
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் மூந்நூறு. சிவபெருமானின் ஸ்த்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் மற்றும் ஈஷானம் என்னும் ஐந்து முகங்களும் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸ்ம்ஹாரம், திரோபாவம், அனுக்கிரகம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்னும் ஐந்தொழில்களையும் பஞ்சபூதங்களுக்கு அடிப்படையாய் பிரம்மமாய் நின்று உயிர்கள் நிலைபெற நடத்தி வருகின்றது. இத்துடன் அதோமுகம் என்ற ஆறாவது முகம் உள்நோக்கி நின்று இவற்றிற்கு ஆதாரமாய் இருந்து வருகின்றது. முகம் ஒன்றிற்கு 50 என இந்த ஆறு முகங்கள் கொண்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியத்திற்கு 300 பீஜமந்திரங்களால் (செந்நிற) மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தல் திரிசதை அர்ச்சனை எனப்படும். மேற்படி அர்ச்சனை இத்திருக்கோயிலில் பிரதி வாரம் செவ்வாய் கிழமைகளில் காலை 10.30 மணி, மதியம் 12.30 மணி, மற்றும் மாலை 5.30 மணி ஸ்ரீ சத்ரூ சம்ஹார சிவசுப்ரமணிய திரிசதீ அர்ச்சனை நடைபெற்று வருகின்றது. பாவமனைத்தும் போக்கும் மகா சக்தி வாய்ந்த இந்த அர்ச்சனை திருமணத்தடை, குழந்தை பாக்கியம் பெற, செவ்வாய் தோஷம், எதிரிகளால் தொல்லை, தொழில் முன்னேற்றம், காரியத் தடங்கல், தீராத நோய்கள் மற்றும் இதர கெடுதலான நிகழ்வுகளை வாழ்வினில் நீக்கி சகல சக்திகளையும் தரும் இந்த பூஜையில் கலந்து கொண்டு நற்பலன் பெற வேண்டுகிறோம்.
மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியன்று மாலை 5.30 மணிக்கு இத்திருக்கோயிலில் பால்குடம் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதையொட்டி கீழேயுள்ள அரசமர விநாயகர் திருக்கோயிலில் பால் குடங்களை மந்தரித்து மலையை சுற்றி கிரிவலம் செய்து வேலாயுதசுவாமிக்கு சிறப்பாக பால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேற்படி பால்குடம் அபிஷேகத்தில் பங்கெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அந்த மாத சஷ்டி தினத்திற்கு முன்பு திருக்கோயில் அலுவலகத்தில் பால்குடம் கட்டணச்சீட்டு வாங்கி பங்குகொள்ளலாம்.
உற்சவா் சன்னதி மலைமேல் அமைந்துள்ளது
அருள்மிகு விநாயகா் சன்னதி மலைமேல் அமைந்துள்ளது
திருக்கோயிலுக்கு செல்லும் படி விழியில் இடும்பன் சன்னதி அமைந்துள்ளது
சித்தி விநாயகா் சன்னதி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது
அரசமர விநாயகா் சன்னதி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது
உபய காணிக்கை செலுத்தி விரும்பும் அன்பர்கள் இத்திருக்கோயில் சேமிப்பு கணக்கு எண்ணிற்கு காசோலையை செயல் அலுவலர், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல் என்ற பெயரில் வழங்க கேட்டுக்கொள்கிறோம். வங்கி கணக்கு விபரம் கணக்கு எண். 25670100000199 வங்கி : பாங்க் ஆப் பரோடா கிளை: திண்டல் IFSC code: BARB0THINDA (Fifth letter is zero)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் 15.09.2002 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சிகால பூஜை முடிந்தவுடன் நண்பகல் 12.00 மணிக்கு சேவார்த்திகளுக்கு அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ரூ.25000/- செலுத்தி வாழ்நாள் முழுமையும் தாங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றுக்கு அன்னதானமிட ரூ.2500/- அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம். மேற்படி அன்னதான திட்ட நன்கொடைகளுக்கு 80ஜி வரி விலக்கு உள்ளது.
பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 500 லிட்டர் அளவு கொண்டு மலைமேல் பகுதியில் அமைந்துள்ளது
திருக்கோயில் அடிவாரத்தில் முடிகாணிக்கை மண்டபம் ஒன்று உள்ளது. சேவார்த்திகளுக்கு இலவசமாக முடி காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை மண்டபத்தில் அருகில் குளியலறை வசதியும் உள்ளது.
திருக்கோயில் அடிவாரத்தில் ஆன்மிக நூலகம் ஒன்று உள்ளது. மேற்படி நூலகத்தில் சுமார் 500 புத்தகங்களுக்கு மேல் உள்ளது. தினசரி நாளிதழ் மற்றும் சமய புத்தகங்கள் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மற்றும் சேவார்த்திகள் படித்துப்பயன்பெறலாம்.
பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 500 லிட்டர் அளவு கொண்டு மலைமேல் பகுதியில் அமைந்துள்ளது
திருக்கோயில் அடிவார நுழைவாயில் அருகில் சுமாா் 42000 சதுர அடி பரப்பில் வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளது
திருக்கோயில் அடிவார நுழைவாயில் முன்பு இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது
தங்கரதம் புறப்பாடு கட்டணம் ரூ.1500.00 புறப்பாடு நேரம் - இரவு 7.00 மணி அன்றைய தினம் மாலை 4 மணி வரை தங்கதோ் புறப்பாட்டு சேவைக்கு கட்டணம் செலுத்தலாம்.
அடிவாரத்தில் கழிவறை ஆண்கள் - 3 மற்றும் பெண்கள் - 3 மலைமேல் பகுதியில் கழிவறை ஆண்கள் - 2 மற்றும் பெண்கள் - 2
அடிவாரத்தில் குழியலறை ஆண்கள் - 1 மற்றும் பெண்கள் - 1 மலைமேல் பகுதியில் குழியலறை ஆண்கள் - 1 மற்றும் பெண்கள் - 1





