Home/Temples/TN/Madurai/Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107
Heritage Templehrce

Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107

அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர்

🕉️ காளமேகப் பெருமாள் Madurai, TN
Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107 — image 1
1 / 4
Also known as:சக்கரத்தாழ்வார்

History & Architecture

Century

9th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Praised By

வைணவ ஆழ்வார்கள்

Poet Saint

நம்மாழ்வார்

Agama Tradition

பாஞ்சராத்திரம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

சதுர விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வம்

Pooja Timings

விஸ்வரூப பூஜை (நித்திய சேவை)07:00 AM to 07:30 PM IST
பொங்கல் பூஜா (நித்திய சேவை)08:30 AM to 09:00 AM IST
சிறுகால சந்தி பூஜை (நித்திய சேவை)10:30 AM to 11:00 AM IST
உச்சிக்கால பூஜை (நித்திய சேவை)12:01 PM to 12:15 PM IST
திருவாராதனம் பூஜை04:00 PM to 05:00 PM IST
சாயரட்சை பூஜை (நித்திய சேவை)05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (நித்திய சேவை)08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.முன்புறம் சக்கரத்தாழ்வாராவும் பின்புறம் நரசிங்க பெருமாள் ஆகவும் திருவாழி ஆழ்வார் திருக்கோலத்தில் 48 தேவதைகள் சுற்றலும் இருக்க ஆறு வட்டங்களுக்குள் 154 மந்திர எழுத்துகள் பொறித்திருக்க 16 திருக்கரங்களிலிலும் 16 படைக்கலங்கள் ஏந்தி மூன்று கண்களுடன் திருமுடி தீ போல் ஒளிர்வது போல அருள்புரிய ஓடி வருவதைப்போல வேறு எங்கும் இல்லாத வகையி்ல் அருள்பாளிக்கிறார். பக்தர்களின் வேண்டுதல் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரும் வல்லமை பொருந்தியவர் ஆவார்.

Sub Shrines

சக்கரத்தாழ்வார் சன்னதி

கலியுக கண்கண்ட தெய்வமாக காட்சியளிக்கறார். நெருப்புடன் கூடிய தலை முடியினையும் , மூன்று கண்களுடனும், 16 கைகளிலும் 16 வகையான திவ்ய ஆயுதங்களோடும், பக்தர்களுக்கு இரட்சிக்க ஓடிவரும் சுழலும் திருப்பாதங்ளோடு 48 மந்திர தேவதைகள் சூழ, பின்புறம் நான்கு கரங்களிலிலும் நான்கு சக்கரங்களை ஏந்தி யோக நிலையில் அமர்ந்த நரசிம்மர் திருவுருவங்கள் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

ஆண்டாள் சன்னதி

திரு ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் திருவீதி உலா புறப்பாடு நடைபெறுவது சிறப்பு.

பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி

உறங்குவான் போல் பள்ளி கொள்வான் திருமோகூர். பள்ளி கொண்ட பாற்கடல் வண்ணனாக இங்கு காட்சி அளிக்கிறாா்.மேலும் தாயார்கள் இருவரும் பெருமாள் பள்ளி எழுந்தருள இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்யும் வண்ணம் இச்சன்னதி அமைக்ப்பட்டதால் பிரார்த்தனா சயனம் என்று அழைக்கப்படுகிறது.

ஆஞ்சநேயர் சன்னதி

ஆடி வீதி எனப்படும் இரண்டாம் திருச்சுற்றில் தெற்குப் பகுதியில் வடக்கு பார்த்து அமைந்துள்ளது.

மோகனவல்லி தாயார் சன்னதி

மோகனவல்லி தாயருக்கு பங்குனி மாதத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். தாயார் எந்த காலத்திலும் சந்நிதி படியை தாண்டியதில்லை என்பதால் இந்த அன்னையை படிதாண்டா பத்தனி என்று பக்தர்களால் பரவிப்போற்றுகிறார்கள்.

Temple Tank

திருப்பாற்கடல்

திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து ஒருதுளி இந்தத் தலத்தில் விழுந்தது என்றும், அந்ந இடத்தி்ல் தேவர்கள் ஒரு குளம் வெட்டினர் என்றும் அந்த குளத்தைத் திருப்பாற்கடல் (ஷீராப்தி தீர்த்தம்) என்றழைத்தனர்.

Sculptures

ரதி , மண்மதன் கற்சிற்பங்கள்

கருட மண்டபத்தில் தென்புறத்துாண் ஒன்றில் வடக்குநோக்கிய நிலையில் மன்மதனின் உருவம் காணப்படுகிறது. இடக்கரத்தி்ல் கரும்பு வில்லும் வலக்கரத்தில் மலர்கணையும் ஏந்தி நின்ற நிலையில் மன்மதன் காட்சியளிக்கிறார். இவ்வுருவத்தின் எதிரே வடக்கிலுள்ள துாணில் மன்மதனை நோக்கி அன்னப்பறவையில் அமர்ந்த நிலையில் இரதிதேவி காட்சியளிக்கின்றாள். தலையில் வலது புறமாக அலங்கார கொண்டையிட்டு கண்ணைக்கவரும் அழகுமிக்க உடற்கட்டுடன் வலக்கரத்தில் மலரை கணையாக ஏந்தி அன்னத்தின் மீது விளங்குகிறாள்.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

3 குழாய்கள் உள்ளது

More Temples Nearby

View all →