
Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
திருமங்கையாழ்வார்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
Sacred Tree (Sthalavriksha)
கதலி (வாழை மரம்)
இத்திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 47வதாக மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமாகும், இத்திருக்கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது, பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது, வைணவத்திற்கு இன்றியமையாதது நாலாயிர திவ்ய பிரபந்தம். பிரபந்தத்தின் மிக முக்கியமானது திருப்பல்லாண்டு, அப்பல்லாண்டு தொடங்கிய திருத்தலம் இக்கூடலழகர் திருக்கோயிலாகும், நவக்கிரக சன்னதி அமையப்பெற்ற வைணவ திருக்கோயிலாகும், மூன்று நிலைகளை (அமர்ந்த, நின்ற, கிடந்த) கொண்ட அஷ்டாங்க விமானம் அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.
ஹேமபுஷ்கரணி தெப்பக்குளம் திருக்கோயிலுக்குள் கொடிமர மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வருடந்தோரும் வைகாசி ப்ரம்மோற்சவம் மற்றும் மாசித் தெப்பத்திருவிழா காலங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருகோயிலுக்கு சொந்தமான பெருமாள் தெப்பக்குளம் மதுரை டவுண்ஹால் ரோட்டில் இத்திருக்கோயிலிலிருந்து 0.5 கிலோமீட்டர் தொலைவில் மிக அருகில் அமைந்துள்ளது. இத்தெப்பத்தில் வருடந்தோரும் மாசி மகத்தன்று தெப்பஉற்சவம் நடைபெற்று வருகிறது.
இத்திருத்தலத்தில் மூன்று நிலைகளாக அமையப்பெற்ற அஷ்டாங்க விமானத்தின் இரண்டாம் நிலை (சூர்யநாராயணர் சன்னதி) மற்றும் மூன்றாம் நிலையில் (சீராப்திநாதர் சன்னதி) மூலிகை சுவர் ஓவியங்கள் நான்கு சுவர்களிலும் தீட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் நிலையான சூர்யநாராயணர் சன்னதியில் அட்டதிக் பாலர்கள் (அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன்), சூர்யநாராயணர் ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அமர்ந்த திருக்கோலத்திலும், சிவ பெருமான், பரசுராமர், பிரம்மா, கின்னரர், சாமரம் வீசும் பெண், அரசர், சங்கு, கிருஷ்ணர், ஹனுமார், கருடன் மற்றும் சக்கரம் ஐந்து பஞ்சாயுதங்கள், (சங்கு, சக்கரம், கதை, வில்அம்பு, வாள்) பட்சிகள், சிவன், ஆஞ்சநேயர், கண்ணன், கன்னிகைகள் ஆகிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நிலையான சீராப்திநாதர் சன்னதியில் அட்டதிக் பாலர்கள் (அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன்), ஐந்து பஞ்சாயுதங்கள், (சங்கு, சக்கரம், கதை, வில்அம்பு, வாள்) பட்சிகள், சிவன், ஆஞ்சநேயர், கண்ணன், கன்னிகைகள் ஆகிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் கொடிமர மண்டபத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ள கல்தூண்களில் யாழி உருவ சிற்பங்களும், ஹேமபுஷ்கரணி நுழைவு வாயிலில் உள்ள கல்தூண்களில் வசவப்ப நாயக்கர் மற்றும் திம்மப்ப நாயக்கர் கற்சிற்பங்கள் உள்ளன.
இத்திருக்கோயில் சுவாமி அலங்காரம் செய்யும் வாகன மண்டபத்திற்கு அருகில் உள்ளது. சூர்ய பகவான் ரதத்தில் காட்சி அளிக்கும் வண்ணம் சூர்ய மண்டலத் தோற்றம் கற்சிற்ப வடிவில் கலைநயத்துடன் காணப்படுகிறது.
அருள்மிகு மதுரவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டபத்தில் கல்லிலாலான இசைத்தூண்கள் அமைந்துள்ளது.
அருள்மிகு மதுரவல்லித் தாயார் சன்னதி சொக்கட்டாண் மண்டபத்தில் உள்ள தூண்களில் அஷ்டலெட்சுமி, கிருஷ்ணன் பிறப்பு, கிருஷ்ணரை வாசுதேவர் எடுத்துச் செல்லுதல், கம்சன் எட்டாவது குழந்தையை வதம் செய்ய காளிய தேவியாக உருமாறி வானத்தை நோக்கி பறந்த காட்சி, பூதனை வதம், சகடாசுரன் வதம் ஆகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன.
இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கு நன்கொடையாக நாள் ஒன்றுக்கு ரூ.3,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும். பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் 200 நபர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை அன்னதானத்திற்கு நன்கொடையாக நாள் ஒன்றுக்கு ரூ.12,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும். நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி ) பெற இயலும்.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு, திருக்கோயிலின் முன்புறத்தில் உள்ள காலியிடத்தில் வாகன நிறுத்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் வகையிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வாகன வகை நிறுத்தக் கட்டணம் ரூபாயில் 1) இருசக்கர வாகனம் - ரூ.10/- 2) கார், வேன் - ரூ. 30/- 3) மினி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் - ரூ. 100/-
இத்திருக்கோயிலின் ராஜகோபுர நுழைவு வாயிலின் வடக்கு பகுதியில் இரண்டு சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மிக எளிதாக தரிசனம் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. சக்கர நாற்காலி இயக்கும் பணியாளர் பெயர் திரு.ரா.மாரிக்கண்ணன் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8667018791
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் நலன் கருதி, எதிர்த்திசை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கென திருக்கோயிலின் உள்ளே 2 இடங்களில் எதிர்த்திசை சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாயார் சன்னதி சொக்கட்டான் மண்டபத்திலும், ஆண்டாள் சன்னதி வளாகத்திலும் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது,





