Home/Temples/TN/Karur/Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120
Heritage Templehrce

Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120

அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், Sivayam, Sathiyamangalam

🕉️ சிவபுரீஸ்வரர் Karur, TN
Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120 — image 1
1 / 5
Also known as:சிவாயம் கோயில்சிவபுரீஸ்வரர் கோயில்

History & Architecture

Century

17th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பிற்கால சோழர்கள்

Praised By

இல்லை

Agama Tradition

வதுல (பரகித) ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

வட்டம் வடிவம்

Sacred Tree (Sthalavriksha)

இல்லை

Pooja Timings

காலசந்தி பூஜை (பொது)09:00 AM to 11:00 AM IST
சாயரட்சை பூஜை (பொது)06:00 PM to 07:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும். இத்திருக்கோயிலல் தூணில் வீற்றிருக்கும் கல்யாணசுந்தரருக்கு திருமணம் செய்து வைத்தால் திருமணம் நடப்பதாக தெரியவருகிறது. மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் எதுவானாலும் சிவபுரீஸ்வரரிடம் மனதுருகி பிரார்த்திக்கும்போது நடைபெறுவதாக நம்பப்படுகிறது.

Sub Shrines

பெரியநாயகி அம்பாள் சன்னதி

சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்பாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். முன் இரு கைகள் அபய வரதஹஸ்தத்துடனும், பின் இரு கைகள் பத்மம் தாங்கிய திருக்கரங்களுடன் ஆக மொத்தம் நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

கல்யாணசுந்தரர்

சிவபுரீஸ்வரர் சன்னதிக்கு முன்புறம் தூணில் கல்யாணசுந்தரர் அம்பாளுடன் கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். திருமண ஆகாமல் உள்ளவர்கள் கல்யாணசுந்தரருக்கு சிறப்பு பூஜை செய்து வேண்டிக்கொண்டால் திருமணம் நடப்பதாக ஐதீகம்.

சுப்ரமண்யர் சன்னதி

சிவபுரீஸ்வரர் சுவாமி சன்னதிக்கு நேர் பின்பகுதியில் வள்ளி தெய்வானை உடன் சுப்ரமண்யர் 12 திருக்கரங்களில் ஆயுதம் தாங்கி, 6 முகங்களுடன் மயில் மீது அமர்ந்து இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டவாறு முன் இரு கைகளில் அபய வரதஹஸ்தத்துடன் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறார்.

சோழேஸ்வரர் சன்னதி

இத்திருக்கோயில் வடமேற்கு பகுதியில், கிழக்கு நோக்கி சோழேஸ்வரர் லிங்க வடிவில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

சித்தி விநாயகர் சன்னதி

தென்மேற்கில் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் சித்தி விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ளார்.

தட்சிணாமூர்த்தி சன்னதி

இத்திருக்கோயில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி தெற்கு நோக்கி கல்லால மரத்தின் அடியில் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்துள்ளார்.

Services

அன்னதானம்

அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுடன் இணைந்த சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறியதை முன்னிட்டு நேர்த்திக்கடனாக இத்திருக்கோயிலில் அன்னதானம் செய்கின்றனர். மேலும் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இதர தினங்களுக்காக சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய ரூ.1250 மட்டும் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அலுவலத்தில் அலுவலக வேலை நேரத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களுக்கு அன்னதானம் செய்ய முன்கூட்டியே பணம் செலுத்தலாம்.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

இத்திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்கள் வசதிக்காக ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →