Home/Temples/TN/Kanyakumari/Arulmigu Kumaraswamy Temple, Velimalai, Brahmapuram - 629175
Heritage Templehrce

Arulmigu Kumaraswamy Temple, Velimalai, Brahmapuram - 629175

Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில்

🕉️ குமாரசுவாமி Kanyakumari, TN
Arulmigu Kumaraswamy Temple, Velimalai, Brahmapuram - 629175 — image 1
1 / 4
Also known as:குமாரகோயில்

History & Architecture

Century

18th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சேரன்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஏக தள விமானம்

Pooja Timings

நிர்மாலய பூஜை04:30 AM to 05:00 AM IST
உஷக்கால பூஜை (உஷ பூஜை)05:30 AM to 06:00 AM IST
உச்சிக்கால பூஜை11:30 AM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை06:30 PM to 07:30 PM IST
அர்த்தஜாம பூஜை08:00 PM IST

Temple Speciality

பரிகாரம்

பலவகையான காவடி எடுத்தல், துலாபாரம், பிடிப்பணம் மாறுதல், குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி, பயிறு வகைகள், காய்கறி, பழங்கள் காணிக்கை, கஞ்சி புரையில் உருண்டு கொடுத்தல் , வெளிப்பிரகார அங்க பிரதட்சணம் செய்தல். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கஞ்சி தர்மம் முக்கியமானது. தீராத நோயை போக்க கஞ்சியை பிரசாதமாக உண்பது முக்கியம். கஞ்சி தர்மத்திற்கு கஞ்சி புரை உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் வள்ளி குகை போன்ற இடங்களிலும் கஞ்சி தர்மம் நடக்கிறது.இதற்குரிய கஞ்சி தொட்டிகளை இப்போதும் காணலாம்.

இதர வகை

வேளிமலை இயற்கை எழில் சூழ்ந்த மலை, கோயிலின் எதிரே பெரிய குளம் வேளிமலையில் பல குகைகள் உள்ளன. இங்கு சித்தர்களும், ஞானிகளும், வாழ்ந்திருக்கின்றனர். இங்கே கோனார் சமாதியில் இருப்பவர் ஒரு சித்தர். இங்கே அடங்கிய இன்னொரு சித்தர் சுடலையாண்டி சுவாமி. திருவனந்தபுரத்தில் ஆஸ்ரமம் அமைந்திருந்த அபயோந்த சுவாமிகள் குமாரகோயிலில் அருள் பெற்றார். இக்கோயிலைப் பற்றி சில சிற்றிலக்கியங்கள் வந்துள்ளன. த. வேலப்பன் எழுதிய வேலாயுதப்பெருமாள் பிள்ளைத்தமிழ் 1977ல் வந்தது . கவிராஜ பண்டித ராமசுப்ரமணிய நாவலரின் குமாரக்கோயில் கலம்பகம் 1966 இல் வந்தது.

Sub Shrines

முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார்

இக்கோயிலின் கருவறையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார் மூலவரான முருகன் 2.44 மீட்டர் உயரம் நின்று கோலம் இரண்டு கரங்கள் அபய வரத முத்திரை. குமரி மாவட்டத்தில் இது போன்ற கல் படிவம் எங்கும் இல்லை தலையில் மகுடம் கழுத்தில் மாலைகள் இடதுபுறம் வள்ளி 1.88 மீட்டர் உயரம். மூலவர் தென்கிழக்கு நோக்கியவர் மூலவரின் காதுகள் சற்று நீண்டு உள்ளன வெளி பிரகார மேற்கு வாயிலின் அருகே மயில் மண்டபத்தில் செம்பு தகடுகள் செய்யப்பட்ட கொடிமரம் உள்ளது உட்பிரகாரம் வலது புறம் கல்யாண விநாயகர், தம்பியின் திருமணத்திற்கு உதவியவர். இம் மண்டப வாசலில் துவார பாலகர்கள் இவர்களுக்கு இங்கே பெயர் வீரபாகு, வீரகந்தர்வமூர்த்தி. உட்பிரகாரத்தின் கிழக்கு மூலையில் இளைய நயினார் இவருடன் வள்ளி தெய்வானை சமேதராக இருக்கிறார். மேற்கு பிரகாரத்தில் காசி லிங்கம், இதை எடுத்து ஒரு சித்தரின் சமாதி, வடமேற்கு மூலையில் மனவிடை குமாரர். இவர் விழா காலங்கள் வலம் வருபவர். செப்பு படிமம் நவராத்திரி பூஜையின் போதும் மார்கழி திருவிழாவின் போது திருவனந்தபுரத்திலிருந்து எழுந்தருள்கின்றவர் இவர். வடக்கு பிரகாரத்தில் தன்முகமாக ஆறுமுக நயினார் சன்னதி உள்ளது வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் இருக்கிறார். இவரது கோவில் அருகே நடராஜர் சன்னதி உள்ளது . இங்கு அர்ச்சகர் எப்போதும் இருப்பதால் ஆறுமுகனாரை வழிபட எளிது.வேங்கை மரத்திற்கு தனி கோயில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் வேங்கை மரமே. கிழக்கு பிரகாரத்தில் மகாதேவர் கிழக்கு நோக்கியும் சிவகாமி தெற்கு நோக்கியின் வலதுபுறம் சண்டிகேஸ்வரும் இருக்கின்றனர். மகா தேவரின் எதிரே நந்தியும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் ஸ்தம்பமும் உள்ளன. இக்கோவிலில் தக்ஷனுக்கு தனி கோவில் உள்ளது. பக்தர்கள் ஆட்டுத்தலையுடன் கூடிய தட்சனை முதலில் வணங்கிவிட்டு கிழக்கு வாசல் வழி கோயிலுக்கு செல்வார்கள். வழிபாடு முடிந்து மேற்கு வாசலுக்கு வரும்போது கைகளால் கண்களை மறைத்த வண்ணம் தட்சன் வாசலை கடந்து செல்வார்கள். கோயிலிலிருந்து வெளியேறும் போது தக்ஷனை ஐஸ்வர்யம் போய்விடும் என்பது நம்பிக்கை. கோயிலின் கிழக்கு நடையில் வெளிப்புற விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது முருகனுக்கு காவடி கட்டுவது முடி காணிக்கை செலுத்துவது ஆகியன இந்த கோவிலின் முன் மண்டபத்தில் தான் நடக்கிறது.

More Temples Nearby

View all →