
Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேப்ப மரம்
கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உடையவர்கள் 48 நாட்கள் திருக்கோயிலில் தங்கியிருந்து தங்கியிருந்து அம்மனை நினைத்து வழிபாடு செய்து வந்தால் பூரண குணம் கிடைக்கிறது. மனநிலை சரியில்லாதவர்கள் பக்தி சிரத்தையோடு வழிபடின் முற்றிலுமாக குணம் அடைகின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அம்மனை வழிபட்டு வேண்டிக் கொண்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கின்றது. பக்தர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக நிறைவேறுகிறது. திருமணம், நிலம், வீடு தொடர்பான வேண்டுதல்கள் தடங்கலின்றி நிறைவேறுகின்றன. வழிபட்டவர்களின் குடும்பத்திற்கு பில்லி, சூனியம், ஏவல் போன்ற இடையூறுகளை தகர்த்து எல்லா நலன்களும் தரும் சிறப்புடையவளாக அம்மன் விளங்குகிறார்.
இத்திருக்கோயிலின் தல விருட்ஷம் வேப்ப மரமாகும்.
பக்தர்களுக்கு குளியலறை மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.





