அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை

Century
9th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
அருணகிரிநாதர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பாதிரி
வல்லக்கோட்டை எனும் இவ்வுரில் எழுந்தருளிவுள்ள முருக்பெருமானுக்கு கோடையாண்டவர், கோடை நகர் குமரன் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
பகீரத மன்னருக்கு சாவு விமோர்சனம் நீங்க துார்வாச முனிவரின் வாக்கிற்கினங்க பாதிரி மரத்தின் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்துவழிபட அவருடைய இழந்த இராஜ்ஜியங்கள் திரும்ப கிடைத்து. பாதிரி மரத்தின் சிறப்புகள்: காயும் கனியும் இல்லாத பூக்கள் மட்டும் நிறைந்த செண்பக மலருக்கு இணையான வாசம் நிறைந்த பாதிரி மரம் இவ்வாலயத்தின் தலஸ்தலவிருச்சமாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் மூல மூர்த்தியான முருகப்பெருமான் பக்தர்களுக்கு பாதிரி மரமாக காட்சி அளித்தார் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். எனவே இத்திருக்கோயிலின் ஸ்தல விருச்சமாக ”பாதிரி மரம்”
மூலவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தமேதமாக அருள்பாலிப்பதால் தன்னை நாடிவரும் பக்தர்களின் திருமண தடையை நீக்குவதால் இத்திருத்தலம் திருமண தடை நீங்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
சத்ரு தோஷம் எனும் எதிரிகள் பயத்தை நீக்கும் இந்திரனால் உருவாக்கப்பட்ட வஜ்ஜீரதிர்த்தம் இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி
மூலவர் சுப்பிரமணியசுவாமி சன்னதி தென்மேற்கில் அமைந்துள்ளது
அருள்மிகு விஜயகணபதி சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ளது
திருக்கோயிலின் வடமேற்கில் அமைந்துள்ளது.
வடக்கு வாயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது
திருக்கோயில் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடது புறம் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் அன்னதானம் திட்டமானது 15.08.2002 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 100 நபர்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு விடுமுறை நாட்களில் வடை ,பயாசத்துடன் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அன்னதானதிட்டத்திற்க்கு இணையவழியாக நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பு : 1. 50 நபர்களுக்கு ரூ.1750/- 2.100 நபர்களுக்கு ரூ.3500/-ம் நன்கொடையாக பக்தர்களிடம் பெறப்படுகிறது. 3.இத்திருக்கோயில் அன்னதானம் திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் தொகைக்கு &rdquoவருமானவரி விலக்கு &rdquo அளிக்கப்படுகிறது.
நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
முதியவர்கள் மாற்று திறனாளிகள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் சக்கர நாற்காலி கொண்டு பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் தெற்கு இராஜகோபுரம் வலது புறத்தில் பிரத்தேகமாக ஐந்து குளியளறை ஆண்களுக்களுக்கும், ஐந்து குளியளறை பெண்களுக்கும் அன்னதானம் கூடம் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் வடக்கு வெளிப்புற வாயிலில் ஆண்களுக்கென ஐந்து கழிவறையும், பெண்களுக்கென ஐந்து கழிவைறையும் பயன்பாட்டில் உள்ளது
திருக்கோயில் வலது பிரகாரத்தில் அமைந்துள்ளது.





