அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில், பெரிய காஞ்சிபுரம்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
திருமங்கையாழ்வார்
Agama Tradition
வைகாணசம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
வைகுண்டபெருமாள் பல்லவ மன்னனுக்கு காட்சி தந்த கோயில்
அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயிலின் திருக்குளத்தின் பெயர் ஆயிரம் தீர்த்தம் என பெயர் பெற்றுள்ளது. இத்திருக்குளம் திருக்கோயில் வளாகத்தில் உட்புறமாக அமைந்துள்ளது.
அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயிலின் கட்டுமானம் பல்லவ காலத்தியவை கி பி 6ம் நூற்றாண்டு 7ம் நூற்றாண்டில் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டு, இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் முடிக்கப்பட்டதாக தொல் பொருள்துறை ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் வைகுண்டபெருமாள் சன்னதியின் அருகில் உள்ள உட்பிரகார சுவரில் பல்லவ வம்ச வரலாற்றை சுட்டி காட்டும் வகையில் இருஅடுக்குகள் போன்ற வரிசையில் ஐம்பது சுதை சிற்ப உருவங்கள் அடுக்கடுக்காக காணப்படுகின்றன. இந்த சிற்பங்கள் அக்காலத்தில் அரசர் பட்டாபிஷேகம் செய்ததையும், போர் காட்சிகள், துரோணாச்சாரியார் அஸ்வத்தாமன் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள தூண்களில் சிங்கத்தின் உருவம் செதுக்கப்பட்டு கம்பீரமாக காட்சி தருகின்றன. இவை அக்காலத்தில் சிற்பக்கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதையும் பிரதிபலிக்கின்றன.





