அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர்

Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
அருணகிரிநாதர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
பெரிய புராணம் அருளிச்செய்த தெய்வச் சேக்கிழார் பெருமான் அவரித்த திருத்தலம் குன்றத்தூர் ஆகும். குன்று ஒன்று இவ்வூரில் உள்ளதால் குன்றத்தூர் என்று பெயர் பெற்றது. திருத்தணிக்கை செல்லும் வழியில் ஒரு முகூர்த்த காலம் இம்மலையில் முருகப்பெருமான் தங்கியிருந்ததாக புராண வரலாறு. இக்குன்றின்மீது முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்து பக்தர்களின் வேண்டுதல்தனை நிறைவேற்றி அருள்பாலிக்கிறார். மூர்த்தி தலம், தீர்த்தம் (சரவணபொய்கை) சிறப்பு கருவறைக்குள் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரின் சுந்தரக்கோலம் காணலாம். அதில் ஒர் அதிசயமும் காணலாம்.மூவராக இருந்தாலும் ஒரு சேர அவர்களை தரிசிக்க இயலாது. இங்கு ஒரு பக்கத்தில் நின்று பார்த்தால் வள்ளி முருகனும், மறுபக்கத்தில் நின்று பார்த்தல் தெய்வானை முருகனும் காட்சி அளிக்கிறார்கள்.
குன்றத்தூர் மலைக்கு இடப்புறமுள்ள மலைக்குன்றின் மீது திருக்கார்த்திகை தீபத்தூண் அமைந்துள்ளது. வருடாந்தோறும் திருக்கார்த்திகை தீபத்தன்று குன்றின் மீது அமைந்துள்ள தீபத்தூணில் பெரிய அகண்டம் வைத்து தீபம் ஏற்றப்படும். தீபத் திருநாளில் சென்னை மற்றும் புறநகரை சுற்றி உள்ள பக்தர்கள் வருகை புரிவார்கள். தீபத் திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனாவுடன் மாடவீதி உலா நடைபெறும்.
இத்திருக்கோயிலுக்கு தெற்கு திசையில் (திருக்கோயில் பின்புறமாக) திருக்குளம் (சரவணபொய்கை) அமைந்துள்ளது
நன்கொடை
குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டம் 14.01.2006 முதல் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ரூ.1750/- செலவில் 50 நபர்களுக்கு பகல் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்திற்கு 18ஜி, 12ஏ உள்ளது. .
இருபாலருக்கும் (ஆண்கள் /பெண்கள்) தனித்தனியாக குனியல் அறை வசதி உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
சுவாமி தரிசனம் செய்ய மலைப்பாதை வழியாக பக்தர்கள் வருகை புரிவார். இத்திருக்கோயிலின் கிழக்கு வாசல் அருகே இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது இவ்விடத்தில் சுமார் 20 நான்கு சக்கர வாகனம் மற்றும் சுமார் 60 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். திருக்கோயிலுக்கு மலையடிவாரத்திலும் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது இவ்விடத்தில் சுமார் 40 நான்கு சக்கர வாகனம் மற்றும் சுமார் 100 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் கியூ வரிசையில் அங்கங்கே குடிநீர் வசதி (தண்ணீர் கேன்) அமைக்கப்பட்டுள்ளது.



