அருள்மிகு மாந்தி அம்மன் திருக்கோயில், மாங்காடு

Sanctum Shape
சதுர வடிவம்
அருள்மிகு மாந்தி அம்மனின் திருக்கோலம் தலைமுடி விரிந்த நிலையிலும், தலையின் வலப்புறம் பிறைநிலா வடிவமும் தலையின் உச்சியில் மனித தலையும் நெற்றியில் சிறிய வடிவ பாம்பு பொட்டாகவும் கோரைப்பற்களைக் கொண்டும் மார்புகள் மற்றும் இரண்டு தொடைப்பகுதிகளில் பாம்புகள் பின்னியது போல் தோற்றமும் பூ நூல் போடுவது போல் மண்டை ஒட்டு மாலையுடன் காட்சி தருவாள்.
அருள்மிகு மாந்தி அம்மனின் சிறப்பு சனீஸ்வர பகவானின் குழந்தைகள் குளிகை, மாந்தி ஆவார்கள். மாந்தி தோஷம் உடையவர்கள் அமாவாசை தினங்களில் மாந்தி அம்மனை தொடர்ந்து வழிபடுவதன்மூலம் மாந்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அருள்மிகு மாந்தி அம்மன் தன் வலக்காதில் அசுரனையே குழந்தையாக வைத்திருப்பதால் குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் மாந்தி அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தைப்பேறு உண்டாகும். மன தைரியம் இல்லாதவர்கள் மாந்தி அம்மனை வேண்டினால் மன தைரியம் பெறுவார். திருமண தடைகளை நீக்கியும் தொழில் தடைகளை நீக்கியும் சகலவித துன்பங்களை நீக்கி ஆயுள் பலம் பெற செய்பவள். மாந்தி அம்மனை தரிசிக்க சக்தி வாய்ந்த தினமாக அமாவாசை தினம் கருதப்படுகிறது.
அருள்மிகு மாந்தி அம்மன்





