Arulmigu Nagaraja Temple, Nagercoil

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பாண்டியன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
ஓடவள்ளி
ஆயில்ய நட்சத்திரத்தில் தோஷம் நீங்க நேர்ச்சை செய்வது இக்கோயிலின் மரபு. மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன் இராமாயண காலத்தின் இலட்சுமனாக அவதாரம் செய்தார். இலட்சுமணன் நட்சத்திரம் ஆயில்யம். ஆதிசேஷனுக்குரிய பூஜை இலட்சுமணனுக்கு பொருந்தும். இராகு கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். காலை 10.00 மணிக்கு பூஜையில் பால்பாயச நேர்ச்சையும் உண்டு.
இக்கோயில் விழாக்களில் தை மாதம் 10 நாள் விழா. ஆவணி மாத ஞாயிற்றுகிழமைகள் விழா கார்த்திகை விழா ஐப்பசி மாத சூரம்பாடு விழா ஆகியன குறிப்பிட தகுந்தன. ஞாயிற்றுகிழமை பூஜை 1516 ஆம் ஆண்டிலிருந்தே நடக்கிறது என்பதற்குக் கல்வெட்டு சான்று உண்டு. ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு விழா நடக்கும் . இந்த நாட்களில் உப்பு நல்லமிளகு போன்றவையும் கை கால் போன்ற உடலின் மரவடிவங்களையும் நேர்ச்சையாக செலுத்துவர். நாகருக்கும் பாலூற்றும் வழக்கம் பெருகி வருகிறது. தை மாதத் திருவிழா அனந்தகிருஷ்ணனுக்கு நடக்கிறது. இந்த விழாவின் தொடக்க நாளை கேரள மேக்காட்டு நம்பூதிரிகள் உறுதிப்படுத்துகின்றனர். முன்றாம் நாள் விழாவின் இடதுபுறமும் கொம்மண்டையம்மன் கோயிலில் இருந்து வாகனம் வரும். இது நாகராஜா கோயிலுக்கு வருவதில்லை. வடசேரி கொம்மண்டை அம்மன் நாகராஜனின் சகோதரி என்ற கதையே இச்சடங்குகளுக்கு காரணமாக கொள்ளப்படுகிறது. 8 ஆம் நாள் விழாவின் வேட்டை நிகழ்ச்சி. 9 ஆம் நாள் தேர் திருவிழா. 10 ஆம் நாள் பழையாற்றின் ஆறாட்டு நிகழ்ச்சி.
இக்கோயிலுக்கென்று ஒரு சிறிய சுவாமித்தேர் உள்ளது. தெப்ப வைபகம் இக்கோயிலில் வழகத்தில் இல்லை. கோயிலின் முன்பகுதி 8 சென்ட் பரப்பில் உள்ள குளம் பக்தர்கள் குளிபதற்கு உரியது. அனந்தகிருஷ்ணன் ஆலயத்தின் மேல் விமானம் உண்டு . கதையால் ஆனது. ஏகதளம் வட்ட வடிவு நாகராஜா கருவறையின் முன் மண்டபத்தின் மேலும் விமானம் உண்டு . இவை பிற்பகால கட்டுமானம்.
இக்கோயில் 14.04.2003 முதல் அன்னதானம் தினமும் வழங்கப்படுகிறது.




