Home/Temples/TN/Kanyakumari/Arulmigu Thanumalayan Temple, Suchindrum - 629704
Heritage Templehrce

Arulmigu Thanumalayan Temple, Suchindrum - 629704

அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம்

🕉️ தாணுமாலயன் Kanyakumari, TN
Arulmigu Thanumalayan Temple, Suchindrum - 629704 — image 1
1 / 4

History & Architecture

Century

8th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சேரன், சோழன், நாயக்கர், பல்லவர், பாண்டியன், விஜயநகரம்

Praised By

இல்லை

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஆனந்த விமானம்

Sacred Tree (Sthalavriksha)

கொன்றை

Pooja Timings

நிர்மாலய பூஜை (-)04:30 AM to 05:00 AM IST
மிருஷ்டான பூஜை (-)06:00 AM to 07:30 AM IST
உஷக்கால பூஜை (-)07:00 AM to 07:30 AM IST
உச்சிக்கால பூஜை (-)11:30 AM to 11:45 AM IST
சாயரட்சை பூஜை (தீபாராதனை)06:30 PM to 07:30 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

விஷ்ணு,ஷிவா,பிரம்மா ஆகியோர் அனசூயாவை சோதிக்க வந்த இடம்

தல விருட்சம்

விஷ்ணு,ஷிவா,பிரம்மா ஆகியோர் அவதரித்த சுமார் 2000 வருடம் பழமை வாய்ந்த கொன்றை மரம் இப்பொழுதும் இத்திருத்தலத்தில் காண முடியும்.

இதர வகை

இத்திருக்கோயிலில் ஆதி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.வருடாவருடம் ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்

Sub Shrines

தாணுமாலயன்

தாணுமாலயன்

தாணுமாலய சுவாமி

தாணுமாலய சுவாமி சந்நிதி

ஸ்ரீ ராமர்

இந்த உப சந்நிதியானது மேற்கு மற்றும் வடக்கு பிரகாரங்கள் இணையும் இடத்தில அமைக்கப்பெற்றுள்ளதோடு வடக்கு பிரகாரத்தின் மறுமூலையில் உள்ள 18 அடி ஆஞ்சநேயர் சிலையை நோக்கும் முகமாக கட்டப்பட்டுள்ளது.

நீலகண்ட விநாயகர்

இந்த உப சந்நிதியானது சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ளது.

கங்காளநாதர்

இந்த உப சந்நிதியானது சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலசுவாமி திருக்கோயிலின் கிழக்கு பிரகாரத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த உப சந்நிதியின் முன்புறம் பஞ்ச நந்திகளில் ஒன்று அமையப்பெற்றுள்ளது.

Temple Tank

தெப்பக்குளம்

அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது. நான்கு ஏக்கர் பரப்புடையது. (450 அடி x 380 அடி x 15 அடி ). இதன் நடுவே அமைக்கப்பட்டுள்ள தெப்ப மண்டபமானது 13 தூண்களும் கோபுரமும் உடையது. இந்த குளத்தை முதலில் தோண்டி படிகள் கட்டியவர் வீரமார்த்தாண்ட வர்மா குலசேகர பெருமாள். திருக்குளத்தின் படிக்கட்டு 1471 ல் கட்டப்பட்டது. தெப்ப மண்டபத்தை கட்டியவர் திருமலை நாயக்கரின் தம்பி செவ்வந்தி நாயக்கர். இம்மண்டபமானது 1622 -1651ஆம் ஆண்டிற்குள் கட்டப்பட்டிருக்கலாம்.

Wall Paintings

முன்னுதித்த நங்கை அம்மன்

முன்னுதித்த நங்கை அம்மன் சரஸ்வதி லக்ஷ்மி மற்றும் பார்வதி ஆகியோர்க்கு காட்சி கொடுத்த நிகழ்வு

அத்ரி மற்றும் அனுசுயா

த்ரி அனுசூயையிடம் தான் இல்லாத நேரத்தில் என்ன நடைபெற்றது என்று அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி.

கிருஷ்ணன் கோபிகைகளுடன்

கிருஷ்ணன் கோபிகைகளுடன் இருக்கும் சித்திரம் கோபுரத்தின் உள்ளே உள்ளது.

விபீஷணன் இராம பிரானை சரணடைதல்

விபீஷணன் இராம பிரானை சரணடைதல்

ராவண வதம்

இராமபிரான் ராவணவதம் புரிதல்

மகரிஷி விஸ்வாமித்திரரும் தசரதனும்

மகரிஷி விஸ்வாமித்திரர் மன்னன் தசரதனிடம் யாகத்தை அரக்கர்களிடமிருந்து காக்கும் பொருட்டு இராமனை தன்னுடன் அனுப்பக்கோரல்

கைகேயி வரம் கேட்டல்

தசரதன் அளித்த வாக்குறுதியின் படி கைகேயியானவள் கூனியின் உந்துதலின் மூலம் இரண்டு வரங்கள் கேட்டல்

ஸ்ரீராம பட்டாபிஷேகம்

ஸ்ரீராம பட்டாபிஷேகம்

Sculptures

கங்காளநாதர்

இச்சிற்பமானது சித்திரசபையின் வாயிலின் வலதுபுறம் அமையப்பெற்றுள்ளது. மற்ற இருபுறங்களிலும் சிவனின் திருவிளையாடல் சிற்பங்கள் உள்ளன.

வேணுகோபாலன்

இச்சிலையானது சித்திரசபை வாயிலின் இடது புறம் உள்ள கல்தூணின் முன்புறம் உள்ளது. இத்தூணின் பின்புறம் மணடப சுவற்றோடு பதிக்கப் பட்டுள்ளது. இத்தூணில்ன் மற்ற இருபுறங்களிலும் கிருஷ்ணனின் ராஸலீலைகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

Services

அன்னதானம்

அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலில் அன்னதான திட்டமானது 22-03-2006 அன்று துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது . நாள் ஒன்றிற்கு 150 பக்தர்கள் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுகிறார்கள்.ஒரு நாள் கட்டணமாக ரூபாய்.5250/- செலுத்தி பத்தர்கள் தாங்கள் விரும்பும் நன்நாளில் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.மேலும் பக்தர்கள் ஒரு வருட கட்டளையாக ரூபாய்.100000/- செலுத்தி வருடத்தில் தாங்கள் விரும்பும் நன்னாளில் இத்திட்டத்தில் பங்குபெறலாம்.இத்திட்டத்தில் பங்குபெறும் பக்தர்களுக்கு வருமானவரி துறையின் 80ஜீ சி எண்.464/74/-/2011-12 மூலம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

நன்கொடை

பக்தர்கள் தாங்கள் விருப்பப்படும் பொருட்கள் அல்லது பணத்தை நன்கொடையாக கோயிலில் அல்லது திருக்கோயில் இணையம் மற்றும் செயலி வழியாகவும் செலுத்தலாம்.

Facilities

கழிவறை வசதி

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக சுத்தமான இலவச கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது

சக்கர நாற்காலி

மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோவிலில் இரண்டு இடங்களில் சுத்திகரிக்க பட்ட குடிநீர் வசதி பக்தர்களுக்காக செய்து தர பட்டுள்ளது

துலாபாரம் வசதி

பிரார்த்தனை நிறைவேறியதன் பொருட்டு கோயிலில் துலாபாரம் நேர்ச்சை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →