
Century
தெரியவில்லை
Sanctum Shape
தூங்கானை வடிவம்
மூலஸ்தானத்தில் ஜெனகை மாரியம்மன், சந்தனமாரியம்மன் என்ற ரேணுகாதேவி எனும் இரண்டு மூலவர்கள் அருள்பாலிப்பது இத்திருக்கோயில் சிறப்பம்சமாகும். இத்திருக்கோயிலில் ஜாதி மத பேதமின்றி அம்மைநோய் கண்டவர்களுக்கு அருள்மிகு ஜெனகை மாரியம்மனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வேப்பிலை கலந்த மஞ்சள் நீரே தீர்த்தமாக வழங்கப்படுவது திருக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.
பொது நன்கொடை அன்னதான நன்கொடை கட்டண சேவைகள்
பொது நன்கொடை அன்னதான நன்கொடை கட்டண சேவைகள்
தினசரி நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறுகிறது. தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1,750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.30,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
குடிநீர் வசதி (ஆர் - ஓ . வாட்டர் -)
உடை மாற்றும் அறை





