Home/Temples/TN/Kancheepuram/Arulmigu Vilakoliperumal Temple and Thoopul Vedantha Desikan Temple, Kancheepuram - 631502
Heritage Templehrce

Arulmigu Vilakoliperumal Temple and Thoopul Vedantha Desikan Temple, Kancheepuram - 631502

அருள்மிகு விளக்கொளி பெருமாள் (ம) தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்

🕉️ அருள்மிகு விளக்கொளி பெருமாள் Kancheepuram, TN
Arulmigu Vilakoliperumal Temple and Thoopul Vedantha Desikan Temple, Kancheepuram - 631502 — image 1
1 / 4
Also known as:தூப்புல் வேதாந்த தேசிகன்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பல்லவர்

Praised By

வைணவ ஆழ்வார்கள்

Poet Saint

திருமங்கையாழ்வார்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஏக தள விமானம்

Sacred Tree (Sthalavriksha)

மகிழம்பூ

Pooja Timings

காலசந்தி பூஜை (புஷ்ப அலங்காரம்)08:30 AM to 09:30 AM IST
சாயரட்சை பூஜை (புஷ்ப அலங்காரம்)05:30 PM to 07:30 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

படைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த யாகத்திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை, எனவே கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மா நடத்தும் யாகம் வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடும் என சாபமிட்டாள். பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணுவிடம் தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி(ஒளி) வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் விளக்கொளி பெருமாள் என்றும் தீபப் பிரகாசர் என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் திருத்தண்கா எனும் காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்று. சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி தூப்புல் எனவும் திருத்தண்கா (தண்-குளிர்ந்த,கா-சோலை,குளிர்ந்த சோலை என்பது பொருள்) எனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான வேதாந்த தேசிகன் இங்கு அவதாரம் செய்ததால் அவர் தூப்புல் வேதாந்த தேசிகன் என அழைக்கப்பட்டார். திருமங்கை ஆழ்வாரால் 2 பாகங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. வேதாந்த தேசிகன்- வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையில் இருக்கும் மணியை இவருக்கு குழந்தையாக பிறக்கும் படி அருள்பாலித்தார். இதனால்தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின்போது மணியடிப்பது இல்லை என்று கூறுகிறார்கள். 1268 ஆம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகன் 1369 வரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வடமொழியில் இருந்து மொழிபெயர்த்தார். அத்துடன் காஞ்சி வரதராஜ பெருமாள் மீது அடைக்கலப்பத்து என்ற பாமாலையை பாடினார். இவரது புதல்வர் வைணவ ஆச்சாரியார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என்று கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது.

Sub Shrines

மரகத வல்லி தாயார் சன்னதி

கிழக்கு நோக்கிய சன்னதி

தூப்புல் வேதாந்த தேசிகன் சன்னதி

வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது

அருள்மிகு விளக்கொளி பெருமாள்

அருள்மிகு விளக்கொளி பெருமாள்

கருடன் சன்னதி

கிழக்கு நோக்கிய கருடன் சன்னதி

ஆண்டாள் சன்னதி

கிழக்கு நோக்கிய சன்னதி

Temple Tank

ஸ்ரீ சரஸ்வதி புஷ்கரணி

ஸ்ரீ சரஸ்வதி புஷ்கரணி திருக்குளம் விளக்கொளி பெருமாள் கோயில் இடது புறத்தில் அமைந்துள்ளது

More Temples Nearby

View all →