லாம் அதிபதியாகவும் விளங்குகிறார் வைஷ்ணவ எந்தவொரு பூஜையானாலும் சரி சைவத்தில் விநாயகரை பூஜிப்பதைப் போல வைணவத்தில் விஷ்வக்ஸேனர் பூஜை முதலிலே செய்யபடுகிறது
தன்வந்திரி இவர் நோய்களை அதாவது ஸகல விதமான வியாதிகளை தீர்க்கவல்லவர் வியாதியால் ஏற்படும் தோஷங்ளையும் ஆயுள் அபிவிருதத்தையும் ஸர்வரோக நிவாரணத்தையும் ஜாதகத்தில் அயுள் குறைவாக இருந்தால் மரணபயத்தை போக்குபவர் நான்கு கரத்திலே சங்கு,சக்ரமும்,வலக்கையிலே அமிர்தகலசமும்,இஇடக்கரத்திலே வியாதியைப் போக்க மூலிகை மருந்தான சீந்தல் கொடியுடன் விளங்குககிறார்
சக்கரத்தாழ்வார் இவர் சன்னதியில் மூலருக்கு வலப்புறம் அமைந்துள்ளார் ஏனெனில் பெருமாளுடைய ஆயுதத்தில் முக்கிய பங்கு வகிப்பது சக்கராயுதம் சக்ககரத்தாழ்வாரை பிரார்த்தனை செய்து 16 ஆயுதங்களும் நம்மை பகைவர்ளிடமிருந்து காக்க வேண்டும் என்றும் 16 முறை பிரகாரம் செய்வது நல்லது சிவன் சன்னதியிலே நவகிரங்களுக்கு என்ன பலன் உண்டோ அந்தப் பலன் சக்கரத்தாழ்வாருக்கு உண்டு பில்லி சூனியம் காத்துக்க கருப்பு ஏவல் பிரேத பிசாச திருஷ்டி தொழில் அபிவிருத்தி ஜாதகத்திலே தீர்க்கமுடியாத குறைகளை ஒரு மண்டலமாக 108 முறையோ அல்லது அதிலே பாதி 54 முறையோ அல்லது 12 முறையோ பிகாரம் செய்வது நல்லது அனைத்து தோஷங்களையும்ம் நிறைவேற்றுவார்
திருவேங்கடமுடையான் சன்னதி திருக்கோவிலினுடைய நிருததிபாகத்திலே இருப்பதினால் இத் திருக்கோவிலுக்கு மிகவும் ஏற்றமாகும் இந்தப் பெருமாளுக்கு வருடத்திற்கு 4 முறை விஷ்ணு பதி புண்யகாலம் என்ற அதாவது கிழக்கு முகமாக சங்குச் சக்கரங்களுடன் நிற்கின்ற பெருமாளாக இருப்பதால் மிகவும் சிறப்பானவராக உள்ளார் இந்தப்புண்ணியகாலத்தில் பித்ரு தோஷம் ஜாதகத்தில் ஏற்படக் கூடிய பல தோஷங்களும் இந்தப் புண்யகாலத்தில் நிவர்த்தியடைகிறது
திருவிழா சிறப்பு வழி
சக்கரத்தாழ்வார் சன்னதி பின்புறம்





