Arulmigu Aadhikesava Perumal Temple, Thiruvattar, திருவட்டாா்

Century
11th நூற்றாண்டு
வைகாசி விசாகம் -மாம்பழம் பாயசம் ஆடி சங்கராந்தி -நல்ல மிளகு தேங்காய் கலந்து சமைக்கப்பட்ட பலகாரம் கூட்டு பொடிஅரிசி கஞ்சி ஆவணி அஷ்டமி -உண்ணியப்பம் கார்த்திகை -உச்ச பூஜை கஞ்சி சிவப்பு அல்லது வெள்ளை காய்ச்சி கிழங்கு தேங்காய் நல்ல மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டுக்கறி கஞ்சி மார்கழி மஞ்சள் பொங்கல் -பெருந்திரு அமிர்து பிற நெய்வேத்தியங்கள் எரிசேரி, ஓலன், புளிசேரி , உப்பேரி ,உப்பு மாங்காய், இடிச்சு பிழிஞ்ச பாயசம் ,உண்ணியப்பம் ,ஒற்றை வடை ,துலா பாயசம் ,சதுர் சதம் அரவணை, பால் பாயாசம், நெய் பாயாசம் ஆகியன.
இக்கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் உள்ள 224 தூண்களிலும் நாலம்பல மண்டபத் தூண்களிலும் ஸ்ரீபலி கல் மண்டப தூண்களிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. உதய மார்த்தாண்டம் மண்டபம், ஒற்றை கல் மண்டபம், சாஸ்தா கோவில்,நமஸ்காரம் மண்டபம், கருவறை தொங்கு கூரை ஆகியவற்ற அருமையான மரச் சிற்பங்கள் உள்ளன. ஆதிகேசவர் சுற்றுச்சுவர்களிலும் திருவம்பாடி கருவறை சுவர்களையும் தாவர சாய ஓவியங்கள் உள்ளன . இக்கோயில் வைஷ்ணவ கோயில் ஆயினும் சிவபுராண சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபத்திலும் ஆளுயர தாண்டவ சிர்ப்பம் உள்ளது. சிவன் காலினை வலது காது வரை தூக்கி நிற்கிறார். அவருக்கு பத்து கைகள். கைகளில் தமரு ,பரசு, அங்குசம் என உள்ளன. ஒரு கை கஜகஸ்தம் ஒரு கை அபயமுத்திரை. சிவனின் சூலம் காலின் கீழ் கிடக்கும் அரக்கனை குத்துவது போல் உள்ளது. இங்கே ஒரு தூணில் நந்தி தேவர் இருக்கிறார்.இவருக்கு 2 கைகள். நந்தியின் முகம் குரங்கு சாயலுடன் உள்ளது. இது போன்ற ஒரு சிலை கேரளம் கோட்டுக்கால் குகைக்கோவிலில் காணலாம். ஒரு முனிவர் நந்தியை குரங்காகும் படி சபித்தார். சாப விமோசனாக இராவணன் பிணத்தை பார்த்து வானர வீரரர்கள் சூழ்ந்து நின்று பரிகாசம் செய்யும்போது நந்தியின் முகம் பழைய முகம் ஆகும் என்றான். அந்த கதை இங்கு சிற்பமாக உள்ளது . இக்கோயி லில் பாகவதம் ,ராமாயணம், மகாபாரதம் ,தொடர்பாக நிறைய சிற்பங்கள் உள்ளன. இராமாயண சிற்பங்கள் அதிகம் தெற்கு பிரகார இடது புறக்கோடியில் கும்பகர்ண வதைகாட்சி சிற்பம் உள்ளது. இது கம்பனின் காவியத்தை சித்தரிப்பது . ஸ்ரீ பலிக்கல் மண்டபம் மேல் சுவரில் இராவணப் போர் காட்சிகள் உள்ளன. நாலம்பலத்தில் உள்ள மன்மதன் ரதி சிற்பங்கள் மீது அற்புதமானவை. சிற்பங்களின் மேல் சூரிய ஒளி படுவதால் சிற்பத்தின் அழகு இன்னும் ஜொலிக்கிறது.ரதி அன்னத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள். வலது கையில் தாமரை மொட்டு, மன்மதன் திரிபங்க வடிவமாய் நிற்கிறான் .





