
Century
19th - 20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
அறுங்கோண வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
-
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தொழில். வியாபாரம் மற்றும் திருமணம் ஆகிய சுப காரியங்களைத் துவக்கும் முன் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டு செய்வது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பான அம்சமாகும். மேலும் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமையில் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன்
63 நாயன்மார்களில் ஒருவரா கண்ணப்ப நாயனார் சிலை திருக்கோயில் பிரகார மண்டபத்தின் கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்
கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கருப்புசாமியின் சிற்பம் திருக்கோயில் பிரகார மண்டபத்தில் உள்ள கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது
சுதந்திர போராட்ட காலத்தில் இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றதால் பாரத அன்னையை சிற்பமாக வடிவமைத்து உள்ளனர்
அருள்மிகு காலபைரவர் சிற்பம் திருக்கோயிலின் பிரகார மண்டபத்தின் கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது
அருள்மிகு காளியம்மன்
அருள்மிகு சுப்ரமணியர்
இத்திருக்கோயிலில் கடந்த 15.8.2002 முதல் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.3000- வீதமும், நிரந்தர கட்டளைக்கு ரூ.30000- வீதமும் தொகை செலுத்தி அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம். மேற்படி தொகைக்கு வருமான வரி விலக்கு (80 ஜி) பெறப்பட்டுள்ளது. இதுவரை 117 நபர்கள் நிரந்தர கட்டளைத்தாரர்களாக தொகை செலுத்தி உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கைகளை செலுத்த அன்னதான உண்டியல் ஒன்று திருக்கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு அருகில் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் முகூர்த்த கூடத்தில் 400 பேர் அமர்வதற்கும். உணவு கூடத்தில் 200 பேர் உணவருந்தவும் இடவசதிகள் உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.25000- ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வாடகை செலுத்தி முன்பதிவுசெய்துகொள்ளலாம்
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயிலுக்கு அருகில் வாகனநிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளது
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுவாமியை எளிதில் தரிசனம் செய்வதற்காக இரண்டு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர நாற்காலியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்திருக்கோயிலில் திருமணம் செய்வதற்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு அதில் மணமகன் மற்றும் மணமகள் இணையவழியில் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட்டு உரிய ஆவணங்களின் அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மணமகன் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் மணமகள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருமண பதிவு கட்டணமாக ரூ.500- பெறப்பட்டு திருமண இரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க திருக்கோயில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமாக தங்கரதம் திருக்கோயிலுல் உட்புற வளாக பாதுகாப்பு மையத்தில் அமைந்துள்ளது. சேவார்த்திகள் ரூ.1500- கட்டணம் செலுத்தி தங்கரத புறப்பாடு நடத்தி தங்களது பிரார்த்தினைகளை நிறைவேற்றி அம்மன் அருள் பெற்று செல்கின்றனர். மாலை 6.15 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது





