Home/Temples/TN/Erode/Arulmigu Ponkaliamman Temple, Thalaiyanallur, Kodumudi - 638109
Heritage Templehrce

Arulmigu Ponkaliamman Temple, Thalaiyanallur, Kodumudi - 638109

அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில், தலையநல்லூர், சிவகிரி கிராமம், கொடுமுடி

🕉️ பொன்காளியம்மன் Erode, TN பொன்காளியம்மன்
Arulmigu Ponkaliamman Temple, Thalaiyanallur, Kodumudi - 638109 — image 1
1 / 12
Also known as:பொன்காளியம்மன்

History & Architecture

Century

19th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

மூன்று நிலை விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வ மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை06:00 AM to 07:00 AM IST
உச்சிக்கால பூஜை11:00 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை05:30 PM to 06:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

பொன்காளியம்மனை ராகுகாலம் அமாவாசை பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால் இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும் திரு மணம் குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குவதில் இந்த அன்னைக்கு நிகர் அவள் தான்.இத்திருக்கோவிலின் ஆகம கிரியா பாரம்பரிய மிராசுப்படி சிவகிரி ஆதீனமாக இருப்பவர்கள் உற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள். அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை சிம்ம வாகனத்தின் பின்புறம் இரண்டு குதிரை துள்ளல் பிடிப்பார்கள். ஒன்று கூறைகுலத்தாரும் மற்றொன்றை விளையன் குலத்தாரும் பிடிப்பார்கள். இரண்டு குதிரையும் தலை அசைத்ததும் தேர்த்திருவிழா தொடங்கும். மூணே முக்கால் நாழிகையில் நாலே முக்கால் தேர் என்ற பழமொழியுடன் அமைந்தது தேர்த் திருவிழா. மூணே முக்கால் என்பது கால அளவையும் நாலே முக்கால் என்பது தேரின் உயர அளவையும் குறிக்கும்.தேர் புறப்படும் முன்னர் லட்சக் கணக்கான பக்தர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி தேருடன் பவனி வருவார்கள். தேரில் கூறைகுல விளையன்குல குலகுரு சிவகிரி ஆதீனம் பொன்காளி அம்மனுடன் தேரில் அமர்ந்து வருவார். குல தெய்வத்தையும் குல குருவையும் ஒருங்கே தரிசனம் செய்யும் வாய்ப்பும் அருளாசியும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும். ஏந்தி செல்லும் தீப்பந்தங்கள் தேரின் முன்வடமாகவும் பின்வடமாகவும் காட்சி தரும். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.

பிரார்த்தனை

ஸ்ரீபொன்காளியம்மன் அம்மன் திருக்கோவில் பல்லி சகுனம் சொல்லும். திருக்கோவிலில் பூச் சகுனம் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. திருவிழா காலங்களில் இந்த சகுனங்கள் பார்ப்பது இல்லை.

Sculptures

பொன்காளியம்மன்

. ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன் வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள்.இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை அர்த்த மண்டபம் மகா மண்டபம் பூத மண்டபம் நிருத்த மண்டபம் ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர் மாதேஸ்வரன் வண்ணார கருப்பணன் சாமி பரிவார மூர்த்திகள் பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும் காதில் தோடாக ராகுகேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம் டமருகம் கட்கம் கேடயம் பட்சி கிண்ணம் கண்டம் அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும் உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது. .

Services

அன்னதானம்

திருக்கோயிலில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டு வருகிறது

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயிலில் மூன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது

குளியல் அறை வசதி

கோவிலுக்கு அருகில் குளியல் அறை மற்றும் கழிவறை உள்ளது

More Temples Nearby

View all →