Home/Temples/TN/Karur/Arulmigu Raththinakreeshwarar Temple, Ayyarmalai - 639120
Heritage Templehrce

Arulmigu Raththinakreeshwarar Temple, Ayyarmalai - 639120

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை

🕉️ இரத்தினகிரீஸ்வரர் Karur, TN
Arulmigu Raththinakreeshwarar Temple, Ayyarmalai - 639120 — image 1
1 / 7
Also known as:அய்யர்மலைஐவர்மலைசிவாயமலைதிருவாட்போக்கிமணிகிரிசொக்கர்மலைகாகம் பரவாமலை

History & Architecture

Century

11th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பிற்கால சோழர்கள்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Agama Tradition

வதுல (பரகித) ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

வட்டம் வடிவம்

Sacred Tree (Sthalavriksha)

வேம்பு

Pooja Timings

சாயரட்சை பூஜை (பொது)04:30 AM to 05:30 AM IST
காலசந்தி பூஜை (பொது)11:00 AM to 12:00 PM IST
உச்சிக்கால பூஜை (pothu)12:00 PM to 01:05 PM IST

Sub Shrines

சுவாமி சன்னதி

தினமும் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறும்

அம்பாள் சன்னதி

சுரும்பார் குழலி அம்பாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய அம்பாள் என்று பொருள்.அராளகேஸ்வரி அம்பாள் எனவும் பெயர் உண்டு

Temple Tank

அய்யர்மலை தெப்பக்குளம்

தலபுராணத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. மலையைச் சுற்றி எட்டுத் திசைகளில் எட்டுத் தீர்த்தங்களும், ஊர் நடுவே திருக்குளம் ஆக ஒன்பது தீர்த்தங்கள் உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை இந்திர தீர்த்தம், வாயு தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், அகத்திய தீர்த்தம், உரோமச தீர்த்தம், திருமால் தீர்த்தம், துர்க்கை தீர்த்தம் சிவாய தீர்த்தம் என்பன. தற்போதுள்ள திருக்குளம் சிவாய தீர்த்தம் என்றும் பஞ்சாட்சார தீர்த்தம் என்றும் கூறுவர்.

குளித்தலை தெப்பக்குளம்

வருடத்திற்கு ஒருமுறை குளித்தலை பரிசல் துறை ரோட்டில் உள்ள குளித்தலை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரம் அன்று சந்திரசேகரரும் சந்திரகேர அம்மனும் அய்யர்மலையிலிருந்து சீர்பாதம் தாங்கிகளால் தூக்கிச்சென்றே குளித்தலை தெப்பக்குளம் அடைந்து, ஒரு நாள் மட்டும் தெப்போற்சவம் நடத்தப்பட்டு அடுத்த நாள் காலை கிளம்பி அய்யர்மலையை அடைவது வழக்கமாக இருந்து வருகிறது.

Services

அன்னதானம்

தினமும் மதியம் 12.30. மணிக்கு திருக்கோயில் அடிவாரத்திலுள்ள அன்னதானகூடத்தில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ரூ.1750.மட்டும் அலுவலகத்தில் செலுத்தி தாங்களும் அன்னதானத்தில் பங்கெடுக்கலாம். பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காகவும், பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள் மற்றும் இதர நாட்களுக்காகவும் அன்னதானம் செய்யலாம்.தங்கள் செலுத்தும் பணத்திக்கு 80 வருமான வரி விளக்கு உண்டு.

Facilities

முடி காணிக்கை வசதி

திருக்கோயிலுக்கு அருகே தென்புறம் கருப்பண்ணசுவாமி சன்னதி முடிக்காணிக்கை மண்டபம் அருகில் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனியாக குளியலறை உள்ளது.

திருமணம் நடத்துதல்

திருக்கோயில் விதிமுறைகளுக்குட்பட்டு, இந்துக்களுக்கு மட்டும் திருமணம் நடைபெறும். திருமணச்சான்று பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், மணமகன் மற்றும் மணமகளுக்கு முதல் திருமணச்சான்று, மாற்று சான்றிதழ், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் (மணமகன் மற்றும் மணப்பெண் தனித்தனியே சான்றிதழ்கள்) திருமண பத்திரிக்கையில் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற திருமணப் பத்திரிக்கையுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 15 தினங்களுக்கு முன்பு விண்ணப்பம், திருக்கோயில் அலுலவகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

குளியல் அறை வசதி

ஒரு குளியலறை பயன்பாட்டிற்காக அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது

கழிவறை வசதி

மூன்று கழிப்பறைகள் பயன்பாட்டிற்காக அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

மலை அடிவாரத்தில் அலுவலகத்திலும், மலைக்கோயிலிலும் சுத்தமான ஆர்.ஓ. குடிநீர் பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →