
Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
இலந்தை மரம்
இத்திருக்கோயிலின் அருள்மிகு சங்கமேஸ்வரர் சன்னதியின் தென்மேற்கு மூலையில் எளுந்தருளும் தல விருட்ச விநாயகர் சன்னதியில் இலந்தை மரம் ஒன்று உள்ளது.
குதிரை வீரன் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது
இந்த மண்டபம் கெட்டி முதலி என்ற கொங்கு சிற்றரசரால் கட்டப்பட்டது. இந்த சிலை சிற்பியின் கைவண்ணத்தில் சிலையின் மீது நீர் ஊற்றினால் சிரிக்கும் வகையிலும் மற்றொரு சிலையின் மீது எண்ணெய் ஊற்றினால் சிரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் தினசரி நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்று வருகிறது. 1 நாள் அன்னதானத்திற்கு 100 நபர்களுக்கு ரூ. 35/- வீதம் செலுத்தி அன்னதான உபயதாரராகி அன்னதானம் வழங்கலாம். மேற்படி தொகைக்கு வருமான வரி விலக்கு (80ஜி ) அளிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு புனித நீராட வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி கரையோரம் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு சங்கமேஸ்வரர் சுவாமிக்கு வெள்ளித்தேர் ஒன்று உள்ளது.வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6.00 மணிக்கு திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெறும்.பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- செலுத்தி வெள்ளித்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்ளலாம்.ஒரு கட்டணத்திற்கு ஐந்து நபர்கள் அனுமதிக்கப்படுவர்.
இத்திருக்கோயிலுக்கு சுவாமியை வழிபட வருகை தரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான இரண்டு சக்கர நாற்காலி 3 எண்ணிக்கை தற்போது நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு 1) அன்னதானம் மண்டபம் அருகில் 2) கூடுதுறை பகுதியில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
காவேரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை பகுதியில் புனித நீராடிவிட்டு வரும் பெண்கள் உடை மாற்றுவதற்கு ஏதுவாக உடை மாற்றும் அறை ஒன்று உள்ளது.
இத்திருக்கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக உள்ளதால், பரிகார பூஜை செய்ய வேண்டி வரும் பக்தர்களின் வசதிக்காக தர்ப்பண மண்டபம் ஒன்றும், அருள்மிகு காயத்ரிலிங்கேஸ்வரர் சன்னதி முன்பு பரிகார மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வெளியூரில் இருந்து வருகின்ற பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக யாத்ரிகர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் 14 ஒய்வறைகளும், 7 குடில்களும் உள்ளது.





